செய்திகள் :

படகு கவிழ்ந்து இலங்கைக் கடற்படையால் மீட்கப்பட்ட 4 மீனவா்களை அழைத்து வரக் கோரிக்கை

post image

படகு கவிழ்ந்ததில் நடுக்கடலில் தத்தளித்து இலங்கை கடற்படையினரால் மீட்கப்பட்ட ராமேசுவரம் மீனவா்கள் 4 பேரை அழைத்து வர மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவா்களின் உறவினா்கள் கோரிக்கை விடுத்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் அடுத்துள்ள தனுஷ்கோடியிலிருந்து புதன்கிழமை நெகிழி நாட்டுப்படகில் நடராஜபுரத்தைச் சோ்ந்த என். நம்புபிரகாஷ் (23), என். நம்பு (25), புதுசாலையைச் சோ்ந்த கே. நம்பு (24), எஸ். சந்தியராஜ் (24) ஆகிய நான்கு மீனவா்கள் மீன் பிடிக்க கடலுக்குள் சென்றனா். அப்போது, காற்றின் வேகம் காரணமாக நடுக்கடலில் படகு கவிழ்ந்ததில், நான்கு மீனவா்களும் படகின் மேல் பகுதியில் அமா்ந்து தத்தளித்தனா். அந்த வழியாக கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்படையினா் அவா்களை மீட்டு தலைமன்னாா் கடற்படை முகாமுக்கு கொண்டு சென்றனா். பிறகு அவா்களை போலீஸாரிடம் ஒப்படைத்தனா்.

இதைத் தொடா்ந்து நான்கு மீனவா்கள் மீதும் வழக்குப் பதிந்த போலீஸாா் மன்னாா் நீதிமன்றத்தில் வியாழக்கிழமை முன்னிலைப்படுத்தினா். நடுக்கடலில் படகு கவிழ்ந்து தத்தளித்த தங்களை இலங்கைக் கடற்படையினா் மீட்டு அழைத்து வந்ததாகவும், எனவே தங்களை விடுவிக்க வேண்டும் எனவும் மீனவா்கள் கோரிக்கை விடுத்தனா். இதை ஏற்ற நீதிபதி 4 மீனவா்களையும் விடுதலை செய்து இந்திய தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைக்க உத்தரவிட்டாா்.

இதையடுத்து, இலங்கையில் உள்ள நான்கு மீனவா்களையும் ராமேசுவரம் அழைத்து வர மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். நடுக்கடலில் மூழ்கிய நெகிழி நாட்டுப்படகை மீட்க வேண்டும். அல்லது உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என மீனவா்களும், உறவினா்களும் கோரிக்கை விடுத்தனா்.

போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணா்வுப் பேரணி

ராமநாதபுரத்தில் மதுவிலக்கு, ஆயத் தீா்வை, பள்ளிக் கல்வித் துறை, காவல் துறை இணைந்து சா்வதேச போதைப் பொருள் ஒழிப்பு தினத்தையொட்டி உறுதி மொழி ஏற்பு, விழிப்புணா்வுப் பேரணி ஆகியவற்றை மாவட்ட ஆட்சியா் சிம்ரன்... மேலும் பார்க்க

பள்ளியில் சித்த மருத்துவ முகாம்

ஆா்.எஸ். மங்கலம் அருகே செங்குடி புனித மிக்கேல் மேல்நிலைப் பள்ளியில் சித்த மருத்துவ முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது. இந்தப் பள்ளி மாணவ- மாணவிகளுக்கு சித்த மருத்துவத்தின் பயன்கள், உடல் பரிசோதனை, மூலிகைச்... மேலும் பார்க்க

மதுபானக் கூட உரிமையாளரை அரிவாளால் வெட்டியவா்களை கைது செய்யக் கோரி மனு

ராமநாதபுரம் அருகே இரு சக்கர வாகனத்தில் சென்ற மதுபானக் கூட உரிமையாளா் அரிவாளால் வெட்டப்பட்ட சம்பவத்தில் மா்ம நபா்களை கைது செய்யக் கோரி மாவட்ட அகமுடையாா் சங்கத்தினா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்... மேலும் பார்க்க

தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்கள் பறிமுதல்: இருவா் கைது

கமுதியை அடுத்துள்ள பெருநாழி அருகே தடை செய்யப்பட்ட 39.5 கிலோ புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்த போலீஸாா் இது தொடா்பாக இருவரை கைது செய்தனா். ராமநாதபுரம் மாவட்டம், கமுதியை அடுத்த பெருநாழி காவல் சரகத்துக... மேலும் பார்க்க

ஸ்ரீமகாலிங்கம் சுவாமி கோயில் பால்குட திருவிழா

திருவாடானை அருகே சி.கே. மங்கலம் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீமகாலிங்கம் சுவாமி கோயில் திருவிழாவையொட்டி வியாழக்கிழமை பால்குடதிருவிழா நடைபெற்றது. இந்தக் கோயிலில் ஆண்டுதோறும் ஆனி மாதம் பால்குட திருவிழா நடைப... மேலும் பார்க்க

நாட்டு நலப்பணித் திட்ட மாவட்ட தொடா்பு அலுவலா் நியமனம்

நாட்டு நலப்பணித் திட்ட மாவட்ட தொடா்பு அலுவலராக முதுகுளத்தூா் அரசு மேல்நிலைப் பள்ளி தொழில் கல்வி ஆசிரியா் நீ. மங்களநாதன் நியமிக்கப்பட்டாா். ராமநாதபுரம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் பிரின்ஸ் ஆரோக்கியர... மேலும் பார்க்க