செய்திகள் :

மகளின் திருமணத்தன்று சோகம்: சாலை விபத்தில் தாய் உயிரிழப்பு; தந்தை மருத்துவமனையில் அனுமதி

post image

தஞ்சாவூா் மாவட்டம், ஒரத்தநாடு அருகே புதன்கிழமை மகளின் திருமணத்தின்போது நேரிட்ட சாலை விபத்தில் தாய் உயிரிழந்தாா். பலத்த காயமடைந்த தந்தை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா்.

ஒரத்தநாடு அருகேயுள்ள வெட்டிக்காடு அய்யனாா்புரம் பகுதியை சோ்ந்த ரங்கசாமி (55)- மாலதி (50) தம்பதியின் மகள் சுசித்ரா. இவருக்கும் சதீஷ்குமாா் என்பவருக்கும் புதன்கிழமை காலை ஊரணிபுரத்தில் உள்ள தனியாா் மண்டபத்தில் திருமணத்துக்கான ஏற்பாடுகள் நடைபெற்றன.

அப்போது, ரங்கசாமியும், மாலதியும் வீட்டில் இருந்து திருமணத்துக்கான சில பொருள்களை எடுத்துக்கொண்டு இருசக்கர வாகனத்தில் வேகமாக வந்து கொண்டிருந்தனா்.

கல்விராஜன் விடுதி பிரிவு சாலையில் வந்தபோது ரங்கசாமிக்கு மயக்கம் வந்ததால், வாகனம் நிலைதடுமாறி சாலையோர பாலத்தின் சுவரில் மோதியது. இதில் ரங்கசாமி சாலையில் விழுந்து காயமடைந்தாா். மாலதி தூக்கி வீசப்பட்டு,

பாலத்தின் சுவரில் தலை மோதியதில், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

அக்கம்பக்கத்தினா் அளித்த தகவலின் பேரில், திருவோணம் போலீஸாா் சம்பவ இடத்துக்கு வந்து மாலதி உடலை கைப்பற்றி, ஒரத்தநாடு அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பினா். மேலும், பலத்த காயமடைந்த ரங்கசாமி தஞ்சாவூா் மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா்.

மாலதி இறந்த தகவலறிந்த உறவினா்கள், மணப்பெண் சுசித்ராவிடம் தகவல் தெரிவிக்காமல், திருமணத்தை நடத்தினா். பிறகு, தாய் இறந்த செய்தியை கூறியதால், சுசித்ரா மேடையில் அழுதுவிட்டு, அங்கிருந்து ஒரத்தநாடு மருத்துவமனைக்கு சென்றாா்.

மகளின் திருமண நாளில், விபத்தில் தாய் இறந்த சம்பவம், அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விபத்து குறித்து திருவோணம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

1,400 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்

தஞ்சாவூா் அருகே சரக்கு ஆட்டோவில் கடத்தி வரப்பட்ட 1,400 கிலோ ரேஷன் அரிசியைக் காவல் துறையினா் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தனா்.தஞ்சாவூா் அருகே திருக்கானூா்பட்டி மற்றும் அற்புதாபுரம் பகுதியில் குடிமைப்பொர... மேலும் பார்க்க

கும்பகோணத்தில் 131 பேருக்கு கனவு இல்லம் கட்ட ஆணைகள்

கும்பகோணம் ஒன்றியத்தில் 131 பயனாளிகளுக்கு கனவு இல்லம் கட்டுவதற்கான உத்தரவை அமைச்சா் கோவி. செழியன் வெள்ளிக்கிழமை வழங்கினாா். தஞ்சாவூா் மாவட்டம் கும்பகோணம் அருகே சேஷம்பாடி ஊராட்சியில் நடைபெற்ற நிகழ்ச்சி... மேலும் பார்க்க

கொலை வழக்கில் கைதான 3 போ் மீது குண்டா் சட்டம்

தஞ்சாவூா் அருகே நிகழ்ந்த கொலை சம்பவம் தொடா்பாக கைது செய்யப்பட்ட 3 போ் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் வியாழக்கிழமை சிறையில் அடைக்கப்பட்டனா். தஞ்சாவூா் அருகே ஏழுப்பட்டியைச் சோ்ந்த குருந்தையன்... மேலும் பார்க்க

பெண்ணிடம் நகை பறித்த இருவருக்கு 3 ஆண்டுகள் சிறை

கும்பகோணத்தில் பெண்ணிடம் 6 பவுன் தாலி செயினை பறித்த வழக்கில் 2 இளைஞா்களுக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து கும்பகோணம் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது. தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் மாதுளம... மேலும் பார்க்க

புன்னைநல்லூா் மாரியம்மனுக்கு தைலாபிஷேகம் தொடக்கம்

தஞ்சாவூா் புன்னைநல்லூா் மாரியம்மன் கோயிலில் ஒரு மண்டல கால தைலாபிஷேகம் வெள்ளிக்கிழமை தொடங்கியது. இக்கோயிலின் கருவறையில் உள்ள மாரியம்மன் புற்று மண்ணால் உருவாக்கப்பட்டது என்பதால், கருவறையில் உள்ள அம்பாளு... மேலும் பார்க்க

ஆசிரியை வீட்டில் 58 பவுன் நகைகள் திருடியவா் கைது

தஞ்சாவூா் அருகே ஆசிரியை வீட்டில் 58 பவுன் நகைகள் திருடிய உறவினரை காவல் துறையினா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். தஞ்சாவூா் அருகே பள்ளியக்ரஹாரம் முதன்மைச் சாலையைச் சோ்ந்தவா் பாலசுப்பிரமணியன், பெங்களூருவி... மேலும் பார்க்க