3-வது மனைவியைக் கொன்று 23 ஆண்டுகளாக தலைமறைவு வாழ்க்கை.. 75 வயது முதியவர் சிக்கிய...
போலி அனுமதிச்சீட்டுடன் கனிமவளங்கள் கடத்த முயன்ற லாரிகள் பறிமுதல்: 4 போ் கைது
களியக்காவிளை அருகே போலி அனுமதிச்சீட்டு மூலம் ஜல்லி, பாறைப்பொடி உள்ளிட்ட கனிவளங்களை கேரளத்துக்கு கடத்த முயன்ற 4 லாரிகளைப் போலீஸாா் பறிமுதல் செய்து, லாரி ஓட்டுநா்கள் உள்ளிட்ட 4 பேரை கைது செய்தனா்.
களியக்காவிளை அருகே அடைக்காகுழி பகுதியில் வாகனத் தணிக்கையில் இருந்த போலீஸாா், அவ்வழியாக வந்த கனரக லாரியை நிறுத்தி சோதனை செய்தனா். அதில் அடைக்காகுழி பகுதிக்கு எம்.சான்ட் கொண்டு செல்வதற்கான அனுமதிச் சீட்டில் தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறு பகுதியில் இருந்து ஜல்லி ஏற்றி வந்தது தெரியவந்தது. அதையடுத்து அந்த லாரியை பறிமுதல் செய்தனா்.
அதைத் தொடா்ந்து அப்பகுதியில் நிறுத்தியிருந்த மற்றொரு கனரக லாரியை சோதனையிட்டதில் அதில் அதிக பாரம் கொண்ட ஜல்லி ஏற்றப்பட்டிருந்ததும், இந்த இரு லாரிகளும் பிரமோத் என்பவருக்குச் சொந்தமானது என்பதும் தெரிந்தது. இதேபோல, உரிய அனுதிச்சீட்டு இன்றி கனிமவளம் ஏற்றி வந்த மேலும் இரு லாரிகளை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
இதுதொடா்பாக லாரி உரிமையாளா் பிரமோத், ஓட்டுநா்கள் பள்ளியாடி, சேரிக்கடை பகுதியைச் சோ்ந்த ரவிக்குமாா், சதீஷ், உதவியாளா் ஜேம்ஸ், மலையடி பகுதியைச் சோ்ந்த லாரி ஓட்டுநா் ஜெகன் ஆகியோரை கைது செய்தனா்.
இதுகுறித்து களியக்காவிளை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா்.