செய்திகள் :

போதைப் பொருள் வாங்க ரூ.1 கோடி சொத்தை விற்ற பெண் தொழிலதிபர்!

post image

ஹைதராபாத்: நாட்டிலேயே மிகப்பெரிய மருத்துவமனையின் தலைமை செயல் நிர்வாகியாக இருந்த பெண், தன்னுடைய போதைப் பொருள் பழக்கத்தினால், ரூ.1 கொடி மதிப்பிலான சொத்தை விற்று கொகைகன் வாங்கிய சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

போதைப் பொருள் வைத்திருந்தக் குற்றத்துக்காக அவரையும் மும்பையைச் சேர்ந்த மிகப்பெரிய கொரியர் நிறுவன ஊழியரையும் காவல்துறையினர் கைது செய்தனர். அவர்களிடமிருந்து ரூ.5 லட்சம் மதிப்பிலான கொகைன் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

அப்பெண்ணின் வீடு உள்ளிட்ட இடங்களில் தெலங்கானா போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் சோதனை நடத்திய நிலையில், சைபர் பிரிவு காவல்துறையினர் கடந்த வாரம் 53 கிராம் கொகைன் வைத்திருந்த 34 வயது பெண்ணை கைது செய்துள்ளனர். அவரிடம் நடத்திய விசாரணையில், போதைப்பொருளுக்கு மிக மோசமான நிலையில் அடிமையாகியிருப்பதும், அவருக்குச் சொந்தமான ரூ.1 கோடி மதிப்பிலான சொத்தை விற்பனை செய்து போதைப் பொருள் வாங்கியிருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அந்தப்பெண் மிக மோசமாக பாதிக்கப்பட்டிருப்பதாகவும் 24 மணி நேரத்தில் பத்து முறைக்கும் மேல் கொகைன் பயன்படுத்துவதை வாடிக்கையாக வைத்திருந்ததும், இரவில் கூட 2 அல்லது 3 முறை எழுந்து கொகைன் எடுத்துக் கொள்வதை வழக்கமாக வைத்திருந்ததாகவும் விசாரணை அதிகாரிகள் கூறியுள்ளனர்.

கொகைன் எடுத்துக் கொள்வதோடு மட்டுமல்லாமல் இந்த மருத்துவர் தூக்க மாத்திரைகளையும் சாப்பிட்டு வந்துள்ளார்.

மே 9ஆம் தேதி அவர் கைது செய்யப்பட்ட நிலையில், அதற்கு 20 நாள்கள் முன்புகூட, காவல்துறையினர், அவரது வீட்டுக்குச் சென்று, அவர் காவல்துறையினர் கண்காணிப்பில் உள்ளார் என்றும், உடனடியாக அவரை போதை மறுவாழ்வு மையத்தில் சேர்த்துவிடுமாறும் குடும்பத்தினரிடம் அறிவுறுத்தியுள்ளனர். ஆனால், காவல்துறையினரை திட்டி, அந்த பெண் மருத்துவர் வெளியேற்றியிருக்கிறார்.

இந்த நிலையில்தான், போதைப் பொருள் கொண்டு வந்த கொரியர் ஊழியரை சந்திக்க வீட்டை விட்டு வெளியே வந்த அப்பெண்ணை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

இந்தியா - பாக். ராணுவ தலைமை அதிகாரிகள் பேச்சு முடிவடைந்தது!

இந்தியா - பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகள் அளவிலான பேச்சுவார்த்தை முடிவடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்திய ராணுவ உயரதிகாரிகளுடன் பாகிஸ்தான் ராணுவ உயரதிகாரிகள் முதல்கட்டமாக இன்று(மே 12) பகல் பேச்சுவார்த்த... மேலும் பார்க்க

அரசுக்கு எதிராகப் பேச நடிகர்கள் தயக்கம்: அமலாக்கத் துறைக்குப் பயப்படுகிறார்கள்! -ஜாவேத் அக்தர்

அரசுக்கு எதிரான விமர்சனங்களை வைக்க நடிகர்கள் தயக்கம் காட்டுவதாகவும், அமலாக்கத் துறைக்குப் பயப்படுவதாலேயே திரைத்துறை சார் பிரபலங்கள் அமைதியாக இருப்பதாகவும் கவிஞர் ஜாவேத் அக்தர் ஜாவேத் அக்தர் தெரிவித்தி... மேலும் பார்க்க

ஆபரேஷன் சிந்தூர்: செய்திகள் - நேரலை!

இறுதிச் சடங்கில் பங்கேற்ற ராணுவ அதிகாரிகள்ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலின்போது கொல்லப்பட்ட பயங்கரவாதியும் லஷ்கர்-ஏ-தொய்பா பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்தவருமான அப்துல் ரௌஃப் இறுதிச் சடங்கில் பங்கேற்ற பாகிஸ்தா... மேலும் பார்க்க

நாட்டு மக்களிடம் இன்றிரவு உரையாற்றுகிறார் பிரதமர் மோடி!

நாட்டு மக்களிடம் இன்று இன்றிரவு 8 மணிக்குப் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றுகிறார்.இந்தியா - பாகிஸ்தான் தாக்குதல் நிறுத்தத்திற்குப் பிறகு நாட்டு மக்களிடம் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றுகிறார். ஆபரேஷன்... மேலும் பார்க்க

வார்த்தையல்ல.. உணர்ச்சி: உ.பி.யில் பிறந்த 17 குழந்தைகளுக்கு 'சிந்தூர்' எனப் பெயரிட்ட பெற்றோர்!

இந்தியா - பாகிஸ்தான் இடையே போர்ப் பதற்றம் நிலவிவந்த நிலையில், உத்தரப் பிரதேசத்தில் பிறந்த 17 பெண் குழந்தைகளுக்கு அவரது குடும்பத்தினர் "சிந்தூர்" எனப் பெயரிட்டுள்ளனர். கடந்த மாதம் பஹல்காம் பயங்கரவாதத் ... மேலும் பார்க்க

பல அடுக்குகளும் நுட்பங்களும் கொண்ட பாதுகாப்பு அமைப்பு: ராஜீவ் கயி

புது தில்லி: பல அடுக்குகளில் ஒன்றைத் தாக்கினால் மற்றொன்று எதிரியை தாக்கும் அளவுக்கு பல அடுக்குகளும் நுட்பங்களும் கொண்ட வான் பாதுகாப்பை அமைப்பைக் கொண்டிருக்கிறோம் என்று இந்திய ராணுவ தலைமை இயக்குநர் லெஃ... மேலும் பார்க்க