செய்திகள் :

போர் நிறுத்த ஒப்பந்தம்! ஹமாஸின் கூற்றை மறுத்த அமெரிக்கா!

post image

இஸ்ரேல் - காஸா போர் நிறுத்தம் தொடர்பான ஒப்பந்தத்தில் ஹமாஸின் கூற்றை அமெரிக்கா ஏற்றுக் கொள்ளவில்லை.

இஸ்ரேல் - காஸா இடையிலான போரை நிறுத்துவதற்காக அமெரிக்கா தொடர்ந்து முயற்சி செய்து வருகிறது. அந்த வகையில், போரை நிறுத்துவதற்காக ஒப்பந்தத்தையும் உருவாக்கி, அதனை இஸ்ரேல் மற்றும் காஸாவுக்கு அனுப்பி வைத்ததாக அமெரிக்க வெள்ளை மாளிகை தெரிவித்தது.

ஒப்பந்தத்தில் கூறுவன, இரு தரப்பினரும் சண்டையை 60 நாள்களுக்கு முழுமையாக நிறுத்திவைப்பது, தங்களிடம் பிணைக் கைதிகளாக உள்ள 10 பேரை ஹமாஸ் அமைப்பினா் இரண்டு கட்டங்களாக விடுவிப்பது, உயிரிழந்த 18 பிணைக் கைதிகளின் உடல்களை அவா்கள் ஒப்படைப்பது, இஸ்ரேல் சிறைகளில் உள்ள பாலஸ்தீன கைதிகள் விடுவிக்கப்படுவது, காஸா பகுதியில் நிவாரண உதவிகளை அதிகப்படுத்துவது உள்ளிட்ட அம்சங்கள் இடம் பெற்றுள்ளன.

இந்தப் போர் நிறுத்தம் அமலுக்கு வந்து, அது நீட்டிக்கப்பட்டால் அனைத்து பிணைக் கைதிகளும் விடுவிக்கப்படுவார்கள் என்று குறிப்பிட்டுள்ளனர். இந்த செயல்திட்டத்தை இஸ்ரேல் ஏற்றுக் கொண்டது.

இருப்பினும், இந்த செயல்திட்டத்துக்கு ஹமாஸ் தெரிவித்த பதிலில், நிரந்த போர் நிறுத்தம், காஸாவில் இருந்து இஸ்ரேல் படை திரும்ப வேண்டும், காஸாவில் நிவாரண உதவிகள் செல்வதை உறுதி செய்ய வேண்டும்.

இவற்றை ஏற்றுக் கொண்டால் மட்டுமே பிணைக் கைதிகள் 10 பேர் விடுவிக்கப்படுவர். உயிரிழந்த பிணைக் கைதிகள் 18 பேரின் உடல்களும் அனுப்பி வைக்கப்படும் என்று குறிப்பிட்டுள்ளனர்.

இந்த நிலையில், ஹமாஸின் பதிலை ஏற்றுக் கொள்ளாத அமெரிக்கா, போர் நிறுத்த ஒப்பந்தம் தொடர்பாக ஹமாஸின் பதிலானது ஏற்றுக்கொள்ள முடியாதது. பேச்சுவார்த்தை நடத்த வேண்டுமென்றால், நாங்கள் உருவாக்கியுள்ள ஒப்பந்தத்தை ஹமாஸ் ஏற்றாக வேண்டும்.

ஒப்பந்தத்தை ஏற்றுக்கொண்டால், உடனடியாக இந்த வாரத்திலேயே பேச்சுவார்த்தையைத் தொடங்கலாம். இதன் மூலம் போர் நிறுத்தத்தைக் கொண்டு வரலாம் என்று கூறியது.

பாகிஸ்தான்: 2 நாள்களில் 14 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை!

ஆப்கானிஸ்தான் நாட்டுடனான பாகிஸ்தானின் எல்லையில், அமைந்துள்ள வடக்கு வசிரிஸ்தான் மாவட்டத்தில், அந்நாட்டு பாதுகாப்புப் படையினரால் 14 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.பழங்குடியின மக்கள் அதிகம் வாழும்,... மேலும் பார்க்க

இந்தியாவைத் துண்டுத் துண்டாக்குவோம் என்ற லஷ்கர் பயங்கரவாதி மர்ம மரணம்!

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில், ஜெய்ஷ்-ஏ-முகமது பயங்கரவாத இயக்கத்தின் தளபதி அப்துல் ஆஸிஸ் எசார் என்ற பயங்கரவாதி மர்மமான முறையில் மரணமடைந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.காலை நேரத்தில், அப்துல் ஆஸ... மேலும் பார்க்க

ஆக்ரோஷத்தில் உக்ரைன்: கிரிமியா-ரஷிய இணைப்புப் பாலத்தில் பயங்கர தாக்குதல்

ரஷியா - உக்ரைன் போர் தீவிரமடைந்து, ஆக்ரோஷ தாக்குதலில் ஈடுபட்டு வரும் உக்ரைன் கிரிமியா-ரஷிய இணைப்புப் பாலத்தில் வெடிகுண்டுகளை வெடிக்க வைத்துள்ளது.இதுவரை எதிர் தாக்குதலை உக்தியாகக் கையாண்டு வந்த உக்ரைன்... மேலும் பார்க்க

டிரம்ப் அரசின் மசோதாவை கடுமையாக விமர்சித்த எலான் மஸ்க்!

அமெரிக்க அரசு கொண்டு வந்துள்ள வரி மற்றும் செலவு மசோதாவுக்கு தொழிலதிபர் எலான் மஸ்க் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்டு டிரம்புக்கு ஆதரவாக பிரசாரம் செய்த எலான் மஸ்க், அவர் வெற... மேலும் பார்க்க

இந்தியா மீது அதிபா் டிரம்ப்புக்கு மிகப்பெரிய மரியாதை- அமெரிக்க வா்த்தக அமைச்சா்

‘இந்தியா மீது அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப்புக்கு மிகப்பெரிய மரியாதை உள்ளது’ என்று அந்நாட்டு வா்த்தக துறை அமைச்சா் ஹோவா்ட் லுட்னிக் தெரிவித்தாா். மேலும், இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே பே... மேலும் பார்க்க

பாகிஸ்தானுக்கு ரூ.6,852 கோடி கடனுதவி: ஆசிய வளா்ச்சி வங்கி ஒப்புதல்

பாகிஸ்தானுக்கு ரூ.6,852 கோடி (800 மில்லியன் டாலா்) கடனுதவி வழங்க ஆசிய வளா்ச்சி வங்கி (ஏடிபி) ஒப்புதல் அளித்ததாக அதிகாரி ஒருவா் செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா். பாகிஸ்தானின் பொது நிதி மேலாண்மை மற்றும் நித... மேலும் பார்க்க