செய்திகள் :

மகன் கொடுத்த யோசனை: மியாசாகி மாம்பழத்தால் லட்சாதிபதியான விவசாயி

post image

ஜப்பானில் விளையும் தனித்துவமான மியாசாகி மாம்பழக் கன்றுகளை வாங்கிவந்து இரண்டு ஆண்டுகளாக பராமரித்து வந்த தெலங்கானா விவசாயி, தற்போது லட்சாதிபதியாகியிருப்பதுதான் வைரலாகியிருக்கிறது.

பொதுவாக ஜப்பானில் மட்டுமே விளையும் இந்த மியாசாமி மாம்பழம், நிறத்தாலும் சுவையாலும் லட்சக் கணக்கில் விலை போகும் மாம்பழ வகையில் ஒன்றாக விளங்குகிறது.

தெலங்கானாவைச் சேர்ந்த சுமன்பாய் என்ற விவசாயியின் மகன் பிலிப்பின்ஸிலிருந்து மியாசாகி மாம்பழங்களை வாங்கி வந்து தனது தாயிடம் கொடுத்து வளர்க்குமாறு சொல்லயிருக்கிறார்.

கண்ணும் கருத்துமாக இரண்டு ஆண்டுகள் அந்த மாமரங்களைப் பராமரித்து வந்த விவசாயி, தற்போது அதில் விளைந்த மாம்பழங்களை நல்ல விலைக்கு விற்றுவருகிறார்.

போஸி கிராமத்தில், வளர்ந்துள்ள இந்த மியாசாமி மாம்பழங்கள் ஒன்று ரூ.10 ஆயிரம் என்ற அளவில் விற்பனை செய்யப்பட்டு வருவதாகவும் கடந்த வாரம் அப்பகுதியில் நடந்த வேளாண் கண்காட்சியில், இவரது மாம்பழங்கள்தான் பலரது கவனத்தையும் ஈர்த்து நல்ல வருவாய்க்கு வழிவகுத்ததாகவும் கூறப்படுகிறது.

யுபிஎஸ்இ தேர்வுக்கு தயாராக வந்த நந்த்கிஷோர், மியாசாகி மாம்பழங்கள் குறித்து அறிந்து, அதனை ஆன்லைன் மூலம் ஒரு மரக்கன்று ரூ.6,500 என்ற விலை கொடுத்து வாங்கியிருக்கிறார்.

அதனைப் பராமரிக்கும் விதம் என அனைத்தையும் ஆன்லைன் மூலம் அறிந்துகொண்டு அதற்கேற்ப பராமரித்துவந்துள்ளனர். ஜப்பானின் வெப்பநிலைக்கு ஏற்ப வளரும் இந்த மியாசாகி மாமரங்களை வெளியில் வளர்ப்பது மிகவும் கடினம் என்பதால், அதற்கு தகுந்தார் போல பல விஷயங்களையும் மாற்றியமைத்து மரம் வளர்க்கப்பட்டிருப்பதாகவும் இதுவரை 10 முதல் 12 மாம்பழங்கள் காய்த்திருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தியாவில் 97 லட்சம் பயனர்களின் வாட்ஸ்ஆப் கணக்குகள் முடக்கம்!

இந்தியாவில் கடந்த பிப்ரவரி மாதத்தில் மட்டும் 97 லட்சம் பயனர்களின் வாட்ஸ்ஆப் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது.வாட்ஸ்ஆப் நிறுவனம் மாதாந்திர பாதுகாப்பு அறிக்கையை இன்று வெளியிட்டது. அந்த அறிக்கையில், முடக்கப்... மேலும் பார்க்க

என்ன, தண்ணீருக்கு அடுத்தபடியாகக் குடிக்கும் பானம் இதுவா?

நீரின்றி அமையாது உலகு என்ற வாக்கியமே, நீரின் முக்கியத்துவத்தை நெற்றிப் பொட்டில் அடித்ததுபோல சொல்ல ஏதுவானது. அப்படிப்பட்ட தண்ணீரை உடல்நலப் பிரச்னை இல்லாத சாதாரண மக்கள் நாள்தோறும் குறைந்தபட்சம் ஒரு அரை ... மேலும் பார்க்க

இந்தியா முழுவதும் 13,000 சதுர கி.மீ. காடுகள் ஆக்கிரமிப்பு!

இந்தியா முழுவதும் 25 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 13,000 சதுர கி.மீ. காடுகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்தியா முழுக்க 7,506.48 சதுர கி.மீ. காடுகள் ஆக்கிரமிப்பி... மேலும் பார்க்க

அம்பானியின் மகன் இஸட் பிரிவு பாதுகாப்புடன் 5-ஆவது நாளாக நடைப்பயணம்! எதற்காக?

புது தில்லி: இந்தியாவின் கோடீஸ்வர தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானி இஸட் பிரிவு பாதுகாப்புடன் நடைப்பயணம் மேற்கொண்டுள்ளார். அவர் தமது 30-ஆவது பிறந்தநாளை வரும் ஏப். 10-ஆம் தேதி கொண்டாடுவ... மேலும் பார்க்க

எஸ்பிஐ வங்கி ஏடிஎம் உள்ளிட்ட சேவையில் சிக்கல்..

எஸ்பிஐ வங்கியில் கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள், ஏப். 1ஆம் தேதி காலையில் இருந்து பகல் வரை பணப்பரிமாற்றம் உள்ளிட்ட சில சேவைகளில் சிக்கலை சந்தித்துள்ளதாகப் புகார்கள் எழுந்துள்ளன.மொபைல் வங்கி, ஏட... மேலும் பார்க்க

நான் ஒரு யோகி.. அரசியல் முழு நேர வேலையல்ல.. சொன்ன முதல்வர் யார்?

புது தில்லி: தன்னுடைய முதல் அடையாளம் யோகி என்றும், தனது கடமை, உத்தரப்பிரதேச மக்களுக்கு சேவையாற்றுவது என்றும் முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறியிருக்கிறார்.நான் ஒரு யோகி என்றும், அரசியல் எனக்கு முழு நேர வே... மேலும் பார்க்க