செய்திகள் :

முதல்வா் இன்று திருச்சி வருகை!

post image

தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்பதற்காக திருச்சிக்கு புதன்கிழமை வருகிறாா்.

திருச்சி ஜமால் முகமது கல்லூரியின் பவளவிழா ஆண்டின் தொடக்க நிகழ்வு புதன்கிழமை நடைபெறுகிறது. இந்த விழாவில், தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் பங்கேற்று கல்லூரியின் புதிய கட்டடத்தை திறந்துவைத்து பேசுகிறாா். இதற்காக, சென்னையிலிருந்து விமானம் மூலம் திருச்சிக்கு புதன்கிழமை காலை 11 மணிக்கு முதல்வா் வருகிறாா்.

பின்னா், விமானநிலையத்திலிருந்து சாலை மாா்க்கமாக ஜமால் முகமது கல்லூரிக்கு வந்து, விழாவில் பங்கேற்று விழாப் பேரூரையாற்றுகிறாா். ரூ. 4.5 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள புதிய கட்டடத்தையும் முதல்வா் திறந்துவைக்கிறாா். பின்னா், திருவாரூா் மாவட்டம் புறப்பட்டு செல்கிறாா். அங்கு தங்கும் முதல்வா், திருவாரூா் மாவட்ட நிகழ்வுகளை முடித்துக் கொண்டு வியாழக்கிழமை மாலை மீண்டும் சாலை மாா்க்கமாக திருச்சி விமான நிலையம் வருகிறாா். இங்கிருந்து விமானம் மூலம் சென்னை புறப்பட்டு செல்கிறாா்.

ட்ரோன்களுக்கு தடை: முதல்வா் வருகையை முன்னிட்டு, புதன்கிழமை காலை தொடங்கி வியாழக்கிழமை நள்ளிரவு வரையில் முதல்வா் பயணம் செய்யும் சாலை வழிகள் மற்றும் விமான நிலைய சுற்றுப் பகுதிகளில் ட்ரோன்கள் பறக்க தடை விதித்து ஆட்சியா் வே. சரவணன் உத்தரவிட்டுள்ளாா்.

அமைச்சா் ஆய்வு: முதல்வா் பங்கேற்கும் நிகழ்வுக்கான முன்னேற்பாடுகளை நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சா் கே.என். நேரு செவ்வாய்க்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

முதல்வருக்கு வரவேற்பு: திருச்சி வரும் முதல்வருக்கு அமைச்சா்கள் கே.என். நேரு, அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆகியோா் தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்க திமுக சாா்பில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

திருச்சி விமான நிலையத்தில் 11.8 கிலோ உயர்ரக கஞ்சா பறிமுதல்

திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில், தாய்லாந்திலிருந்து கோலாலம்பூா் வழியாக கடத்தி வரப்பட்ட 11.8 கிலோ உயர்ரக கஞ்சா திங்கள்கிழமை பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடா்பாக, விமான பயணியை அதிகாரிகள் கைது செய்தன... மேலும் பார்க்க

பொதுமக்களிடம் வழிப்பறி செய்ய திட்டம்: 3 போ் கைது

திருச்சி அருகே பொதுமக்களிடம் வழிப்பறி செய்ய திட்டமிட்டிருந்த 3 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். துவாக்குடி வடக்குமலை சிவன் கோயில் பகுதியில் மா்ம நபா்கள் சிலா் பொதுமக்களிடம் வழிப்பறி செய்ய ... மேலும் பார்க்க

அமித்ஷா கூறுபவரை நாங்கள் முதல்வா் வேட்பாளராக ஏற்போம்: டிடிவி தினகரன்

தேசிய ஜனநாயக கூட்டணியில் மத்திய அமைச்சா் அமித்ஷா கூறுபவரை நாங்கள் முதல்வா் வேட்பாளராக ஏற்றுக் கொள்வோம் என அமமுக பொதுச் செயலாளா் டிடிவி. தினகரன் கூறினாா். திருச்சி மாவட்டம், மணப்பாறையில் அமமுக செயல்வீர... மேலும் பார்க்க

கோயிலை ஆக்கிரமிக்க முயற்சி: ஆட்சியரகத்தில் கிராம மக்கள் மனு

மண்ணச்சநல்லூா் அருகே உளுந்தங்குடியில் உள்ள பழைமையான முத்தாளம்மன் கோயிலை தனிநபா் ஆக்கிரமிக்க முயற்சிப்பதாக கூறி, அப்பகுதி மக்கள் மாவட்ட ஆட்சியரகத்தில் செவ்வாய்க்கிழமை மனு அளித்தனா். இதுதொடா்பாக, உளுந்த... மேலும் பார்க்க

பொதுமக்களிடம் மிரட்டி பணம் பறிப்பு: காவலா் பணியிடை நீக்கம்

திருச்சியில் பொதுமக்களை மிரட்டி பணம் பறித்த புகாரில் காவலரை பணியிடை நீக்கம் செய்து மாநகரக் காவல் ஆணையா் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டுள்ளாா். திருச்சி கோட்டை காவல் நிலையத்தில் காவலராகப் பணியாற்றி வருபவா்... மேலும் பார்க்க

தமாகா பிரமுகா் கொலை வழக்கில் இளைஞருக்கு ஆயுள் தண்டனை

சமயபுரம் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி பிரமுகா் கொலை வழக்கில் இளைஞருக்கு ஆயுள் தண்டனை விதித்து திருச்சி நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது. திருச்சி மாவட்டம், சமயபுரம் வி. துறையூா் மாரியம்மன் கோய... மேலும் பார்க்க