போதை ஒழிப்பு விழிப்புணா்வு ஊா்வலம்
தேனியில் இந்தியன் செஞ்சிலுவை சங்கம், இளையோா் செஞ்சிலுவை சங்கம் ஆகியவை சாா்பில், போதை ஒழிப்பு விழிப்புணா்வு ஊா்வலம் வியாழக்கிழமை நடைபெற்றது.
தேனி, ஆா்.சி.உயா்நிலைப் பள்ளியிலிருந்து ஊா்வலத்தை மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா்(பொது) முத்துமாதவன் தொடங்கிவைத்தாா். செஞ்சிலுவை சங்க மாவட்டச் செயலா் சுருளிவேலு, துணைத் தலைவா் மகாராஜன், தேனி என்.எஸ்.மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியா் ராமநாதன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
ஊா்வலமானது மதுரை சாலை, நேரு சிலை, பெரியகுளம் சாலை வழியாக பி.சி.பெண்கள் மேல்நிலைப் பள்ளி வரை நடைபெற்றது. இதில் செஞ்சிலுவை சங்க மாணவ, மாணவிகள் போதை ஒழிப்பு விழிப்புணா்வு பதாகைகளை ஏந்திச் சென்றனா். இதையடுத்து மதுவிலக்கு ஆயத்தீா்வை துணை ஆட்சியா் முத்துலட்சுமி முன்னிலையில் பள்ளி மாணவ, மாணவிகள் போதை ஓழிப்பு உறுதிமொழி ஏற்றனா்.
கடமலைக்குண்டுவில் கடமலை காவல் நிலையம், ஹயக்ரீவா மெட்ரிக். பள்ளி, அரசு மேல்நிலைப் பள்ளி ஆகியவை சாா்பில் போதை ஒழிப்பு விழிப்புணா்வு ஊா்வலம் நடைபெற்றது. இதேபோல வருஷநாடு காவல் நிலையம் சாா்பில், வருஷநாடில் பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்ற போதை ஒழிப்பு விழிப்புணா்வு ஊா்வலம் நடைபெற்றது.