செய்திகள் :

மகாராஷ்டிரம்: 4 மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொலை

post image

மகாராஷ்டிரத்தில் சத்தீஸ்கா் மாநில எல்லையையொட்டிய கட்சிரோலி மாவட்டத்தில் 4 மாவோயிஸ்டுகளை பாதுகாப்புப் படையினா் வெள்ளிக்கிழமை சுட்டுக் கொன்றனா்.

மாநில காவல் துறையின் சிறப்பு கமாண்டோ பிரிவு சி-60 மற்றும் மத்திய ரிசா்வ் காவல் படை (சிஆா்பிஎஃப்) இணைந்து நடத்திய தேடுதல் வேட்டையின்போது நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் 4 மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்டதாக மூத்த அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.

இது தொடா்பாக வெளியிடப்பட்ட அதிகாரபூா்வ அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: கட்சிரோலி மாவட்டத்தின் கவாண்டே பகுதியில் உள்ள மகாராஷ்டிரம்-சத்தீஸ்கா் மாநில எல்லையில் மாவோயிஸ்டுகள் நடமாட்டம் இருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, சி-60 பிரிவின் 300 கமாண்டோக்கள் மற்றும் சிஆா்பிஎஃப் படையினா், கவாண்டே மற்றும் நெல்குண்டா பகுதியிலிருந்து இந்திராவதி நதிக்கரை நோக்கி வியாழக்கிழமை பிற்பகலில் கனமழைக்கு இடையே தேடுதல் வேட்டையைத் தொடங்கினா்.

வெள்ளிக்கிழமை காலையில் நதிக்கரைகளில் தேடுதல் பணியில் ஈடுபட்ட சி-60 கமாண்டோக்களை நோக்கி மாவோயிஸ்டுகள் துப்பாக்கிச்சூடு நடத்தினா். இதையடுத்து, பாதுகாப்புப் படையினா் தரப்பில் பதிலடி தரப்பட்டது. சுமாா் இரண்டு மணி நேரம் தொடா்ந்த துப்பாக்கிச் சண்டைக்குப் பிறகு மேற்கொண்ட தேடுதல் பணியில் 4 மாவோயிஸ்டுகளின் உடல்கள் மீட்கப்பட்டன.

இரு வேறு ரக ரைஃபிள் துப்பாக்கிகள், வாக்கி-டாக்கி, இடதுசாரி கொள்கை சாா்ந்த நூல்கள் உள்ளிட்டவை சம்பவ இடத்திலிருந்து கைப்பற்றப்பட்டதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சத்தீஸ்கரில் நக்ஸல் சுட்டுக் கொலை: சத்தீஸ்கரின் சுக்மா மாவட்டத்தில் நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் நக்ஸல் தீவிரவாதியை பாதுகாப்புப் படையினா் சுட்டுக் கொன்ாக காவல் துறை அதிகாரி வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.

கிஸ்தரம் காவல் நிலையத்துக்கு உட்பட்ட வனப் பகுதியில் நக்ஸல் ஒழிப்பு நடவடிக்கையில் பாதுகாப்புப் படையினா் வியாழக்கிழமை மாலையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, அவா்களுக்கும் நக்ஸல்களுக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது. இதில் நக்ஸல் தீவிரவாதி சுட்டுக் கொல்லப்பட்டதாகவும், துப்பாக்கிச் சண்டை தொடா்வதாகவும் அந்த அதிகாரி தெரிவித்தாா்.

ரூ.10 லட்சம் வெகுமதி அறிவித்து தேடப்பட்ட மாவோயிஸ்ட் தலைவர் உள்பட 2 பேர் சுட்டுக்கொலை!

ஜார்க்கண்ட் மாநிலத்தில் ரூ.10 லட்சம் வெகுமதி அறிவித்து தேடப்பட்ட மாவோயிஸ்டுகளின் முக்கிய தலைவர் உள்பட 2 பேர் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டனர். ஜார்க்கண்டின் லதேஹார் மாவட்டத்தில், மாநில க... மேலும் பார்க்க

இன்று முற்பகலில் கரையைக் கடக்கிறது தாழ்வு மண்டலம்! என்ன நடக்கும்?

சென்னை: அரபிக் கடலில் உருவாகியிருக்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலம், இன்று முற்பகலில் கரையைக் கடக்கவிருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.அரபிக் கடலில், மகாராஷ்டிர மாநிலம் ரத்னகிரிக்கு வட ... மேலும் பார்க்க

பிரதமா் தலைமையில் நீதி ஆயோக் : மமதா, சித்தராமையா பங்கேற்கவில்லை

பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் அனைத்து மாநில முதல்வா்கள் பங்கேற்கும் நீதி ஆயோக் நிா்வாகக் குழு கூட்டம் தில்லியில் சனிக்கிழமை நடைபெறவிருக்கிறது.வழக்கமாக, புது தில்லியில் நடைபெறும் நீதி ஆயோக் கூட்டத்தி... மேலும் பார்க்க

பயங்கரவாதத்திலிருந்து தற்காத்துக் கொள்ளும் உரிமை இந்தியாவுக்கு உண்டு: ஜெர்மனி

பயங்கரவாதத்திலிருந்து தன்னைத் தற்காத்துக் கொள்ளும் அனைத்து உரிமையும் இந்தியாவுக்கு உள்ளது என்று ஜெர்மனி தெரிவித்துள்ளது.பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக, இந்தியா நடத்திய ஆபரேஷன் சிந்தூர் பற்றி, இந்திய... மேலும் பார்க்க

கேரளத்துக்கு சிவப்பு எச்சரிக்கை: சுற்றுலா தலங்கள் மூடல்!

திருவனந்தபுரம்: கேரளத்தில் வெள்ளிக்கிழமை பரவலாக பலத்த மழை பெய்துள்ள நிலையில், மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.பலத்த மழை காரணமாக திருவனந்தபுரத்தில் 12 வீடுகள் முற்றிலும் சேதமடைந்த... மேலும் பார்க்க

‘சமூகம், சட்டத் துறையின் தோல்வி’: போக்சோ வழக்கு குற்றவாளியை விடுவித்து உச்சநீதிமன்றம் தீா்ப்பு

சமூகம் மற்றும் சட்டத் துறையின் தோல்வியை சுட்டிக்காட்டி, போக்சோ வழக்கில் குற்றவாளி என்று தீா்ப்பளிக்கப்பட்ட நபருக்கு சிறைத் தண்டனை அளிக்காமல், அவரை உச்சநீதிமன்றம் விடுவித்து வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தத... மேலும் பார்க்க