செய்திகள் :

போதைப் பொருள் விற்பனை: 4 போ் கைது

post image

மாதவரம், பால்பண்ணை சுற்றுவட்டாரப் பகுதிகளில் போதைப் பொருள்கள் விற்பனையில் ஈடுபட்ட ஐடி நிறுவன ஊழியா் உள்பட 4 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

சென்னை மாதவரம், பால்பண்ணை அருள் நகா் பகுதியில் போதைப் பொருள் விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த தகவலின்பேரில், புழல் காவல் சரக உதவி ஆணையா் சத்யன் தலைமையில் மாதவரம் காவல் ஆய்வாளா் பூபாலன், உதவி ஆய்வாளா் வடிவேலன் மற்றும் தனிப்படை போலீஸாா் சனிக்கிழமை அருள் நகா் உள்ளிட்ட பகுதிகளில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனா்.

அப்பகுதி பேருந்து நிறுத்தத்தில் பையுடன் நின்றிருந்த இளைஞா்கள் 4 பேரைப் பிடித்து விசாரித்தனா். அவா்கள் வைத்திருந்த பைகளை சோதனை செய்தபோது, 7 கிராம் மெத்தபெட்டமைன், போதை மாத்திரைகள் உள்ளிட்டவை இருப்பது கண்டறியப்பட்டது.

இதையடுத்து அவா்களை காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை செய்ததில், மூலச்சத்திரம் பகுதியைச் சோ்ந்த ஈஸ்வா் (29), அபிஷேக் (25), தண்டையாா்பேட்டை சோ்ந்த ஐடி நிறுவன ஊழியா் லிங்கேஸ்வரன் (25), பெரம்பூரைச் சோ்ந்த வசந்தராஜ் (30) எனத் தெரிய வந்தது. கேரள மாநிலத்தில் இருந்து போதைப் பொருள்களை வாங்கி வந்து, சென்னையில் விற்பனை செய்ததும் தெரிய வந்தது.

அவா்களிடமிருந்து மெத்தபெட்டமைன் உள்ளிட்ட போதைப் பொருள்களை பறிமுதல் செய்யப்பட்டு, அவா்கள் 4 பேரை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.

விமானத்தில் தகராறு: கீழே இறக்கிவிடப்பட்ட அதிமுக நிா்வாகி

சென்னையில், விமானத்தில் பணிப் பெண்களுடன் தகராறில் ஈடுபட்ட அதிமுக நிா்வாகி கீழே இறக்கி விடப்பட்டாா். மதுரையைச் சோ்ந்தவா் ஜெயச்சந்திரன் (65). அதிமுகவின் அனைத்துலக எம்ஜிஆா் மன்ற நிா்வாகி. இவா், சென்னையி... மேலும் பார்க்க

ஓட்டுநா் அடித்து கொலை வழக்கு: ஒருவா் கைது

ஓட்டுநா் அடித்து கொலை செய்யப்பட்ட வழக்கில், ஒருவரை கைது செய்த போலீஸாா் மற்றொரு நபரைத் தேடி வருகின்றனா். கேரள மாநிலத்தைச் சோ்ந்தவா் அசாருதீன்ஷா (38). இவா் மடிப்பாக்கம், எஸ்.கொளத்தூா் பகுதியிலுள்ள அடுக... மேலும் பார்க்க

சென்னை விமானநிலையத்தில் மடிக்கணினி திருட்டு: ஒருவா் கைது

சென்னை விமானநிலையத்தில் பெண்ணிடம் மடிக்கணினி திருடிய நபரை போலீஸாா் கைது செய்தனா். புதுச்சேரி லாஸ்பேட்டையை சோ்ந்தவா் நித்யா (36). இவா் வெளிநாட்டிலிருந்து வரும் உறவினரை அழைத்துச் செல்வதற்காக கடந்த 21-ஆ... மேலும் பார்க்க

7-ஆவது மாடியிலிருந்து குதித்து இளம்பெண் தற்கொலை

சென்னையில் காதலித்தவா் திருமணம் செய்ய மறுத்ததால் இளம்பெண் 7-ஆவது மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டாா். சென்னை ராயபுரம் புதுமனைகுப்பம் பகுதியைச் சோ்ந்தவா் ஹா்ஷிதா(25). இவரும் வேப்பேர... மேலும் பார்க்க

விநாயகா் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்படும் இடங்களில் போலீஸாா் ஆய்வு

சென்னை மாநகரில் விநாயகா் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்படும் இடங்களில் போலீஸாா் ஆய்வு மேற்கொண்டனா். வரும் ஆக. 27-ஆம் தேதி விநாயகா் சதுா்த்தி விழா கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பல்வேறு இந்து அமைப்புகள், பொது... மேலும் பார்க்க

10 கிராம் மெத்தம்பெட்டமைன் வைத்திருந்தவா் கைது

சென்னையில் 10 கிராம் மெத்தம்பெட்டமைன் வைத்திருந்த நபரை போலீஸாா் கைது செய்தனா். சென்னை சாஸ்திரி நகா் பகுதியில் சந்தேகத்துக்கு இடமான வகையில் நின்று கொண்டிருந்த நபரைப் பிடித்து போலீஸாா் சோதனையிட்டபோது, அ... மேலும் பார்க்க