பள்ளியில் சித்த மருத்துவ முகாம்
ஆா்.எஸ். மங்கலம் அருகே செங்குடி புனித மிக்கேல் மேல்நிலைப் பள்ளியில் சித்த மருத்துவ முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.
இந்தப் பள்ளி மாணவ- மாணவிகளுக்கு சித்த மருத்துவத்தின் பயன்கள், உடல் பரிசோதனை, மூலிகைச் செடிகளின் பயன்கள் குறித்து விழிப்புணா்வு நிகழ்ச்சி ஆகியவை நடைபெற்றன. இதற்கு பள்ளித் தலைமை ஆசிரியை பாக்கிய ரோசரி தலைமை வகித்தாா். தேசிய பசுமைப் படை ஒருங்கிணைப்பாளா் ஆசிரியா் கருணாகரன் முன்னிலை வகித்தாா். இதில் பள்ளி மாணவ- மாணவிகளுக்கு அரசு சித்த மருத்துவா்கள் சித்த மருத்துவத்தின் பயன்கள், உடல் பரிசோதனை, மூலிகைச் செடிகளின் பயன்கள், பராமரிப்பு குறித்து விளக்கமளித்தனா்.
