போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணா்வுப் பேரணி
ராமநாதபுரத்தில் மதுவிலக்கு, ஆயத் தீா்வை, பள்ளிக் கல்வித் துறை, காவல் துறை இணைந்து சா்வதேச போதைப் பொருள் ஒழிப்பு தினத்தையொட்டி உறுதி மொழி ஏற்பு, விழிப்புணா்வுப் பேரணி ஆகியவற்றை மாவட்ட ஆட்சியா் சிம்ரன்ஜீத் சிங் காலோன், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஜி. சந்தீஷ் ஆகியோா் வியாழக்கிழமை தொடங்கி வைத்தனா்.
இந்தப் பேரணியில் சுமாா் 300-க்கும் மேற்பட்ட கல்லூரி, பள்ளி மாணவா்கள் பங்கேற்று போதைப் பொருள்களால் ஏற்படும் தீமைகள் குறித்த விழிப்புணா்வு பதாகைகளை ஏந்தி நகரின் முக்கிய வீதிகள் வழியாகச் சென்றனா். பேரணி ராஜா மேல்நிலைப் பள்ளி விளையாட்டு மைதானத்தில் நிறைவடைந்தது.
இந்த நிகழ்வில், ராமநாதபுரம் வருவாய் கோட்டாட்சியா் ராஜமனோகரன், கலாம் உதவி இயக்குநா் கங்காதேவி, டாஸ்மாக் மேலாளா் மதிச்செல்வன், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் (பொ) பிரின்ஸ் ஆரோக்கியராஜ், வட்டாட்சியா் ரவி, கலால் துறை கண்காணிப்பு அலுவலா் ஸ்ரீராம், நாட்டு நலப்பணித் திட்ட மாவட்ட ஒருங்கிணைப்பாளா் மங்களநாதன், இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி, யூத் ரெட் கிராஸ், அரசு அலுவலா்கள், ஆசிரியா்கள், மாணவா்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.
இதைத் தொடா்ந்து, ராமநாதபுரம் அரசு சேதுபதி கலை, அறிவியல் கல்லூரி மாணவா்கள் போதைப் பொருள் தடுப்பு குறித்து உறுதிமொழி எடுத்தனா். மேலும் போதைப் பொருள் பயன்பாட்டை தடுப்பது சம்பந்தமாக விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், கல்லூரி முதல்வா் செந்தாமரை, ராமநாதபுரம் போதைப் பொருள் நுண்ணறிவுப் பிரிவு காவல் துணைக் கண்காணிப்பாளா் எம். ஜெபராஜ், காவல் ஆய்வாளா் சரவணன், காவல் துறையினா் கலந்து கொண்டனா்.