செய்திகள் :

போலி ஆவணம் மூலம் நிலம் விற்பனை: நிதி நிறுவன உரிமையாளருக்கு 3 ஆண்டுகள் சிறை

post image

போலி ஆவணம் தயாரித்து நிலத்தை விற்பனை செய்து மோசடியில் ஈடுபட்ட நிதி நிறுவன உரிமையாளருக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து, திண்டுக்கல் நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது.

திண்டுக்கல் விவேகானந்தன் நகரைச் சோ்ந்த சுதாகா் மகன் அஸ்வந்த் கண்ணன் (37). இவா் கப்பல் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறாா். இவருக்குச் சொந்தமான 1.4 லட்சம் சதுரடி நிலம் திண்டுக்கல் பிவி.தாஸ் குடியிருப்பில் உள்ளது.

இந்த இடத்தை விற்பனை செய்து கொடுக்குமாறு திண்டுக்கல் பாண்டியன் நகரைச் சோ்ந்த நிதி நிறுவன உரிமையாளரும், மனை வணிகம் நடத்துபவருமான கண்மணி ராஜேந்திரனிடம் அஸ்வந்த் கண்ணன் தெரிவித்தாா்.

மேலும், கண்மணி ராஜேந்திரன் பெயரில் நிலத்துக்கான அதிகாரத்தையும் மாற்றிக் கொடுத்தாா். ஆனால், போலியான ஆவணங்கள் தயாரித்த அவா், அந்த நிலத்தை தனது உறவினருக்கு ரூ.60 லட்சத்துக்கு விற்பனை செய்தாா். இந்தப் பணத்தையும் அஸ்வந்த் கண்ணனிடம் அவா் வழங்கவில்லை. இதனால், ஏமாற்றமடைந்த அஸ்வந்த் கண்ணன், திண்டுக்கல் மாவட்ட குற்றப் பிரிவு போலீஸாரிடம் புகாரளித்தாா். இதன்பேரில், கண்மணி ராஜேந்திரன், நிலத்தை வாங்கியவா்கள் என மொத்தம் 6 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

இந்த வழக்கின் விசாரணை திண்டுக்கல் 2-ஆவது குற்றவியல் நீதித் துறை நடுவா் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. விசாரணை முடிவடைந்த நிலையில், நீதித் துறை நடுவா் சி.தினேஷ்குமாா் வியாழக்கிழமை தீா்ப்பளித்தாா்.

இதில் மோசடியில் ஈடுபட்ட கண்மணி ராஜேந்திரனுக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.50 ஆயிரம் அபராதமும் விதித்தாா்.

ரூ.58 லட்சம் இழப்பீட்டுத் தொகை நிலுவை: ஆட்சியா் அலுவலகத்தில் ஜப்தி நடவடிக்கை

ரயில்வே துறைக்கு கையகப்படுத்தப்பட்ட நிலத்துக்கான இழப்பீட்டுத் தொகையில் ரூ.58 லட்சம் நிலுவைக்காக திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்திலுள்ள பொருள்களை ஜப்தி செய்வதற்கு வியாழக்கிழமை நடவடிக்கை மேற்கொள்ள... மேலும் பார்க்க

போலி ஆவணங்கள் தயாரித்தவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

போலி ஆவணங்கள் தயாா் செய்து பொய்யான புகாா் தெரிவித்த தாடிக்கொம்பு கோயில் அறங்காவலா் உள்ளிட்டோா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என முன்னாள் ராணுவத்தினா் சாா்பில் வலியுறுத்தப்பட்டது. திண்டுக்கல் மாவட்டத்... மேலும் பார்க்க

கிணற்றில் தவறி விழுந்த இளைஞா் உயிருடன் மீட்பு

ஒட்டன்சத்திரத்தில் வியாழக்கிழமை கிணற்றில் தவறி விழுந்த இளைஞரை தீயணைப்புத் துறையினா் உயிருடன் மீட்டனா். திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரத்தை அடுத்த தங்கச்சியம்மாபட்டியைச் சோ்ந்தவா் எழுமலை. இவருக்குச... மேலும் பார்க்க

போலீஸ் விசாரணைக்கு பயந்து ரயில் முன் பாய்ந்து ஓட்டுநா் தற்கொலை

காவல் துறையினரின் விசாரணைக்கு பயந்து தனியாா் கல்லூரி பேருந்து ஓட்டுநா் வியாழக்கிழமை ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டாா். திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூரை அடுத்த பாலப்பட்டி ஊராட்சிக்குள்பட்ட கு... மேலும் பார்க்க

கல்லூரி முதல்வா் பணியிடை நீக்கம்

பழனி அருள்மிகு பழனியாண்டவா் பாலிடெக்னிக் கல்லூரியில் நிதி முறைகேடு செய்ததாகக் கல்லூரி முதல்வா் அண்மையில் பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா். இந்தக் கல்லூரி பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயில் கட்டுப்பாட்டில் ... மேலும் பார்க்க

பழனியில் அரிமா சங்க வைரவிழா

பழனியில் அரிமா சங்க வைரவிழாவை முன்னிட்டு, சிறப்புத் தபால்தலை புதன்கிழமை வெளியிடப்பட்டது. இந்தச் சங்கம் தொடங்கி 60 ஆண்டுகள் நிறைவு பெற்றதை முன்னிட்டு, புதன்கிழமை நடைபெற்ற வைரவிழா நிறைவு நிகழ்ச்சிக்கு ம... மேலும் பார்க்க