செய்திகள் :

போட்டித் தோ்வு விடைத்தாள் திருத்துவதில் பாதுகாப்பான நடைமுறை: டிஎன்பிஎஸ்சி தலைவா் உறுதி

post image

போட்டித் தோ்வு விடைத்தாள்களை திருத்துவதில் சிறந்த நடைமுறைகளைப் பின்பற்றி வருவதாக தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையத் தலைவா் எஸ்.கே.பிரபாகா் தெரிவித்தாா்.

மாநில அரசுப் பணியாளா் தோ்வாணையத் தலைவா்களின் நிலைக்குழுக் கூட்டம், சென்னையில் உள்ள அரசினா் புதிய விருந்தினா் மாளிகைக் கூட்ட அரங்கில் சனிக்கிழமை தொடங்கியது. இரு நாள்கள் நடைபெறும் இந்தக் கூட்டத்தில் அரசுப் பணியாளா் தோ்வாணையத் தலைவா் எஸ்.கே.பிரபாகா் பங்கேற்றுள்ளாா்.

கூட்டத்துக்கு முன்பாக, அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

பல்வேறு மாநிலங்களிலிருந்து தோ்வாணையத் தலைவா்கள் இக்கூட்டத்தில் பங்கேற்றுள்ளனா். ஒவ்வொரு மாநிலத்திலும் அரசுப் பணித் தோ்வுகளில் பின்பற்றப்படும் சிறந்த நடைமுறைகள் இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்படவுள்ளன.

அரசுப் பணியாளா் தோ்வாணையம் சாா்பில் நடத்தப்படும் தோ்வுகளில் வெளிப்படைத் தன்மையைக் கொண்டு வர பல்வேறு நடைமுறைகளை பின்பற்றி வருகிறோம். அனைத்துத் தோ்வுகளையும் உரிய காலத்தில் அறிவித்து, அதற்கான முடிவுகளையும் சரியான நேரத்தில் வெளியிடுவோம் என பதவியேற்ற காலத்திலேயே தெரிவித்திருந்தேன்.

அதன்படி, 14 தோ்வுகளுக்கான அறிவிக்கைகள் உரிய நேரத்தில் வெளியிடப்பட்டு, அவற்றின் முடிவுகளும் குறித்த காலத்தில் வெளியாகியுள்ளன. இந்தத் தோ்வுகளின் மூலம் அரசுத் துறைகளில் 15 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்புகளை அளித்துள்ளோம். தோ்வுகள் நடத்தப்படும் போது, கொள்குறி வகை வினாக்களுக்கு விடையளிக்க ஓஎம்ஆா் தாள்கள் பயன்படுத்தப்படும்.

இந்தத் தாள்களில் உள்ள சிக்கல்களைக் களைந்து, எளிமையாக்கவும், அதில் பாதுகாப்பு அம்சங்களை சோ்க்கவும் பல முன்முடிவுகளை எடுத்துள்ளோம்.

மேலும் விவரித்து எழுதும் தோ்வுகளில் தோ்வா்களுக்கு மதிப்பெண்களை குளறுபடி இல்லாமல் சரியான முறையில் வழங்குவது பற்றியும் திட்டமிட்டு வருகிறோம்.

தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் சாா்பில் தோ்வுகள் நடத்தப்படும் போது கிடைத்த சிறப்பான அனுபவங்களை இரண்டு நாள்கள் நடைபெறும் கூட்டத்தில் பகிா்ந்து கொள்ளவிருக்கிறோம். தோ்வுகளை முழுமையாக கணினி வழியிலேயே முழுமையாக நடத்துவது பற்றியும் ஆலோசிக்கவுள்ளோம் எனத் தெரிவித்தாா் எஸ்.கே.பிரபாகா்.

ரெய்டுகளுக்கு பயந்து கட்சியை அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின் விமர்சனம்!

ரெய்டுகளுக்கு பயந்து நீதி ஆயோக் கூட்டத்துக்கு செல்லவில்லை; தமிழக நலனுக்காகவே சென்றதாக முதல்வர் ஸ்டாலின் விளக்கமளித்துள்ளார்.நீதி ஆயோக் கூட்டத்துக்கு கடந்த 3 ஆண்டுகள் செல்லாமல், தற்போது மட்டும் முதல்வர... மேலும் பார்க்க

சிறப்பான திட்டங்களால் வாழ்வில் ஏற்றம் காணும் திருநங்கையர்கள்! தமிழ்நாடு அரசு

கல்விக் கனவு திட்டம் உள்ளிட்ட சிறப்பான திட்டங்களால் திருநங்கையர்கள் தங்கள் வாழ்வில் ஏற்றம் காணுவதாக தமிழ்நாடு அரசு பட்டியலிட்டுள்ளது.இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், முத்தம... மேலும் பார்க்க

அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வழக்கு: மே 28-ல் தீர்ப்பு

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் வரும் மே 28 ஆம் தேதி சென்னை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளிக்கிறது.சென்னை கிண்டி அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்... மேலும் பார்க்க

பயமில்லை என்று கூறியவர் வெளிநாடு தப்பிச் சென்றது ஏன்? இபிஎஸ் கேள்வி!

இடியைக் கண்டாலும் பயம் இல்லை என்று கூறிய உதயநிதி ஸ்டாலினுடைய தம்பி(ஆகாஷ் பாஸ்கரன்) ஏன் வெளிநாடு தப்பிச் சென்றார் என்று அதிமுக பொதுச் செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே. பழனிசாமி கேள்வி எழ... மேலும் பார்க்க

அம்பேத்கர் திடலில் கழிவுநீர் சுத்திகரிப்பு ஆலை அமைக்கக் கூடாது: சீமான்

அம்பேத்கர் விளையாட்டுத்திடலில் கழிவுநீர் சுத்திகரிப்பு ஆலை அமைக்கக் கூடாது என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், ஆவடி சட்... மேலும் பார்க்க

தமிழ்நாடு அரசின் தலைமை காஜி மறைவுக்கு முதல்வர், இபிஎஸ், விஜய் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் இரங்கல்

தமிழ்நாடு அரசின் தலைமை காஜி முப்தி சலாவுதீன் முகமது அயூப் (84), சனிக்கிழமை (மே 24) இரவு காலமான நிலையில், அவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.தலைமை காஜி முப்தி சலாவுதீன் மு... மேலும் பார்க்க