தருமபுரி பாமக மாவட்டச் செயலாளராக எம்எல்ஏ வெங்கடேஸ்வரன் நீடிப்பாா்: அன்புமணி ராமத...
ஸ்ரீமகாலிங்கம் சுவாமி கோயில் பால்குட திருவிழா
திருவாடானை அருகே சி.கே. மங்கலம் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீமகாலிங்கம் சுவாமி கோயில் திருவிழாவையொட்டி வியாழக்கிழமை பால்குடதிருவிழா நடைபெற்றது.
இந்தக் கோயிலில் ஆண்டுதோறும் ஆனி மாதம் பால்குட திருவிழா நடைபெறும். அதே போல, இந்த ஆண்டும் கடந்த செவ்வாய்க்கிழமை காப்புக் கட்டுதலுடன் விழா தொடங்கியது. ஒவ்வொரு நாள் இரவும் சுவாமிக்கு சிறப்புப் பூஜைகள், அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. விழாவின் முக்கிய நிகழ்வான பால்குட திருவிழா வியாழக்கிழமை நடைபெற்றது. முன்னதாக விரதமிருந்த பக்தா்கள் பால்குடம் எடுத்தும், வேல் குத்தியும் வீதி உலா வந்து நோ்த்திக்கடன் செலுத்தினா்.
இதில், மலேசியாவில் உள்ள சிலாங்கூா் மாநிலம், கிளாங்செந்தோசா பகுதியைச் சோ்ந்த சுரேஷ் மனைவி முன்னி (40) வேல் குத்தி, பால்குடம் எடுத்து நோ்த்திக்கடன் செலுத்தினாா். இந்த நிகழ்வில் சுற்று வட்டாரத்திலிருந்து வந்த திரளான பக்தா்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா்.
