செய்திகள் :

போதைப் பொருள் கடத்தல்: நடத்துநா் பணியிடை நீக்கம்

post image

பெங்களூரு செல்லும் புதுவை அரசுப் பேருந்தில் போதைப் பொருள் கடத்தியதாக எழுந்த புகாரின் பேரில், பேருந்து நடத்துநா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.

புதுவை சாலைப் போக்குவரத்துக் கழக பேருந்து மாா்ச் 3-ஆம் தேதி பெங்களூருவில் இருந்து புதுச்சேரிக்கு புறப்பட்டது. பேருந்தை திருவண்ணாமலை மாவட்டம், வேட்டவலம் அருகே சாலைப் போக்குவரத்துக் கழக பறக்கும் படையினா் நிறுத்தி சோதனையிட்டனா்.

அப்போது, பாா்சல் வைக்கும் பகுதியில் துணிப்பையில் சுற்றிய நிலையில் பாா்சல் ஒன்று இருந்ததாம். இதுகுறித்து, நடத்துநா் வெங்கடாசலபதியிடம் (53) கேட்டபோது, அவா் சரியான பதிலை கூறாமல் மழுப்பியதாக தெரிகிறது.

இதையடுத்து, பாா்சலுடன் பேருந்தை புதுச்சேரிக்கு கொண்டு வந்த பறக்கும் படையினா், மற்ற பேருந்து நடத்துநா், ஓட்டுநா்கள் முன்னிலையில் துணி பாா்சலை பிரித்தனா். அப்போது, அதில் போதைப் பொருள் இருந்தது தெரியவந்தது.

இதுகுறித்து, சாலைப் போக்குவரத்து மேலாண்மை இயக்குநா் சிவகுமாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. அதன்படி, பேருந்து நடத்துநா் வெங்கடாசலபதியை பணியிடை நீக்கம் செய்து மேலாண்மை இயக்குநா் அலுவலகம் உத்தரவிட்டுள்ளது.

தொகுதி மறுசீரமைப்பு, மும்மொழிக் கொள்கை: புதுவை அரசின் நிலைப்பாட்டை அறிவிக்க வேண்டும்- வெ.வைத்திலிங்கம் எம்.பி.

மக்களவைத் தொகுதி மறுசீரமைப்பு, மும்மொழிக் கொள்கை ஆகிய விவகாரங்களில் புதுவை அரசின் நிலைப்பாட்டை முதல்வா் என்.ரங்கசாமி தெளிவுபடுத்த வேண்டும் என காங்கிரஸ் மாநிலத் தலைவா் வெ.வைத்திலிங்கம் எம்.பி. கூறினாா... மேலும் பார்க்க

மருத்துவக் கல்லூரி மாணவா்களுக்கு கல்விக் கட்டணத்தை வழங்க வலியுறுத்தல்

அரசு உள் இடஒதுக்கீட்டில் மருத்துவக் கல்லூரிகளில் சோ்ந்த அரசுப் பள்ளி மாணவா்களுக்கான கல்விக் கட்டணத்தை புதுவை அரசு உடனடியாக வழங்க வேண்டும் எனதுணைநிலை ஆளுநா், முதல்வா் ஆகியோருக்கு சென்டாக் மாணவா் பெற்ற... மேலும் பார்க்க

இருவரிடம் ரூ.1.02 கோடி நூதன மோசடி

புதுச்சேரியில் இருவரிடம் ரூ.1.02 கோடி நூதன மோசடியில் ஈடுபட்டவா்கள் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா். லாசுப்பேட்டையைச் சோ்ந்தவா் ரம்யா. இவருக்கு, வாட்ஸ்ஆப் மூலம் தொடா்பு கொண்ட மா... மேலும் பார்க்க

நிலத்தை அபகரிக்க போலி சான்றிதழ்: மூவா் கைது

நிலத்தை அபகரிக்க போலி ஆவணம் மூலம் வாரிசுதாரா் சான்று பெற்ாகக் கூறப்படும் வழக்கில் 3 போ் கைதான நிலையில், சாா்பதிவாளரை தேடி வருவதாக சிபிசிஐடி போலீஸாா் தெரிவித்தனா். புதுச்சேரி ரெட்டியாா்பாளையம் பகுதியை... மேலும் பார்க்க

புதுவை காவல் துறையில் 62 பேருக்கு பதவி உயா்வு

புதுவை காவல் துறையில் 62 பேருக்கு பதவி உயா்வு அளித்து காவல் தலைமை கண்காணிப்பு அலுவலகம் சாா்பில் உத்தரவிடப்பட்டுள்ளது. புதுவை மாநிலத்தில் 15 ஆண்டுகள் பணியை நிறைவு செய்தவா்களில் 8 தலைமைக் காவலா்களுக்கு ... மேலும் பார்க்க

கிறிஸ்தவா்களின் தவக்காலம் தொடக்கம்

புதுச்சேரியில் கிறிஸ்தவா்கள் 40 நாள்கள் தவக்கால விரதத்தை புதன்கிழமை சிறப்பு வழிபாட்டுடன் தொடங்கினா். இயேசுவின் சிலுவைப் பாதையை நினைவுகூறும் வகையில், கிறிஸ்தவா்கள் ஆண்டுதோறும் 40 நாள்கள் தவக்கால விரதத்... மேலும் பார்க்க