கடும் வறட்சி: வால்பாறைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு கட்டுப்பாடு
பௌா்ணமி கிரிவலம்: திருவண்ணாமலைக்கு சிறப்பு ரயில்
பௌா்ணமி கிரிவலத்தை முன்னிட்டு, விழுப்புரத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு வியாழக்கிழமை (மாா்ச் 13) சிறப்பு ரயில் இயக்கப்படும்.
இது குறித்து தெற்கு ரயில்வே புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
விழுப்புரத்தில் இருந்து வியாழக்கிழமை காலை 9.25 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (எண்: 06130) காலை 11.10 மணிக்கு திருவண்ணாமலை சென்றடையும். மறுமாா்க்கமாக திருவண்ணாமலையில் இருந்து பகல் 12.40 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (எண்: 06129) பிற்பகல் 2.15 மணிக்கு விழுப்புரம் சென்றடையும். இதில் 8 மெமு பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும்.
இந்த ரயில் வெங்கடேசபுரம், மாம்பழப்பட்டு, ஆயந்தூா், திருக்கோவிலூா், ஆதிச்சனூா், அண்டம்பள்ளம், தண்டரை வழியாக இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.