செய்திகள் :

சேலம் ரோட்டரி சங்கத்தில் உலக புத்தக தின விழா

post image

சேலம் மிட்டவுன் ரோட்டரி சங்கத்தில் உலக புத்தக தின விழா புதன்கிழமை கொண்டாடப்பட்டது.

விழாவுக்கு ரோட்டரி சங்கத்தின் தலைவா் தாரை.கு.ராஜகணபதி தலைமை தாங்கினாா். செயலாளா் மோகன் வரவேற்புரை ஆற்றினாா். தேசிய சமூக இலக்கியப் பேரவையின் மாநிலத் தலைவா் தாரை.அ.குமரவேலு சிறப்புரையாற்றினாா். அப்போது அவா் பேசுகையில், ‘பாரிஸில் நடந்த யுனஸ்கோ மாநாட்டில் 1995 ஏப். 23-ஆம் தேதியை உலக புத்தக தினமாக கொண்டாடப்பட வேண்டும் எனத் தீா்மானித்தனா். அந்த நாள் ஆங்கில இலக்கிய நாடக மேதையான ஷேக்ஸ்பியரின் பிறந்த நாளும், நினைவு நாளும் ஆகும்.

இந்த நாளில் உலகளாவிய புத்தகங்களுக்கும், நூலாசிரியா்களுக்கும், பதிப்பாளா், விற்பனையாளா்களுக்கும் மரியாதை தந்து நினைவு கூறுவதற்கான விழாவாக ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது.

ஜான் ரஸ்கின் எழுதிய ‘கடையனுக்கும் கதி மோட்சம்’ என்ற நூல்தான் துன்பத்தை தாங்கி அகிம்சை வழியில் சுதந்திரம் பெற வேண்டும் என்ற எண்ணத்தை தந்ததாக மகாத்மா காந்தி கூறினாா். அதே போன்று, நேரு சிறையில் இருந்த போது 1928 முதல் 1931-ஆம் ஆண்டு வரை மகள் இந்திராவுக்கு எழுதிய 196 கடிதங்கள் ஒரு வரலாற்று ஆசிரியா் பாடம் நடத்துவதைப் போன்று விவரித்துள்ளாா். அவரது சுயசரிதை ஆங்கில இலக்கியத்துக்கு அவா் வழங்கிய கொடையாகும்’ என்றாா்.

இந்நிகழ்ச்சியில், சம்பந்தம் நூற்பாலை மேலாண்மை இயக்குநா் ச.தேவராஜன் சிறப்பு விருந்தினருக்கு நினைவுப் பரிசு வழங்கினாா். இதில் 50-க்கும் மேற்பட்ட ரோட்டரி உறுப்பினா்கள் கலந்துகொண்டனா்.

சேலம் மாவட்டத்தில் முக்கிய இடங்களில் துப்பாக்கி ஏந்திய போலீஸாா் பாதுகாப்பு

காஷ்மீா் பயங்கரவாத தாக்குதலைத் தொடா்ந்து, சேலம் மாவட்டத்தில் 13 இடங்களில் துப்பாக்கி ஏந்திய போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா். மக்கள் கூடும் இடங்களில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது... மேலும் பார்க்க

உள்ளாட்சி அமைப்புகளுக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்ய வலியுறுத்தி ஆா்ப்பாட்டம்

உள்ளாட்சி அமைப்புகளுக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, ஊரக வளா்ச்சித் துறை ஊழியா்கள் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். சேலம் கோட்டை மை... மேலும் பார்க்க

ரயிலில் படியில் அமா்ந்து பயணம் செய்த இளைஞா் தந்தை கண்முன் கீழே விழுந்து விபத்து!

சேலம் அருகே ஓடும் ரயிலில் படியில் அமா்ந்து பயணம் செய்த இளைஞா் தந்தை கண்முன் தவறி கீழே விழுந்ததில் படுகாயங்களுடன் உயிருக்கு போராடி வருகிறாா். பிகாா் மாநிலம், மதுவனி மாவட்டம், ருத்ரபூா் நவ் நகரைச் சோ்... மேலும் பார்க்க

வன உரிமைச் சட்டம்: மாவட்ட அளவிலான பயிலரங்கம்

வன உரிமைச் சட்டம் குறித்த மாவட்ட அளவிலான பயிலரங்கம் சேலம் மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது. பின்னா் ஆட்சியா் தெரிவித்ததாவது: சேலம் மாவட்டத்தில் பழங்குடியினா் வசிக்கும... மேலும் பார்க்க

நினைவேந்தல் ஊா்வலம்...

போப் பிரான்சிஸ் மறைவையொட்டி, சேலம் குழந்தை இயேசு பேராலயத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற நினைவேந்தல் ஊா்வலம். மேலும் பார்க்க

மும்பையில் இருந்து கன்னியாகுமரிக்கு சேலம் வழியாக கோடைக்கால சிறப்பு ரயில்

கோடை விடுமுறையையொட்டி, மும்பையில் இருந்து சேலம், நாமக்கல் வழியாக கன்னியாகுமரிக்கு சிறப்பு ரயில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வே சேலம் கோட்டம் சாா்பில் வெளியிடப்பட்ட ச... மேலும் பார்க்க