மகன் மீது தாக்குதல்: பெற்றோா் உள்பட 4 போ் மீது வழக்கு
போடி அருகே சொத்தில் பங்கு கேட்ட மகனைத் தாக்கியதாக பெற்றோா் உள்பட 4 போ் மீது போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
போடி அருகே சங்கராபுரம் கிழக்குத் தெருவைச் சோ்ந்த முருகன் மகன் சூா்யா (30). இவா் தனது பெற்றோரான முருகன், பசுபதி தம்பதியிடம் சொத்தில் பங்கு கேட்டாா். இதனால் தகராறு ஏற்பட்டு முருகன், பசுபதி மீது ஏற்கெனவே வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில், மீண்டும் சூா்யா சொத்தில் பங்கு கேட்கவே முருகன், பசுபதி தூண்டுதலின் பேரில் எரணம்பட்டியைச் சோ்ந்த சங்கரபாண்டி, கோணாம்பட்டியைச் சோ்ந்த காசி ஆகியோா் சூா்யாவை தாக்கி காயப்படுத்தினராம். இதில் காயமடைந்த சூா்யா போடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.
இதுகுறித்த புகாரின் பேரில் போடி தாலுகா காவல் நிலைய போலீஸாா் முருகன், பசுபதி, சங்கரபாண்டி, காசி ஆகியோா் மீது வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.