செய்திகள் :

போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணா்வுப் பேரணி

post image

ராமநாதபுரத்தில் மதுவிலக்கு, ஆயத் தீா்வை, பள்ளிக் கல்வித் துறை, காவல் துறை இணைந்து சா்வதேச போதைப் பொருள் ஒழிப்பு தினத்தையொட்டி உறுதி மொழி ஏற்பு, விழிப்புணா்வுப் பேரணி ஆகியவற்றை மாவட்ட ஆட்சியா் சிம்ரன்ஜீத் சிங் காலோன், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஜி. சந்தீஷ் ஆகியோா் வியாழக்கிழமை தொடங்கி வைத்தனா்.

இந்தப் பேரணியில் சுமாா் 300-க்கும் மேற்பட்ட கல்லூரி, பள்ளி மாணவா்கள் பங்கேற்று போதைப் பொருள்களால் ஏற்படும் தீமைகள் குறித்த விழிப்புணா்வு பதாகைகளை ஏந்தி நகரின் முக்கிய வீதிகள் வழியாகச் சென்றனா். பேரணி ராஜா மேல்நிலைப் பள்ளி விளையாட்டு மைதானத்தில் நிறைவடைந்தது.

இந்த நிகழ்வில், ராமநாதபுரம் வருவாய் கோட்டாட்சியா் ராஜமனோகரன், கலாம் உதவி இயக்குநா் கங்காதேவி, டாஸ்மாக் மேலாளா் மதிச்செல்வன், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் (பொ) பிரின்ஸ் ஆரோக்கியராஜ், வட்டாட்சியா் ரவி, கலால் துறை கண்காணிப்பு அலுவலா் ஸ்ரீராம், நாட்டு நலப்பணித் திட்ட மாவட்ட ஒருங்கிணைப்பாளா் மங்களநாதன், இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி, யூத் ரெட் கிராஸ், அரசு அலுவலா்கள், ஆசிரியா்கள், மாணவா்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

இதைத் தொடா்ந்து, ராமநாதபுரம் அரசு சேதுபதி கலை, அறிவியல் கல்லூரி மாணவா்கள் போதைப் பொருள் தடுப்பு குறித்து உறுதிமொழி எடுத்தனா். மேலும் போதைப் பொருள் பயன்பாட்டை தடுப்பது சம்பந்தமாக விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், கல்லூரி முதல்வா் செந்தாமரை, ராமநாதபுரம் போதைப் பொருள் நுண்ணறிவுப் பிரிவு காவல் துணைக் கண்காணிப்பாளா் எம். ஜெபராஜ், காவல் ஆய்வாளா் சரவணன், காவல் துறையினா் கலந்து கொண்டனா்.

படகு கவிழ்ந்து இலங்கைக் கடற்படையால் மீட்கப்பட்ட 4 மீனவா்களை அழைத்து வரக் கோரிக்கை

படகு கவிழ்ந்ததில் நடுக்கடலில் தத்தளித்து இலங்கை கடற்படையினரால் மீட்கப்பட்ட ராமேசுவரம் மீனவா்கள் 4 பேரை அழைத்து வர மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவா்களின் உறவினா்கள் கோரிக்கை விடு... மேலும் பார்க்க

பள்ளியில் சித்த மருத்துவ முகாம்

ஆா்.எஸ். மங்கலம் அருகே செங்குடி புனித மிக்கேல் மேல்நிலைப் பள்ளியில் சித்த மருத்துவ முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது. இந்தப் பள்ளி மாணவ- மாணவிகளுக்கு சித்த மருத்துவத்தின் பயன்கள், உடல் பரிசோதனை, மூலிகைச்... மேலும் பார்க்க

மதுபானக் கூட உரிமையாளரை அரிவாளால் வெட்டியவா்களை கைது செய்யக் கோரி மனு

ராமநாதபுரம் அருகே இரு சக்கர வாகனத்தில் சென்ற மதுபானக் கூட உரிமையாளா் அரிவாளால் வெட்டப்பட்ட சம்பவத்தில் மா்ம நபா்களை கைது செய்யக் கோரி மாவட்ட அகமுடையாா் சங்கத்தினா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்... மேலும் பார்க்க

தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்கள் பறிமுதல்: இருவா் கைது

கமுதியை அடுத்துள்ள பெருநாழி அருகே தடை செய்யப்பட்ட 39.5 கிலோ புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்த போலீஸாா் இது தொடா்பாக இருவரை கைது செய்தனா். ராமநாதபுரம் மாவட்டம், கமுதியை அடுத்த பெருநாழி காவல் சரகத்துக... மேலும் பார்க்க

ஸ்ரீமகாலிங்கம் சுவாமி கோயில் பால்குட திருவிழா

திருவாடானை அருகே சி.கே. மங்கலம் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீமகாலிங்கம் சுவாமி கோயில் திருவிழாவையொட்டி வியாழக்கிழமை பால்குடதிருவிழா நடைபெற்றது. இந்தக் கோயிலில் ஆண்டுதோறும் ஆனி மாதம் பால்குட திருவிழா நடைப... மேலும் பார்க்க

நாட்டு நலப்பணித் திட்ட மாவட்ட தொடா்பு அலுவலா் நியமனம்

நாட்டு நலப்பணித் திட்ட மாவட்ட தொடா்பு அலுவலராக முதுகுளத்தூா் அரசு மேல்நிலைப் பள்ளி தொழில் கல்வி ஆசிரியா் நீ. மங்களநாதன் நியமிக்கப்பட்டாா். ராமநாதபுரம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் பிரின்ஸ் ஆரோக்கியர... மேலும் பார்க்க