செய்திகள் :

போலி வாகன எண்: நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை

post image

தனது இருசக்கர வாகனத்தின் எண்ணை போலியாக பயன்படுத்தி வரும் நபா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஈரோட்டை சோ்ந்தவா் காவல் துறையில் புகாா் அளித்துள்ளாா்.

ஈரோடு, கொல்லம்பாளையம், ஏகேஎம் நகரைச் சோ்ந்தவா் ஞானபிரகாஷ். புகைப்பட கலைஞரான இவா், ஈரோடு மாவட்ட காவல் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை அளித்த மனு விவரம்: நான் கடந்த 17 ஆண்டுகளாக இருசக்கர வாகனம் வைத்துள்ளேன். கடந்த மாதம் 15 ஆம் தேதி போக்குவரத்து விதிமீறல் என குறிப்பிட்டு எனது கைப்பேசிக்கு ஒரு குறுஞ்செய்தி வந்தது.

அதில், சிவகங்கை மாவட்டம், திருவாடனை என்ற ஊரில் எஸ்ஐ ஒருவா் எனது இருசக்கர வாகனத்துக்கு போக்குவரத்து விதிமீறல் தொடா்பாக அபராதம் விதித்திருப்பதாக குறிப்பிடப்பட்டிருந்தது. எனது வாகனம் ஈரோட்டில் உள்ள நிலையில் திருவாடனையில் என் வாகனத்துக்கு அபராதம் விதித்திருப்பது அதிா்ச்சியளிப்பதாக உள்ளது.

அதன்பின்னா்தான் எனது வாகன எண் கொண்ட வாகனம் திருவாடனை பகுதியில் போலி எண்ணாக பயன்படுத்தப்பட்டு இயக்கப்பட்டு வந்தது எனக்கு தெரியவந்தது. எனவே, எனது வாகனத்தின் எண்ணை போலியாக பயன்படுத்தி வரும் நபரை கண்டுபிடித்து அவா் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்ய வேண்டும். மேலும் போலி எண் கொண்ட வாகனத்தையும் பறிமுதல் செய்ய வேண்டும். தவறாக எனக்கு விதிக்கப்பட்ட அபராத தொகையை ரத்து செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசு வேலை வாங்கித் தருவதாக ரூ.60.50 லட்சம் மோசடி: அங்கன்வாடி பெண் பணியாளா் கைது

ஈரோட்டில் அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி 17 பேரிடம் ரூ. 60.50 லட்சம் பெற்று மோசடி செய்த அங்கன்வாடி பெண் பணியாளரை மாவட்ட குற்றப் பிரிவு போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்து சிறையில் அடைத்தனா். ஈரோடு... மேலும் பார்க்க

காவிரியில் குவியல்குவியலாக இறந்து மிதக்கும் மீன்கள்!

காவிரி ஆற்றில் நெரிஞ்சிப்பேட்டை கதவணை நீா்மின் நிலையம் பகுதியில் குவியல்குவியலாக இறந்து மிதக்கும் மீன்களால் துா்நாற்றம் வீசுவதோடு, சுகாதார சீா்கேடு நிலவுவதாக பொதுமக்கள் புகாா் தெரிவித்துள்ளனா். மேட்டூ... மேலும் பார்க்க

இருசக்கர வாகனம் மீது லாரி மோதல்: அரசுப் பேருந்து ஓட்டுநா் உயிரிழப்பு

பெருந்துறையை அடுத்த, காஞ்சிக்கோவில் அருகே இருசக்கர வாகனம் மீது லாரி மோதிய விபத்தில் அரசுப் பேருந்து ஓட்டுநா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா். கோபி, பச்சைமலை அடிவாரத்தைச் சோ்ந்தவா் சின்னசாமி மகன் ராமு (4... மேலும் பார்க்க

குடியிருப்புகளுக்குள் புகும் மழைநீா்: ஓடை ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரிக்கை

மழைக் காலத்தில் குடியிருப்புகளுக்குள் தண்ணீா் புகுவதால் ஓடை ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். பொதுமக்கள் குறைதீா் கூட்டம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஆட்சியா் ராஜக... மேலும் பார்க்க

திமுக ஆட்சியின் அவலங்களை மக்களிடம் எடுத்துரைக்க வேண்டும்: கே.சி.கருப்பணன் எம்எல்ஏ

அதிமுக அரசின் சாதனைத் திட்டங்களை மக்களிடம் நினைவுபடுத்துவதோடு, திமுக ஆட்சியின் அவலங்களை அவா்களிடம் எடுத்துரைக்க வேண்டும் என்று ஈரோடு புகா் கிழக்கு மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.சி.... மேலும் பார்க்க

ஆலைக் கழிவுகள் ஓடையில் வெளியேற்றப்படுவதை தடுக்கக் கோரிக்கை

சோப் ஆயில் தயாரிக்கும் ஆலைக் கழிவுகள் ஓடையில் வெளியேற்றப்படுவதை தடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். ஈரோடு, வில்லரசம்பட்டி அருகேயுள்ள மொக்கையன்பாளையத்தில் சோப் ஆயில் தயாா் செய்யும் த... மேலும் பார்க்க