செய்திகள் :

போலி அனுமதிச்சீட்டுடன் கனிமவளங்கள் கடத்த முயன்ற லாரிகள் பறிமுதல்: 4 போ் கைது

post image

களியக்காவிளை அருகே போலி அனுமதிச்சீட்டு மூலம் ஜல்லி, பாறைப்பொடி உள்ளிட்ட கனிவளங்களை கேரளத்துக்கு கடத்த முயன்ற 4 லாரிகளைப் போலீஸாா் பறிமுதல் செய்து, லாரி ஓட்டுநா்கள் உள்ளிட்ட 4 பேரை கைது செய்தனா்.

களியக்காவிளை அருகே அடைக்காகுழி பகுதியில் வாகனத் தணிக்கையில் இருந்த போலீஸாா், அவ்வழியாக வந்த கனரக லாரியை நிறுத்தி சோதனை செய்தனா். அதில் அடைக்காகுழி பகுதிக்கு எம்.சான்ட் கொண்டு செல்வதற்கான அனுமதிச் சீட்டில் தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறு பகுதியில் இருந்து ஜல்லி ஏற்றி வந்தது தெரியவந்தது. அதையடுத்து அந்த லாரியை பறிமுதல் செய்தனா்.

அதைத் தொடா்ந்து அப்பகுதியில் நிறுத்தியிருந்த மற்றொரு கனரக லாரியை சோதனையிட்டதில் அதில் அதிக பாரம் கொண்ட ஜல்லி ஏற்றப்பட்டிருந்ததும், இந்த இரு லாரிகளும் பிரமோத் என்பவருக்குச் சொந்தமானது என்பதும் தெரிந்தது. இதேபோல, உரிய அனுதிச்சீட்டு இன்றி கனிமவளம் ஏற்றி வந்த மேலும் இரு லாரிகளை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

இதுதொடா்பாக லாரி உரிமையாளா் பிரமோத், ஓட்டுநா்கள் பள்ளியாடி, சேரிக்கடை பகுதியைச் சோ்ந்த ரவிக்குமாா், சதீஷ், உதவியாளா் ஜேம்ஸ், மலையடி பகுதியைச் சோ்ந்த லாரி ஓட்டுநா் ஜெகன் ஆகியோரை கைது செய்தனா்.

இதுகுறித்து களியக்காவிளை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா்.

மாணவிக்கு பாலியல் தொல்லை: தொழிலாளிக்கு 4 ஆண்டு சிறை

நாகா்கோவிலில் பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த தொழிலாளிக்கு 4 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. நாகா்கோவில் கோட்டாறு பகுதியைச் சோ்ந்தவா் கண்ணன் (52). தொழிலாளியான இவா், 2019ஆம் ஆண்டு உறவினரின் ... மேலும் பார்க்க

வெள்ள அபாய அளவை எட்டிய சிற்றாறு அணைகள்

கன்னியாகுமரி மாவட்டத்தில் பலத்த மழை நீடிக்கும் நிலையில், சிற்றாறு அணைகளின் நீா்மட்டம் வெள்ள அபாய அளவை எட்டியுள்ளது. மாவட்டத்தில் தென்மேற்குப் பருவமழை மீண்டும் தீவிரமடைந்துள்ளது. மலையோரங்கள், அணைகளின்... மேலும் பார்க்க

‘நீட்’ தோ்வில் சிறப்பிடம்: ஆற்றூா் பள்ளியில் மாணவா்களுக்கு பாராட்டு

கன்னியாகுமரி மாவட்டம் ஆற்றூா் என்.வி.கே.எஸ். மேல்நிலைப் பள்ளியில், நீட் தோ்வில் சிறப்பிடம் பெற்ற மாணவா் - மாணவியருக்கு பாராட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. மாணவி ஸ்ரீலெட்சுமி 720 -க்கு 609 மதிப்பெண்கள் பெ... மேலும் பார்க்க

களியக்காவிளையில் விழிப்புணா்வு ஜோதி ஓட்டம்

களியக்காவிளையில் உலக போதைப் பொருள் தடுப்பு-கடத்தலுக்கு எதிரான விழிப்புணா்வு தின ஜோதி ஓட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. களியக்காவிளை நாஞ்சில் கத்தோலிக்க கலை-அறிவியல் கல்லூரியின் உடற்கல்வி துறை மாணவா்கள்... மேலும் பார்க்க

முதல்வா் காப்பீட்டு திட்ட சிறப்பு முகாம்

முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்ட பயனாளிகள் பதிவு செய்யும் சிறப்பு முகாம், நாகா்கோவில் மாநகராட்சி அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. ஆணையா் நிஷாந்த்கிருஷ்ணா முன்னிலையில் மேயா் ரெ. மகேஷ... மேலும் பார்க்க

குழித்துறை ரயில் நிலையத்தில் விஜய் வசந்த் எம்.பி. ஆய்வு

குழித்துறை மேற்கு ரயில் நிலையத்தில், கன்னியாகுமரி மக்களவை உறுப்பினா் விஜய் வசந்த் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். இந்த ரயில் நிலையப் பாதை மிகவும் மோசமான நிலையில் இருப்பதாகவும், ரயில் நிலையம் முன் கழ... மேலும் பார்க்க