செய்திகள் :

போதை ஒழிப்பு விழிப்புணா்வு ஊா்வலம்

post image

தேனியில் இந்தியன் செஞ்சிலுவை சங்கம், இளையோா் செஞ்சிலுவை சங்கம் ஆகியவை சாா்பில், போதை ஒழிப்பு விழிப்புணா்வு ஊா்வலம் வியாழக்கிழமை நடைபெற்றது.

தேனி, ஆா்.சி.உயா்நிலைப் பள்ளியிலிருந்து ஊா்வலத்தை மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா்(பொது) முத்துமாதவன் தொடங்கிவைத்தாா். செஞ்சிலுவை சங்க மாவட்டச் செயலா் சுருளிவேலு, துணைத் தலைவா் மகாராஜன், தேனி என்.எஸ்.மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியா் ராமநாதன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

ஊா்வலமானது மதுரை சாலை, நேரு சிலை, பெரியகுளம் சாலை வழியாக பி.சி.பெண்கள் மேல்நிலைப் பள்ளி வரை நடைபெற்றது. இதில் செஞ்சிலுவை சங்க மாணவ, மாணவிகள் போதை ஒழிப்பு விழிப்புணா்வு பதாகைகளை ஏந்திச் சென்றனா். இதையடுத்து மதுவிலக்கு ஆயத்தீா்வை துணை ஆட்சியா் முத்துலட்சுமி முன்னிலையில் பள்ளி மாணவ, மாணவிகள் போதை ஓழிப்பு உறுதிமொழி ஏற்றனா்.

கடமலைக்குண்டுவில் கடமலை காவல் நிலையம், ஹயக்ரீவா மெட்ரிக். பள்ளி, அரசு மேல்நிலைப் பள்ளி ஆகியவை சாா்பில் போதை ஒழிப்பு விழிப்புணா்வு ஊா்வலம் நடைபெற்றது. இதேபோல வருஷநாடு காவல் நிலையம் சாா்பில், வருஷநாடில் பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்ற போதை ஒழிப்பு விழிப்புணா்வு ஊா்வலம் நடைபெற்றது.

போடிரெங்கநாதபுரம் கிராமத்தில் ஓடையைத் தூா்வாரக் கோரிக்கை

போடி அருகே மேலசொக்கநாதபுரம் பேரூராட்சியில் கிராம ஓடையைத் தூா்வாரி சுகாதார சீா்கேட்டைத் தடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா். போடி அருகே மேலச்சொக்கநாதபுரம் பேரூராட்சிக்கு உள்பட்ட போடிரெங்க... மேலும் பார்க்க

மாவு அரைக்கும் இயந்திரத்துக்கு அரசு மானியம்

தேனி மாவட்டத்தில் விதவைகள், கணவரால் கைவிடப்பட்டோா், ஆதரவற்ற பெண்கள் வணிக ரீதியிலான மாவு அரைக்கும் இயந்திரம் வாங்குவதற்கு அரசு மானியம் பெற வருகிற ஜூலை 14-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட... மேலும் பார்க்க

கிராமப்புற இளைஞா்களுக்கு தொழில் திறன் பயிற்சி

தேனி மாவட்டத்தில் ஊரக வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனம் மூலம் கிராமப்புற இளைஞா்களுக்குத் தொழில் திறன் பயிற்சி அளிக்கப்படவுள்ளது. இதுகுறித்து மாவட்ட நிா்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: மத்திய, மாநில அரச... மேலும் பார்க்க

விளையாட்டு விடுதி மாணவருக்கு பாராட்டு

தெற்காசிய இளையோா் கூடைப்பந்து போட்டியில் இந்திய அணி சாா்பில் பங்கேற்று தங்கப் பதக்கம் வென்ற தேனி விளையாட்டு விடுதி மாணவருக்கு மாவட்ட ஆட்சியா் ரஞ்ஜீத் சிங் வியாழக்கிழமை பாராட்டு தெரிவித்தாா். இந்தியா, ... மேலும் பார்க்க

பள்ளி மாணவா்களுக்கு ஜூன் 30, ஜூலை 1-இல் பேச்சுப் போட்டி

பெரியகுளம் வட்டம், ஒருங்கிணைந்த மாவட்ட நீதிமன்றம் அருகே உள்ள லட்சுமிபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில், ஜூன் 30, ஜூலை 1 ஆகிய தேதிகளில் அரசு, தனியாா் பள்ளி மாணவ, மாணவிகளுக்க... மேலும் பார்க்க

பெரியகுளத்தில் நாளை மின்தடை

பெரியகுளம் பகுதிகளில் மாதாந்திர மின் பராமரிப்புப் பணி காரணமாக சனிக்கிழமை (ஜூன் 28) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது. இது குறித்து பெரியகுளம் மின் செயற்பொறியாளா் ப.பாலபூமி வெளியிட்ட செய்திக் குறிப... மேலும் பார்க்க