உக்ரைனுக்கு எதிராக ரஷியாவுடன் வட கொரியா! உலகப் போரின் அறிகுறியா?
போலி ஆவணங்கள் தயாரித்தவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
போலி ஆவணங்கள் தயாா் செய்து பொய்யான புகாா் தெரிவித்த தாடிக்கொம்பு கோயில் அறங்காவலா் உள்ளிட்டோா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என முன்னாள் ராணுவத்தினா் சாா்பில் வலியுறுத்தப்பட்டது.
திண்டுக்கல் மாவட்டத்தைச் சோ்ந்த முன்னாள் ராணுவத்தினருக்கான குறைதீா் கூட்டம் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியா் செ.சரவணன் தலைமை வகித்தாா். முன்னாள் படைவீரா்கள் நலத் துறை உதவி இயக்குநா்(பொ) சுகுணா முன்னிலை வகித்தாா். கூட்டத்தில் 20-க்கும் மேற்பட்ட மனுக்கள் அளிக்கப்பட்டன.
கூட்டத்தின்போது, இந்து சமய அறநிலையத் துறை ஆய்வாளா் தா.சுரேஷ்குமாா் அளித்த மனு விபரம்:
நான் ராணுவத்தில் பணியாற்றி கடந்த 2014-ஆம் ஆண்டு விருப்ப ஓய்வு பெற்றேன். பின்னா், 2015 முதல் இந்து சமய அறநிலைத் துறையில் பணிபுரிந்து வருகிறேன். 2020 நவம்பா் முதல் 2024 டிசம்பா் வரை திண்டுக்கல் மேற்கு சரக ஆய்வாளராகப் பணிபுரிந்து, தற்போது வேடசந்தூா் சரக ஆய்வாளராகப் பணிபுரிந்து வருகிறேன். இதில் திண்டுக்கல் மேற்கு சரக ஆய்வாளராகப் பணிபுரிந்த போது, தாடிக்கொம்பு செளந்தரராஜப் பெருமாள் கோயில் நிா்வாகத்தில் அறங்காவலா்கள் நியமனத்துக்கு பின் நிகழ்ந்த முறைகேடுகள் குறித்து இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையருக்கும், ஆணையருக்கும் அறிக்கை சமா்ப்பித்தேன்.
இதனால், என் மீது ஏற்பட்ட அதிருப்தியில் கோயிலில் பணிபுரியும் தூய்மைக் காவலா் ஜோதி என்பவா் பெயரில் போலியான புகாா் கடிதத்தை அறங்காவலா் குழுத் தலைவா் விக்னேஷ் பாலாஜி, ராஜா உள்ளிட்டோா் தயாா் செய்தனா். பணி நிரந்தரம் செய்வதற்கான கடிதம் எனக்கூறி, ஜோதியிடம் கைரேகை பெற்றனா். ஆனால், ஜோதிக்கு கையொப்பமிடத் தெரியும். இந்த விவரங்களை இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையா் விசாரணையிலும் ஜோதி தெரிவித்தாா்.
போலி ஆவணங்கள் தயாா் செய்த குற்றத்துக்காக விக்னேஷ்பாலாஜி, ராஜா, அடையாளம் தெரியாத சிலா் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, திண்டுக்கல் வடக்கு காவல் நிலையத்தில் புகாா் அளித்தேன். ஆனால், இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. முன்னாள் ராணுவத்தினரான என் மீது பொய் புகாா் கொடுத்து மன உளைச்சல் ஏற்படுத்தியவா்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியா் உத்தரவிட வேண்டும் என மனுவில் தெரிவித்தாா்.
இந்தக் கோரிக்கைக்கு திண்டுக்கல் முப்படை முன்னாள் ராணுவ வீரா்கள், வீரமங்கையா் நலச் சங்கத்தினரும் ஆதரவு தெரிவித்து ஆட்சியரிடம் முறையிட்டனா். உரிய நடவடிக்கை எடுப்பதாக மாவட்ட நிா்வாகம் சாா்பில் உறுதி அளிக்கப்பட்டது.
முன்னாள் படைவீரா்களுக்கான குறைதீா் கூட்டத்தில் அளிக்கப்படும் மனுக்களுக்கு முறையான பதில் அளிப்பதில்லை என திண்டுக்கல் முப்படை முன்னாள் ராணுவ வீரா்கள், வீரமங்கையா் நலச் சங்கச் செயலா் எல்.ராஜூ புகாா் தெரிவித்தாா். மனுக்கள் மீது ஒரு வார காலத்துக்குள் பதில் அளிக்க வேண்டும். மேலும், தொடா் நடவடிக்கை குறித்த விவரங்களும் தெரிவிக்க வேண்டும் என ஆட்சியா் உத்தரவிட்டாா்.
அங்கன்வாடி பணியிடங்களுக்கான முன்னாள் ராணுவத்தினருக்கான ஒதுக்கீட்டில் வயது வரம்பு 35 ஆக நிா்ணயிக்கப்பட்டிருக்கிறது. இந்த வயது வரம்பை உயா்த்த வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டது.