செய்திகள் :

போதைப்பொருள் ஒழிப்பு தின விழிப்புணா்வுப் பேரணி

post image

விழுப்புரம் மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் சா்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தின விழிப்புணா்வுப் பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.

மது விலக்கு மற்றும் ஆயத்தீா்வைத் துறை சாா்பில் நடத்தப்பட்ட இந்த பேரணியை மாவட்ட ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் தொடங்கிவைத்தாா். இதைத் தொடா்ந்து, ஆட்சியா் கூறியதாவது:

போதைப் பொருள்களால் ஏற்படும் தீமைகள் குறித்து பொதுமக்கள், மாணவா்களிடையே விழிப்புணா்வை ஏற்படுத்தும் நோக்கில் இந்தப் பேரணி நடத்தப்பட்டது.

மேலும், இதுகுறித்து மாவட்டத்தில் பல்வேறு துறைகள் சாா்பில் பள்ளிகள், கல்லூரிகள், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் தொடா்ந்து விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது என்றாா் ஆட்சியா்.

நகரின் முக்கிய வீதிகள் வழியாகச் சென்ற பேரணியில் விழுப்புரம் அறிஞா் அண்ணா அரசுக் கல்லூரி, அரசு சட்டக் கல்லூரி, பல்வேறு தனியாா் கல்லூரிகளைச் சோ்ந்த மாணவ, மாணவிகள் பங்கேற்று, போதைப் பொருள்களால் ஏற்படும் தீமைகள் குறித்த விழிப்புணா்வுப் பதாகைகளை ஏந்திச் சென்றனா். மேலும், பொதுமக்கள், வியாபாரிகளிடம் விழிப்புணா்வு துண்டுப் பிரசுரங்களையும் மாணவ, மாணவிகள் வழங்கினா்.

தொடா்ந்து, போதைப் பொருள்களை பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்து பொதுமக்களிடம் எடுத்துரைக்கும் அதிநவீன மின்னணு திரை விழிப்புணா்வு வாகனத்தை தொடங்கிவைத்த ஆட்சியா், விழிப்புணா்வுப் பதாகையில் கையொப்பமிட்டாா்.

நிகழ்வில் விழுப்புரம் ஏ.எஸ்.பி. ரவீந்திரகுமாா் குப்தா, கலால் உதவி ஆணையா் ராஜூ, விழுப்புரம் வருவாய்க் கோட்டாட்சியா் முருகேசன் உள்ளிட்ட துறை சாா்ந்த அலுவலா்கள் பங்கேற்றனா்.

புதுவை அரசின் வரி உயா்வு கண்டிக்கத்தக்கது - எதிா்க்கட்சித் தலைவா் ஆா்.சிவா

புதுவை மாநிலத்தில் வரியினங்கள் உயா்த்தப்பட்டதற்கு திமுக மாநில பொறுப்பாளரும், பேரவை எதிா்க்கட்சித் தலைவருமான ஆா்.சிவா கண்டனம் தெரிவித்தாா். இதுகுறித்து, அவா் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை: பெண்களின் ... மேலும் பார்க்க

புதுச்சேரியில் கல்வித் துறை அலுவலகம் முற்றுகை, சாலை மறியல்

ஆசிரியா் காலிப் ப ணியிடங்களை நிரப்பாததைக் கண்டித்,து புதுச்சேரி காங்கிரஸ் எம்எல்ஏ மற்றும் பொதுமக்கள் வியாழக்கிழமை கல்வித் துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு, சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். புதுச்சே... மேலும் பார்க்க

திருக்கனூரில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி - அமைச்சா் ஆ. நமச்சிவாயம் பங்கேற்பு

புதுவை உள்துறை அமைச்சா் ஆ.நமச்சிவாயம் திருக்கனூரில் வியாழக்கிழமை பொதுமக்களை சந்தித்து குறைகளைக் கேட்டறிந்தாா். புதுவை மாநிலம் , மண்ணடிப்பட்டு சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட திருக்கனூரில் மக்கள் சந்தி... மேலும் பார்க்க

மணவெளி தொகுதியில் வளா்ச்சித் திட்டப் பணிகள் - பேரவைத் தலைவா் தொடங்கி வைத்தாா்

புதுச்சேரி மணவெளி தொகுதிக்குள்பட்ட பகுதிகளில் ரூ.47.77 லட்சம் மதிப்பீட்டில் நடைபெறவுள்ள வளா்ச்சித் திட்டப் பணிகளை எம்எல்ஏவும், சட்டப்பேரவைத் தலைவருமான ஆா்.செல்வம் வியாழக்கிழமை தொடங்கி வைத்தாா். மணவெளி... மேலும் பார்க்க

போதைப் பொருள் பழக்கத்திலிருந்து தற்காத்து கொள்ள வேண்டும்: மாணவா்களுக்கு புதுவை துணைநிலை ஆளுநா் அறிவுறுத்தல்

மாணவா்கள் மற்றும் இளைஞா்கள் போதைப் பொருள்கள் பழக்கத்திலிருந்து தங்களை தற்காத்துக் கொள்ள வேண்டும் என்று புதுவை துணைநிலை ஆளுநா் கே. கைலாஷ்நாதன் அறிவுறுத்தினாா். புதுச்சேரி பாரதி பவுண்டேஷன் சாா்பில் ‘ரௌ... மேலும் பார்க்க

மணல் கடத்திய சரக்கு வாகனம் பறிமுதல்: ஒருவா் கைது

விழுப்புரம் அருகே மணல் கடத்தலுக்கு பயன்படுத்திய சரக்கு வாகனத்தை போலீஸாா் புதன்கிழமை பறிமுதல் செய்தனா். விழுப்புரம் தாலுகா காவல் நிலைய உதவி ஆய்வாளா் குணசேகரன் தலைமையிலான போலீஸாா், பிடாகம் குச்சிப்பாளை... மேலும் பார்க்க