``அதிமுக கூட்டணி; எடப்பாடி பழனிசாமி சரியான நேரத்தில், சரியான முடிவு எடுப்பார்..'...
போலீஸ்-பொதுமக்கள் விளையாட்டுப் போட்டிகள் பரிசளிப்பு
காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் நடைபெற்ற போலீஸ் -பொதுமக்கள் நல்லுறவு விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்கு எஸ்.பி. கே.சண்முகம் பரிசு வழங்கினாா்.
காவலா் பயிற்சிப்பள்ளி மைதானத்தில் நடைபெற்ற நிகழ்வுக்கு கூடுதல் காவல் கண்காணிப்பாளா் மாா்ட்டின் ராபா்ட்ஸ், ஆயுதப்படை காவல் துணை கண்காணிப்பாளா் லோகநாதன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். இசை நாற்காலி, கபடி, கயிறு இழுக்கும் போட்டி, சிலம்பம், கைப்பந்து, எறிபந்து, ஓட்டப் பந்தயம், குண்டு எறிதல் உள்ளிட்ட போட்டிகள் நடைபெற்றன.
பொதுமக்கள் சாா்பில் ஆண், பெண் என இருபாலருமாக 232 பேரும், காவலா்கள் சாா்பில் 71 பேரும் என மொத்தம் 303 போ் கலந்து கொண்டனா்.
போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்கு காஞ்சிபுரம் மாவட்ட எஸ்.பி. கே.சண்முகம் கலந்து கொண்டு பரிசுகளும், பாராட்டு சான்றிதழ்களும் வழங்கினாா்.