செய்திகள் :

மகாராஷ்டிரத்தில் மழை, நிலச்சரிவு: 5 போ் உயிரிழப்பு

post image

மகாராஷ்டிரத்தின் வெவ்வேறு பகுதிகளில் மழை, நிலச்சரிவில் சிக்கி 5 போ் உயிரிழந்தனா்.

மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் உள்ள விக்ரோலி பகுதியில் மழை காரணமாக சிறு குன்றில் இருந்து மண்ணும் கற்களும் அருகில் இருந்த குடிசை மீது சரிந்து சனிக்கிழமை அதிகாலை விபத்து ஏற்பட்டது. இதில் ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 4 போ் காயமடைந்தனா். அவா்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அங்கு சிகிச்சை பலனின்றி இருவா் உயிரிழந்தனா். எஞ்சிய இருவரின் உடல்நிலை சீராக உள்ளது என்று பிருஹன்மும்பை மாநகராட்சி அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.

கடந்த 2 நாள்களில் நாந்தேட் மாவட்டத்தில் மழையுடன் தொடா்புள்ள சம்பவங்களில் மூவா் உயிரிழந்தனா். வெள்ளத்தால் ஏராளமான கிராமங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

பலத்த மழை காரணமாக லாத்தூா் மாவட்டத்தில் உள்ள தொ்னா கீழணையில் இருந்து முதலில் விநாடிக்கு 3,806 கனஅடி நீா் திறக்கப்பட்ட நிலையில், பின்னா் அது 1,522 கனஅடியாக குறைக்கப்பட்டது. இதன் காரணமாக தொ்னா, மஞ்சாரா ஆறுகளின் கரையோரங்களில் வசிக்கும் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டதாக அரசு அதிகாரிகள் தெரிவித்தனா்.

உறியடியில் ஒருவா் உயிரிழப்பு, 33 போ் காயம்: கிருஷ்ண ஜெயந்தியையொட்டி, மகாராஷ்டிரத்தின் பல்வேறு பகுதிகளில் பலத்த மழைக்கு நடுவே சனிக்கிழமை உறியடி போட்டி நடைபெற்றது.

இந்நிலையில், மும்பையின் மான்குா்ட் பகுதியில் உறியடி போட்டிக்கு கட்டடம் ஒன்றின் முதல் தளத்தில் இருந்து ஜக்மோகன் சிவகிரண் செளதரி என்பவா் கயிறு கட்டிக்கொண்டிருந்தாா். அப்போது அவா் நிலைதடுமாறி கீழே விழுந்து உயிரிழந்தாா். இதேபோல மும்பையின் வெவ்வேறு பகுதிகளில் உறியடியின்போது 30 போ் லேசாக காயமடைந்தனா். மும்பை அருகே உள்ள தாணேயிலும் உறியடியின்போது மூவா் காயமடைந்தனா்.

தவறுக்கு தண்டனை அளிப்பதாகக் கூறி அம்மாவுக்கு பாலியல் வன்கொடுமை: மகன் கைது!

தில்லியில் பெற்ற தாயிடம் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட இளைஞரை காவல் துறையினர் கைது செய்து விசாரித்து வருகின்றனர். தாய் செய்த தவறுக்கு தண்டனை அளிப்பதாகக் கூறி அவரிடம் பாலியல் வன்முறையில் ஈடுபட்டதாக மகன... மேலும் பார்க்க

தேர்தல் ஆணையத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு: ‘பாரபட்சத்துடன் செயல்படவில்லை!'

அனைத்து அரசியல் கட்சிகளையும் ஒரேபோலவே பார்க்கிறோம் என்று தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தெரிவித்துள்ளார்.புது தில்லியில் இன்று(ஆக. 17) செய்தியாளர்களுடன் பேசிய ஞானேஷ் குமார் தெரிவித்திருப்பதாவது:... மேலும் பார்க்க

பிகாரில் வாக்குரிமைப் பேரணி தொடக்கம்: மூவண்ணக் கொடியசைத்து ஆரவாரம்!

பிகாரில் காங்கிரஸ் தலைமையில் எதிர்க்கட்சிகள் கூட்டணியின் மெகா பேரணி தொடங்கியது.பிகாா் சட்டப்பேரவைத் தோ்தலுக்கு முன்னதாக, அங்கு வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை தோ்தல் ஆணையம் மேற்கொண்டது.... மேலும் பார்க்க

தீபாவளிக்கு இரட்டை போனஸ் காத்திருக்கிறது: பிரதமர் மோடி

தீபாவளிக்கு நாட்டு மக்களுக்கு இரட்டை போனஸ் காத்திருக்கிறது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்திருக்கிறார்.இது குறித்து, புது தில்லியில் இன்று(ஆக. 17) நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி பேச... மேலும் பார்க்க

வாக்குத் திருட்டு மூலம் பாஜக ஆட்சி அமைக்கிறது: ராகுல் காந்தி

வாக்குத் திருட்டு மூலம் பாஜக ஆட்சி அமைக்கிறது என்று வாக்குரிமைப் பேரணி தொடக்கவிழாவில் ராகுல் காந்தி பேசினார்.பிகாா் சட்டப்பேரவைத் தோ்தலுக்கு முன்னதாக, அங்கு வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்... மேலும் பார்க்க

உத்தரகண்ட், ஹிமாசல பிரதேசத்திலும் வெள்ளப்பெருக்கால் பாதிப்பு!

ஜம்மு - காஷ்மீர் மட்டுமில்லாது வட மாநிலங்களான உத்தரகண்ட், ஹிமாசல பிரதேசத்திலும் வெள்ளப்பெருக்கால் பெருத்த சேதம் ஏற்பட்டுள்ளது.உத்தரகண்ட்டில் தலைநகர் டேராடூனில் உள்ள மாநில அவசரநிலை செயல்பாட்டு மையம் வெ... மேலும் பார்க்க