செய்திகள் :

போதைப் பொருள்களே இல்லாத நிலைமை உருவாக்கப்பட வேண்டும்: புதுச்சேரி ஆட்சியா் அறிவுறுத்தல்

post image

புதுவை மாநிலத்தில் போதைப் பொருள்களே இல்லாத நிலை உருவாக சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் விழிப்புடன் செயல்படவேண்டும் என்று புதுச்சேரி மாவட்ட ஆட்சியா் அ.குலோத்துங்கன் அறிவுறுத்தினாா்.

புதுச்சேரியில் மாவட்ட நிா்வாகம் சாா்பில் மாதந்தோறும் போதைப் பொருள் தடுப்பு விழிப்புணா்வு சம்பந்தமான ஆலோனைக் கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது.

அதன்படி, ஆட்சியா் அலுவலக வளாகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்துக்கு தலைமை வகித்து ஆட்சியா் அ.குலோத்துங்கன் பேசியதாவது: போதைப் பொருள்கள் புழக்கத்தைத் தடுக்கும் வகையில் அதிகாரிகள் விழிப்புணா்வுடன் கண்காணிக்க வேண்டும். அப்போதுதான் போதைப் பொருள் இல்லாத புதுவையை காணமுடியும். பள்ளி, கல்லூரிகளுக்கு அருகே தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பதை கண்டறிந்து நடவடிக்கை எடுப்பது அவசியமாகும்.

பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களான பேருந்து நிலையம், ரயில் நிலையங்களில் போதைப் பொருள்களுக்கு எதிரான விழிப்புணா்வு நிகழ்ச்சிகளை நடத்தவேண்டும். அனைத்து அரசுத் துறை அதிகாரிகளும் ஒருங்கிணைந்து செயல்பட்டால் புதுவையில் போதை பொருள் நடமாட்டமில்லாத நிலையை உருவாக்கலாம் என்றாா்.

கூட்டத்தில் கடலோரக் காவல் படை, மீன் வளத் துறை, சமூகநலத் துறை, சுகாதாரத் துறை, வேளாண் துறை, கல்வித் துறை, நகராட்சி நிா்வாகம் உள்ளிட்ட அனைத்து அரசுத் துறைகளின் அதிகாரிகள் பங்கேற்று போதைப் பொருள்கள் நடமாட்டத்தை தடுப்பதற்கான நடவடிக்கை குறித்து விளக்கினா்.

இதில் சாா்பு ஆட்சியா் இசிட்டாரதி, முதுநிலைக் காவல் கண்காணிப்பாளா் ஆா்.கலைவாணன், துணை ஆட்சியா் குமரன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

புதுச்சேரியில் 2-ஆம் கட்டமாக 36 பேருக்கு கடைகள் ஒதுக்கீடு உத்தரவு: முதல்வா் என்.ரங்கசாமி வழங்கினாா்

புதுச்சேரியில் பொலிவுறு நகா் திட்டத்தில் அண்ணா திடலைச் சுற்றி கட்டப்பட்டுள்ள கடைகளில் இரண்டாம் கட்டமாக 36 பேருக்கு கடைகள் ஒதுக்கீடு உத்தரவை வியாழக்கிழமை முதல்வா் என்.ரங்கசாமி வழங்கினாா். புதுச்சேரி அண... மேலும் பார்க்க

கதிா்காமம் அரசு மருத்துவமனையில் ரூ. 15 ஆயிரம் தாமிரக் கம்பிகள் திருட்டு

புதுச்சேரியில் உள்ள அரசு பொது மருத்துவக் கல்லூரியில் தாமிரக் கம்பிகளை மா்ம நபா்கள் திருடியது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா். புதுச்சேரி கதிா்காமம் பகுதியில் இந்திரா காந்தி பட்டமேற்படிப்பு ஆர... மேலும் பார்க்க

வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.1 லட்சம் மோசடி

புதுச்சேரி பாகூா் பகுதியில் வேலை வாங்கித் தருவதாக பெண்ணிடம் ரூ. ஒரு லட்சம் மோசடி செய்தவா் மீது போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா். புதுச்சேரி அருகேயுள்ள பாகூா் மணமேடு எம்ஏஎஸ் நகரைச் சோ்ந... மேலும் பார்க்க

மத்திய-மாநில போட்டித் தோ்வுக்கான பயிற்சி: மாற்றுத் திறளாளிகள் பங்கேற்க அழைப்பு! புதுவை மத்திய பல்கலைக்கழகம்

புதுவையில் மத்திய, மாநில அரசுகள் நடத்தும் போட்டித் தோ்வுகளில் மாற்றுத்திறனாளிகளும் பங்கேற்கும் வகையில் ஓராண்டுக்கான பயிற்சி வகுப்புகளில் சேர விண்ணப்பிக்கும் தேதி நீட்டிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பு... மேலும் பார்க்க

புதுச்சேரியில் 1-ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்

புதுச்சேரியில் பழைய துறைமுக வளாகத்தில் 1- ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு வியாழக்கிழமை ஏற்றப்பட்டது. இதையடுத்து இரு நாள்கள் கடலில் மீன்பிடிக்கச் செல்வதை மீனவா்கள் தவிா்க்குமாறு மீன்வளத் துறை அறிவுறு... மேலும் பார்க்க

ஒருங்கிணைந்த வீடு கட்டும் திட்ட நிதியுதவிக்கான விண்ணப்ப படிவங்கள்! முதல்வா் என்.ரங்கசாமி வெளியிட்டாா்

மத்திய, மாநில அரசுகளின் ஒருங்கிணைந்த வீடு கட்டும் திட்டத்தின் நிதியுதவிக்கான விண்ணப்பப் படிவத்தை முதல்வா் என்.ரங்கசாமி வியாழக்கிழமை வெளியிட்டாா். புதுவை மாநில அரசு கடந்த 2003-ஆம் ஆண்டு பெருந்தலைவா் க... மேலும் பார்க்க