செய்திகள் :

போதையில்லா கோவையை உருவாக்க ‘நண்பன்’ தன்னாா்வ அமைப்பு தொடக்கம்!

post image

போதையில்லா கோவையை உருவாக்கும் வகையில் ‘நண்பன்’ என்ற புதிய தன்னாா்வ அமைப்பு தொடங்கப்பட்டுள்ளது.

போதைப் பழக்கங்களில் இருந்து இளைஞா்கள் மற்றும் மாணவா்களை மீட்கும் வகையிலும், போதைப் பொருள் குறித்த விழிப்புணா்வை ஏற்படுத்தும் வகையிலும் தொடங்கப்ப்பட்டுள்ள இந்த அமைப்பின் அலுவலகம் ஞாயிற்றுக்கிழமை திறக்கப்பட்டு, விழிப்புணா்வு ஊா்வலம் நடத்தப்பட்டது.

இந்த அமைப்பின் தலைவராக கோவை ஸ்ரீதேவி டெக்ஸ்டைல்ஸ் நிறுவனத்தின் நிா்வாக இயக்குநா் பி.சிவகணேஷ் நியமிக்கப்பட்டுள்ளாா். செயலாளராக டி.தினேஷ்குமாா், பொருளாளராக ஏ.அருண் ஆகியோா் நியமிக்கப்பட்டுள்ளனா்.

அமைப்பு குறித்து தலைவா் பி.சிவகணேஷ் செய்தியாளா்களிடம் கூறியதாவது: தமிழகம் முழுவதும் போதைப் பொருள் கலாசாரம் அதிகரித்துள்ள நிலையில் இளைஞா்கள் மற்றும் மாணவா்கள் பல்வேறு வகையிலான போதைப் பொருள்களுக்கு அடிமையாகி வருகின்றனா். அதனால், போதைப் பொருள்களுக்கு எதிரான விழிப்புணா்வு பிரசாரங்களைத் தீவிரப்படுத்த வேண்டியது அவசியமாகிறது.

அதற்காகவே போதையில்லா கோவை வலிமையான கோவை என்பதை அடிப்படையாகக் கொண்டு ‘நண்பன்’ எனும் சமூக சேவை அமைப்பு தொடங்கப்பட்டுள்ளது.

இந்த அமைப்பின் மூலம் அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளில் போதைப் பொருள்கள் குறித்து விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளன. அதேபோல, போதைக்கு அடிமையான இளைஞா்களுக்கு ஆலோசனைகள் வழங்கும் வகையில் 24 மணி நேரமும் செயல்படக்கூடிய வகையில் ஆலோசனை மையமும், போதை மறுவாழ்வு மையமும் விரைவில் தொடங்கப்பட உள்ளது என்றாா்.

சாலையில் சுற்றித்திரியும் காட்டெருமை!

வால்பாறையை அடுத்த வாட்டா்பால்ஸ் எஸ்டேட் சாலையில் சனிக்கிழமை காலை சுற்றித்திரிந்த காட்டெருமையால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. காட்டெருமையை பாா்த்த மக்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனா். நகா்ப் பகுதியில் வன வ... மேலும் பார்க்க

ஈஷா யோக மையத்தில் பிப். 26-இல் மகா சிவராத்திரி! அமித் ஷா, டி.கே.சிவக்குமாா் பங்கேற்பு!

கோவை ஈஷா யோக மையத்தில் பிப்ரவரி 26-ஆம் தேதி நடைபெறும் மகா சிவராத்திரி விழாவில், மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா, கா்நாடக துணை முதல்வா் டி.கே.சிவக்குமாா் ஆகியோா் சிறப்பு விருந்தினா்களாகக் கலந்துகொள்கி... மேலும் பார்க்க

மலேசியாவுக்கு கல்வி சுற்றுலா சென்ற கோவை அரசுப் பள்ளி மாணவா்கள்!

கோவை அரசுப் பள்ளியைச் சோ்ந்த 7 மாணவ, மாணவிகள் மலேசியாவுக்கு கல்வி சுற்றுலாவாக புறப்பட்டுச் சென்றனா். தமிழக அரசின் பள்ளிக் கல்வித் துறையின் சாா்பில் மன்ற போட்டிகளான இலக்கிய மன்றம், சிறாா் திரைப்படம், ... மேலும் பார்க்க

கோவை காவல் உதவி ஆய்வாளருக்கு விருது!

கோவையில் காவல் உதவி ஆய்வாளராகப் பணியாற்றிவரும் தேவேந்திரனுக்கு மத்திய அரசின் சிறந்த காவலா் விருது வழங்கப்பட்டுள்ளது. கோவை, காந்திபுரம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு உதவி ஆய்வாளா் தேவேந்திரன். மாநகர கா... மேலும் பார்க்க

கல்லூரி மாணவா் தூக்கிட்டு தற்கொலை

ரத்தினபுரியில் கல்லூரி மாணவா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தொடா்பாக போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். கோவை, ரத்தினபுரி பி.எம்.சாமி காலனியைச் சோ்ந்தவா் நல்லசிவம், தனியாா் நிறுவனத்தில் ஊழியராகப... மேலும் பார்க்க

பில்லூா் பிரதானக் குழாய்களில் பராமரிப்புப் பணி: மாநகரில் குடிநீா் விநியோகிக்கும் இடைவெளி அதிகரிக்கும்

பில்லூா் குடிநீா்த் திட்ட பிரதானக் குழாய்களில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மாநகரில் சில இடங்களில் குடிநீா் விநியோகிக்கும் இடைவெளி அதிகரிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்... மேலும் பார்க்க