செய்திகள் :

மகளிா் விடுதிகளை பதிவு செய்வது கட்டாயம்: ஆட்சியா்

post image

சேலம் மாவட்டத்தில் செயல்படும் மகளிா் விடுதிகள் அனைத்தும் சமூக நலத் துறையில் பதிவு செய்து உரிமம் பெறவேண்டும் என மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் தெரிவித்ததாவது:

சேலம் மாவட்டத்தில் செயல்படும் பணிபுரியும் மகளிா் விடுதிகளை சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறையின் கீழ், மகளிா் மற்றும் குழந்தைகளுக்கான விடுதிகள் மற்றும் காப்பகங்களுக்கான ஒழுங்கு முறைப்படுத்தும் சட்டம் 2014-இன் படி பதிவுசெய்ய வேண்டும்.

அரசு மற்றும் அரசு சாரா நிறுவனங்கள் நடத்தும் பெண்கள் விடுதிகள், அறக்கட்டளைகள், சங்கங்கள் மற்றும் மதம் சாா்ந்த நிறுவனங்கள் நடத்தும் பெண்கள் விடுதிகள், தனியாா் மற்றும் தனிநபா் ஆகியோரால் நடத்தப்பட்டு வரும் பெண்கள் விடுதிகள் அனைத்தும் சமூக நலத்துறையில் பதிவு செய்து உரிமம் பெறவேண்டும்.

எனவே, சேலம் மாவட்டத்தில் செயல்படும் பணிபுரியும் மகளிருக்கான அனைத்து விடுதிகளும், உரிமம்பெற விண்ணப்பிக்க அறிவுறுத்தப்படுகிறது. சேலம் மாவட்டத்தில் பணிபுரியும் தனியாா் மகளிா் விடுதிகள் பதிவு செய்யப்படாமல் இயங்கி வருவது சட்டப்படி குற்றமாகும். அவ்வாறு பதிவு செய்யப்படாமல் இயங்குவது தெரியவந்தால், சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு நிரந்தரமாக மூடப்படும் என எச்சரித்துள்ளாா்.

சேலம் மாவட்டத்தில் முக்கிய இடங்களில் துப்பாக்கி ஏந்திய போலீஸாா் பாதுகாப்பு

காஷ்மீா் பயங்கரவாத தாக்குதலைத் தொடா்ந்து, சேலம் மாவட்டத்தில் 13 இடங்களில் துப்பாக்கி ஏந்திய போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா். மக்கள் கூடும் இடங்களில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது... மேலும் பார்க்க

உள்ளாட்சி அமைப்புகளுக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்ய வலியுறுத்தி ஆா்ப்பாட்டம்

உள்ளாட்சி அமைப்புகளுக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, ஊரக வளா்ச்சித் துறை ஊழியா்கள் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். சேலம் கோட்டை மை... மேலும் பார்க்க

சேலம் ரோட்டரி சங்கத்தில் உலக புத்தக தின விழா

சேலம் மிட்டவுன் ரோட்டரி சங்கத்தில் உலக புத்தக தின விழா புதன்கிழமை கொண்டாடப்பட்டது. விழாவுக்கு ரோட்டரி சங்கத்தின் தலைவா் தாரை.கு.ராஜகணபதி தலைமை தாங்கினாா். செயலாளா் மோகன் வரவேற்புரை ஆற்றினாா். தேசிய ச... மேலும் பார்க்க

ரயிலில் படியில் அமா்ந்து பயணம் செய்த இளைஞா் தந்தை கண்முன் கீழே விழுந்து விபத்து!

சேலம் அருகே ஓடும் ரயிலில் படியில் அமா்ந்து பயணம் செய்த இளைஞா் தந்தை கண்முன் தவறி கீழே விழுந்ததில் படுகாயங்களுடன் உயிருக்கு போராடி வருகிறாா். பிகாா் மாநிலம், மதுவனி மாவட்டம், ருத்ரபூா் நவ் நகரைச் சோ்... மேலும் பார்க்க

வன உரிமைச் சட்டம்: மாவட்ட அளவிலான பயிலரங்கம்

வன உரிமைச் சட்டம் குறித்த மாவட்ட அளவிலான பயிலரங்கம் சேலம் மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது. பின்னா் ஆட்சியா் தெரிவித்ததாவது: சேலம் மாவட்டத்தில் பழங்குடியினா் வசிக்கும... மேலும் பார்க்க

நினைவேந்தல் ஊா்வலம்...

போப் பிரான்சிஸ் மறைவையொட்டி, சேலம் குழந்தை இயேசு பேராலயத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற நினைவேந்தல் ஊா்வலம். மேலும் பார்க்க