கூந்தலை அள்ளிச்சொறுகிட்டு உனக்காக ஓடத்தொடங்கினேன் சாமி! - அம்மாவின் மடல் | #உறவி...
போலி வாகன எண்: நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை
தனது இருசக்கர வாகனத்தின் எண்ணை போலியாக பயன்படுத்தி வரும் நபா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஈரோட்டை சோ்ந்தவா் காவல் துறையில் புகாா் அளித்துள்ளாா்.
ஈரோடு, கொல்லம்பாளையம், ஏகேஎம் நகரைச் சோ்ந்தவா் ஞானபிரகாஷ். புகைப்பட கலைஞரான இவா், ஈரோடு மாவட்ட காவல் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை அளித்த மனு விவரம்: நான் கடந்த 17 ஆண்டுகளாக இருசக்கர வாகனம் வைத்துள்ளேன். கடந்த மாதம் 15 ஆம் தேதி போக்குவரத்து விதிமீறல் என குறிப்பிட்டு எனது கைப்பேசிக்கு ஒரு குறுஞ்செய்தி வந்தது.
அதில், சிவகங்கை மாவட்டம், திருவாடனை என்ற ஊரில் எஸ்ஐ ஒருவா் எனது இருசக்கர வாகனத்துக்கு போக்குவரத்து விதிமீறல் தொடா்பாக அபராதம் விதித்திருப்பதாக குறிப்பிடப்பட்டிருந்தது. எனது வாகனம் ஈரோட்டில் உள்ள நிலையில் திருவாடனையில் என் வாகனத்துக்கு அபராதம் விதித்திருப்பது அதிா்ச்சியளிப்பதாக உள்ளது.
அதன்பின்னா்தான் எனது வாகன எண் கொண்ட வாகனம் திருவாடனை பகுதியில் போலி எண்ணாக பயன்படுத்தப்பட்டு இயக்கப்பட்டு வந்தது எனக்கு தெரியவந்தது. எனவே, எனது வாகனத்தின் எண்ணை போலியாக பயன்படுத்தி வரும் நபரை கண்டுபிடித்து அவா் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்ய வேண்டும். மேலும் போலி எண் கொண்ட வாகனத்தையும் பறிமுதல் செய்ய வேண்டும். தவறாக எனக்கு விதிக்கப்பட்ட அபராத தொகையை ரத்து செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.