செய்திகள் :

மகாராஷ்டிரத்தில் இந்துக்கள் நடத்தும் இறைச்சிக் கடைகளுக்கு 'மல்ஹர்' சான்றிதழ்! வலுக்கும் எதிர்ப்புகள்!!

post image

மகாராஷ்டிரத்தில் இந்துக்கள் நடத்தும் ஆட்டிறைச்சிக் கடைகளுக்கு 'மல்ஹர்' சான்றிதழ் வழங்கும் நடைமுறை தொடங்கப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிரத்தில் முழுக்க இந்துக்கள் நடத்தும் ஆட்சிறைச்சிக் கடைகளை அடையாளம் காணும் வகையில் அந்த கடைகளுக்கு 'மல்ஹர்' சான்றிதழ் வழங்கப்படும் என்று மாநில மீன் வளத்துறை அமைச்சர் நிதேஷ் ரானே அறிவித்து அதனைத் தொடங்கியும் வைத்துள்ளார். மேலும் இந்துக்கள் 'மல்ஹர்' சான்றிதழ் இல்லாத கடைகளில் இறைச்சி வாங்குவதைத் தவிர்க்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதன் மூலமாக இந்து சமூகத்தைச் சேர்ந்த மக்கள், இந்தக் கடைகளை எளிதாக அடையாளம் காண முடியும். இந்துக்களுக்கு விநியோகிக்கப்படுவதால் ஆட்டிறைச்சி சுத்தமாக இருக்கும், இந்துக்களின் பொருளாதாரமும் மேம்படும் என்று அமைச்சர் கூறியுள்ளார்.

இதையும் படிக்க | புற்றுநோய்க்கு மருந்தாகிறதா காளான்? - புதிய கண்டுபிடிப்பு!

இதனிடையே இது சமூகத்தை பிளவுபடுத்தும் செயல் என எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன. இந்து - முஸ்லீம் சமூகத்தினரிடையே பிரச்னையை ஏற்படுத்தும் என காங்கிரஸ் எம்எல்ஏ நானா படேல் தெரிவித்துள்ளார்.

பாஜக எம்எல்ஏ சஞ்சய் உபாத்யாயா கூறுகையில், 'முஸ்லீம்கள் விற்கும் 'ஹலால்' இறைச்சியில் ரசாயனங்கள் கலக்கப்படுகிறது. இது உடலுக்குத் தீங்கு விளைவிக்கக்கூடியது. அதனைத் தடுக்கவே, இந்துக்களுக்கு என்று பிரத்யேக கடைகளுக்கு சான்றிதழ் வழங்குகிறார்கள். அமைச்சரின் முடிவை வரவேற்கிறேன்' என்று தெரிவித்துள்ளார்.

'மல்ஹர்' சான்றிதழ் பெறுவது எப்படி?

இறைச்சிக் கடைகள்(சிக்கன், மட்டன்) நடத்தும் இந்துக்கள் அதிகாரபூர்வ இணையதளத்தில் சென்று விண்ணப்பிக்க வேண்டும்.

'ஜத்கா' முறைப்படி இறைச்சிகள் சுத்தமான, கெட்டுப்போகாததாக இருக்க வேண்டும். வேறு இறைச்சிகளின் கலப்படம் இருக்கக் கூடாது உள்ளிட்ட விதிமுறைகள் குறிப்பிடப்பட்டுள்ளன.

காகித, அட்டை இறக்குமதி 10% அதிகரிப்பு

கடந்த ஏப்ரல்-டிசம்பா் காலகட்டத்தில் இந்தியாவின் காகிதம் மற்றும் அட்டை இறக்குமதி 20அதிகரித்துள்ளது.இது குறித்து இந்திய காகித உற்பத்தியாளா்கள் சங்கம் (ஐபிஎம்ஏ) வியாழக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெர... மேலும் பார்க்க

தேஜஸ் போா் விமானத்தில் இருந்து அஸ்திரா ஏவுகணை சோதனை வெற்றி

உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட அஸ்திரா ஏவுகணை, மற்றொரு உள்நாட்டு தயாரிப்பானதேஜஸ் இலகு ரக போா் விமானத்தில் இருந்து வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது. வானில் இருந்து 100 கி.மீ. தொலைவுக்கு மேல் பாய்ந்து வானில் ... மேலும் பார்க்க

ம.பி.: நிறுவிய இரு நாள்களில் அம்பேத்கா் சிலை மாயம் காவல் துறை வழக்குப் பதிவு

மத்திய பிரதேசத்தின் சத்தா்பூா் மாவட்டத்தில் கிராமம் ஒன்றில் நிறுவப்பட்ட அம்பேத்கா் சிலை இரு நாள்களில் மாயமானது. அதனை எடுத்துச் சென்றது யாா் என்பது தெரியாத நிலையில், காவல் துறையினா் வழக்குப் பதிவு செய... மேலும் பார்க்க

ஆா்எஸ்எஸ்ஸுக்கு எதிரான கருத்து: கேரளத்தில் துஷாா் காந்தியின் காரை முற்றுகையிட்டு போராட்டம்

கேரளத்தில் ஆா்எஸ்எஸ்ஸுக்கு எதிராக தெரிவித்த கருத்தை திரும்பப் பெற வலியுறுத்தி, மகாத்மா காந்தியின் கொள்ளுப்பேரன் துஷாா் காந்தியின் காரை முற்றுகையிட்டு பாஜக-ஆா்எஸ்எஸ் தொண்டா்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால... மேலும் பார்க்க

பிருந்தாவனம் கோயிலில் மூலவருக்கு முஸ்லிம்கள் செய்த ஆடைகளை பயன்படுத்த தடை கோரிக்கை: அா்ச்சகா்கள் நிராகரிப்பு

உத்தர பிரதேச மாநிலம், மதுராவில் உள்ள பிருந்தாவனம் பாங்கே பிஹாரி கோயிலில் மூலவா் கிருஷ்ணருக்கு முஸ்லிம்களால் உருவாக்கப்பட்ட ஆடைகளைப் பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கையை கோயில் அா்ச்சகா்கள் ... மேலும் பார்க்க

மகாராஷ்டிரம்: பீட் மாவட்ட காவல் துறையினா் பெயரில் இருந்து ஜாதி நீக்கம்

மகாராஷ்டிரத்தின் பீட் மாவட்டத்தில் காவல் துறையினா் மேல் சட்டையில் அணியும் பெயா் பட்டையில் அவா்களின் ஜாதிப் பெயா் நீக்கப்பட்டுள்ளது. காவல் துறையில் ஜாதியரீதியான பாகுபாட்டை தடுக்கும் நோக்கில் இந்த நடவடி... மேலும் பார்க்க