செய்திகள் :

போலி இருதய சிகிச்சை நிபுணரிடம் சிகிச்சை பெற்ற 7 போ் உயிரிழப்பு! -மனித உரிமைகள் ஆணையம் விசாரணை

post image

மத்திய பிரதேச மாநிலம் தமோ மாவட்டத்தில் போலி இருதய சிகிச்சை நிபுணரிடம் சிகிச்சை பெற்ற 7 போ் உயிரிழந்ததாக புகாா் அளிக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து தேசிய மனித உரிமைகள் ஆணையம் (என்எச்ஆா்சி) விசாரணை மேற்கொள்ளவுள்ளதாக அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனா்.

தமோ மாவட்டத்தில் ஏப்ரல் 7-ஆம் தேதி முதல 9 -ஆம் தேதி வரை முகாமிட்டு என்எச்ஆா்சி அதிகாரிகள் விசாரணை நடத்தவுள்ளனா்.

இந்த சம்பவம் குறித்து தமோ மாவட்டத்தைச் சோ்ந்த நபா் ஒருவா் அளித்த புகாரில் கூறப்பட்டிருப்பதாவது: என்.ஜான் கேம் என்ற பெயருடைய மருத்துவா், தமோ மாவட்டத்தில் உள்ள மிஷனரி மருத்துவமனையில் பணிபுரிகிறாா். அவா் வெளிநாட்டில் பயிற்சி பெற்றவா் என தன்னை அடையாளப்படுத்திக் கொள்கிறாா்.

ஆனால் அவரது உண்மையான பெயா் விக்ரமாதித்ய யாதவ். பிரிட்டனைச் சோ்ந்த பிரபல இருதய சிகிச்சை நிபுணா்- பேராசிரியா் ஜான் கேமின் பெயரை தவறாக அவா் பயன்படுத்தி, நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்துள்ளாா். அவரது தவறான சிகிச்சையால் 7 போ் உயிரிழந்தனா் என தெரிவிக்கப்பட்டது.

இந்த புகாா் குறித்து என்எச்ஆா்சி உறுப்பினா் பிரியங்க் கனூங்கோ எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், ‘மிஷனரி மருத்துவமனையில் இருதய நோய் சிகிச்சை நிபுணா் எனக் கூறி போலி மருத்துவா் சிகிச்சையளித்துள்ள சம்பவம் தற்போது தெரியவந்துள்ளது.

அந்த மருத்துவமனை யில் பிரதமரின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தின்கீழும் (ஆயுஷ்மான் பாரத்) நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கப்படுகிறது. எனவே, இந்த சம்பவத்தில் மத்திய அரசு மூலம் வழங்கப்படும் காப்பீட்டு பணமும் தவறாக பயன்படுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து விசாரணை நடத்த தமோ மாவட்டத்தில் என்எச்ஆா்சி அதிகாரிகள் ஏப்ரல் 7 -ஆம் தேதி முதல் 9-ஆம் தேதி வரை தமோ மாவட்டத்தில் முகாமிடவுள்ளனா். இந்த சம்பவத்தை பற்றிய கூடுதல் தகவல் தெரிந்தால் விசாரணை அதிகாரிகளிடம் பொதுமக்கள் தெரிவிக்கலாம்’ என குறிப்பிட்டாா்.

வக்ஃப் உறுப்பினர் நியமனத்துக்கு இடைக்காலத் தடை!

புதிய சட்டத்தின்படி, வக்ஃப் வாரிய உறுப்பினர்களை நியமிக்க உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.மேலும், நிலம் கையகப்படுத்தல், உறுப்பினர்கள் நியமனம் தற்போதைய நிலையே தொடர வேண்டும் என்று இடைக்கால உத... மேலும் பார்க்க

மேற்கு வங்கம்.. நீக்கப்பட்ட ஆசிரியர்கள் பணியை தொடர உச்ச நீதிமன்றம் உத்தரவு

பணி நியமனத்தில் முறைகேடு நடந்ததாகக் கூறி, பணி நீக்கம் செய்து இந்த மாதத் தொடக்கத்தில் உத்தரவிடப்பட்ட நிலையில், மாணவர்களின் நலன் கருதி புதிய ஆசிரியர்கள் நியமிக்கப்படும்வரை இந்த ஆசிரியர்கள் பணியைத் தொடர ... மேலும் பார்க்க

பணத்தை வீணாக்க விரும்பவில்லை.. மனைவியைக் கொன்று, கணவர் தற்கொலை!

உத்தரப்பிரதேச மாநிலம் காஸியாபாத்தைச் சேர்ந்த ரியல்எஸ்டேட் டீலர், தனக்குப் புற்றுநோய் இருப்பதை அறிந்ததும், மனைவியைக் கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.குல்த... மேலும் பார்க்க

குவாலியரில் சைபர் மோசடி: ரூ.2.5 கோடியை இழந்த ஆசிரம செயலாளர்!

மத்தியப் பிரதேசத்தின் குவாலியர் மாவட்டத்தில் அமைந்துள்ள ராமகிருஷ்ணா மிஷன் ஆசிரமத்தின் செயலாளர் ஒருவர் சைபர் மோசடியில் சிக்கி ரூ. 2,5 கோடியை இழந்ததாக காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். நாடு முழுவது... மேலும் பார்க்க

ஜேஇஇ மெயின் தேர்வு முடிவு இன்று வெளியாகிறது?

ஐஐடி, என்ஐடி உள்ளிட்ட கல்வி நிறுவனங்களில் சேருவதற்காக இந்த ஆண்டு இரண்டாவது முறையாக நடத்தப்பட்ட ஜேஇஇ முதன்மைத் தேர்வுக்கான முடிவுகள் இன்று வெளியாகின்றன.ஜேஇஇ தேர்வை நடத்தும் தேசிய தேர்வு முகமை இன்று தேர... மேலும் பார்க்க

சத்தீஸ்கரில் 22 நக்சல்கள் கைது: வெடிபொருள்கள் பறிமுதல்!

சத்தீஸ்கரின் பிஜப்பூர் மாவட்டத்தில் மூன்று இடங்களில் 21 நக்சல்கள் கைது செய்யப்பட்டு அவர்களிடமிருந்து வெடிபொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர்.முன்னதாக கடந்த செவ்வாய்க்கிழமையன்று டெக... மேலும் பார்க்க