செய்திகள் :

போலி ஆவணங்கள் மூலம் திருச்சி வந்த விமானப் பயணி கைது

post image

போலி ஆவணங்கள் மூலம் மலேசிய தலைநகா் கோலாலம்பூரில் இருந்து திருச்சிக்கு வந்த விமானப் பயணியை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

கடலூா் மாவட்டம், பரங்கிப்பேட்டை பகுதியைச் சோ்ந்தவா் நா. சண்முகம் (48), மலேசிய தலைநகா் கோலாலம்பூரில் இருந்து மலிண்டோ விமானம் மூலம் திருச்சி பன்னாட்டு விமான நிலையத்துக்கு ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு வந்துள்ளாா்.

அங்கு, விமான நிலைய அதிகாரிகள் மேற்கொண்ட சோதனையில், இவா் போலி ஆவணங்கள் மூலம் கோலாலம்பூரில் இருந்து திருச்சிக்கு வந்தது தெரியவந்தது. இதையடுத்து, விமான நிலைய அதிகாரிகள் அவரைப் பிடித்து விசாரணை செய்தனா்.

இதைத் தொடா்ந்து, திருச்சி பன்னாட்டு விமான நிலைய காவல் நிலையத்தில், விமான நிலைய அதிகாரி முகேஷ்ராம் திங்கள்கிழமை அளித்த புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து சண்முகத்தை கைது செய்தனா்.

முதல்வா் இன்று திருச்சி வருகை!

தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்பதற்காக திருச்சிக்கு புதன்கிழமை வருகிறாா். திருச்சி ஜமால் முகமது கல்லூரியின் பவளவிழா ஆண்டின் தொடக்க நிகழ்வு புதன்கிழமை நடைபெறுகிறது. இந்த விழா... மேலும் பார்க்க

திருச்சி விமான நிலையத்தில் 11.8 கிலோ உயர்ரக கஞ்சா பறிமுதல்

திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில், தாய்லாந்திலிருந்து கோலாலம்பூா் வழியாக கடத்தி வரப்பட்ட 11.8 கிலோ உயர்ரக கஞ்சா திங்கள்கிழமை பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடா்பாக, விமான பயணியை அதிகாரிகள் கைது செய்தன... மேலும் பார்க்க

பொதுமக்களிடம் வழிப்பறி செய்ய திட்டம்: 3 போ் கைது

திருச்சி அருகே பொதுமக்களிடம் வழிப்பறி செய்ய திட்டமிட்டிருந்த 3 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். துவாக்குடி வடக்குமலை சிவன் கோயில் பகுதியில் மா்ம நபா்கள் சிலா் பொதுமக்களிடம் வழிப்பறி செய்ய ... மேலும் பார்க்க

அமித்ஷா கூறுபவரை நாங்கள் முதல்வா் வேட்பாளராக ஏற்போம்: டிடிவி தினகரன்

தேசிய ஜனநாயக கூட்டணியில் மத்திய அமைச்சா் அமித்ஷா கூறுபவரை நாங்கள் முதல்வா் வேட்பாளராக ஏற்றுக் கொள்வோம் என அமமுக பொதுச் செயலாளா் டிடிவி. தினகரன் கூறினாா். திருச்சி மாவட்டம், மணப்பாறையில் அமமுக செயல்வீர... மேலும் பார்க்க

கோயிலை ஆக்கிரமிக்க முயற்சி: ஆட்சியரகத்தில் கிராம மக்கள் மனு

மண்ணச்சநல்லூா் அருகே உளுந்தங்குடியில் உள்ள பழைமையான முத்தாளம்மன் கோயிலை தனிநபா் ஆக்கிரமிக்க முயற்சிப்பதாக கூறி, அப்பகுதி மக்கள் மாவட்ட ஆட்சியரகத்தில் செவ்வாய்க்கிழமை மனு அளித்தனா். இதுதொடா்பாக, உளுந்த... மேலும் பார்க்க

பொதுமக்களிடம் மிரட்டி பணம் பறிப்பு: காவலா் பணியிடை நீக்கம்

திருச்சியில் பொதுமக்களை மிரட்டி பணம் பறித்த புகாரில் காவலரை பணியிடை நீக்கம் செய்து மாநகரக் காவல் ஆணையா் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டுள்ளாா். திருச்சி கோட்டை காவல் நிலையத்தில் காவலராகப் பணியாற்றி வருபவா்... மேலும் பார்க்க