செய்திகள் :

மகாராஷ்டிரா: யாரும் உதவ முன்வராத விரக்தி; இறந்த மனைவியின் உடலை பைக்கில் கட்டி எடுத்துச்சென்ற கணவர்

post image

மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூர் அருகில் நடந்த விபத்தில் கியார்சி அமித் என்ற பெண் இறந்துபோனார். நாக்பூர் மற்றும் ஜபல்பூர் சாலையில் கியார்சியும் அவரது கணவர் அமித்தும் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். மொர்பதா என்ற இடத்திற்கு அருகில் சென்றபோது அவர்களது வாகனத்தின் மீது லாரி ஒன்று இடித்துவிட்டது.

இதில் சம்பவ இடத்திலேயே கியார்சி இறந்து போனார். உடனே அந்த வழியாக வந்த வாகனங்களை நிறுத்தி தனது மனைவியின் உடலை எடுத்துச்செல்ல உதவும்படி அமித் கேட்டுக்கொண்டார்.

விபத்து
விபத்து

ஆனால் எந்த வாகன ஓட்டியும் வண்டியை நிறுத்தி உதவி செய்யவில்லை. இதனால் வேறு வழியில்லாமல் தனது மனைவியின் உடலை இரு சக்கர வாகனத்தின் பின்புறம் வைத்து கட்டிக்கொண்டு வாகனத்தைத் தனது சொந்த ஊருக்கு எடுத்துச்செல்ல ஆரம்பித்தார்.

அவரது சொந்த ஊர் மத்திய பிரதேசம் ஆகும். கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக நாக்பூர் அருகில் உள்ள கராடி என்ற இடத்தில் வசித்து வந்தார். அமித் தனது மனைவியின் உடலை இரு சக்கர வாகனத்தில் கட்டிக்கொண்டு சொந்த ஊருக்கு எடுத்து சென்று கொண்டிருந்ததை ஆரம்பத்தில் பொதுமக்கள் அதனைச் சரியாகக் கண்டுகொள்ளவில்லை.

ஆனால் அவர் இறந்த பெண்ணின் உடலை எடுத்துச்செல்வதை அறிந்த சிலர் அவரது வாகனத்தை நிறுத்த முயன்றனர். ஆனால் வாகனத்தை நிறுத்தினால் பிரச்னை என்று பயந்து வாகனத்தை வேகமாக எடுத்து சென்றுவிட்டார். அவர் தனது மனைவியின் உடலை வாகனத்தில் எடுத்துச் செல்வதை சிலர் வீடியோ எடுத்து சமூக வலைத்தளப் பக்கத்தில் பகிர்ந்தனர். அது வைரலானது.

Accident
Accident

இது குறித்து சிலர் போலீஸாருக்கும் தகவல் கொடுத்தனர். உடனே போலீஸார் விரைந்து செயல்பட்டு அமித் சென்ற இரு சக்கர வாகனத்தைத் தடுத்து நிறுத்தினர்.

அதில் இருந்த பெண்ணின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பிரேதப் பரிசோதனையின் அறிக்கை அடிப்படையில் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்போவதாக போலீஸார் தெரிவித்தனர்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk

'ரத்தன் டாடா மட்டும் இருந்திருந்தால்.!' - இழப்பீடு தாமதமாவது குறித்து அமெரிக்க வழக்கறிஞர்

கடந்த ஜூன் 12-ம் தேதி, குஜராத்தில் இருந்து இங்கிலாந்து கிளம்பி சென்ற ஏர் இந்திய விமானம் விபத்துகுள்ளாகியது.இந்த விபத்தில் 260 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் நினைவாக, 'தி AI-171 நி... மேலும் பார்க்க

Air India: MP-கள் பயணித்த விமானத்தில் தொழிற்நுட்பக் கோளாறு; `அதிஷ்டத்தால் தப்பினோம்' - வேணுகோபால்

இந்திய அரசின் Air Corporations Act மூலம் தேசியமயமாக்கப்பட்ட ஏர் இந்தியா நிறுவனம், அதிக நட்டம் காரணமாக 2022 பிப்ரவரி மாதம் ஏர் இந்தியா நிறுவனத்தை மீண்டும் தனியார்மயமாக்கி, டாடா சன்ஸ் குரூப்புக்கு விற்ற... மேலும் பார்க்க

சீனா: பயணியுடன் பள்ளத்தில் விழுந்த கார்; `ரோடோ டாக்ஸி சேவை' பாதுகாப்பானதா? - எழும் கேள்விகள்

தென்மேற்கு சீனாவில் பாய்டு நிறுவனத்தின் தானியங்கி அப்பல்லோ கோ 'ரோபோ டாக்ஸி' சேவையில் பயணம் செய்த ஒருவர் படுகுழிக்குள் விழுந்துள்ளார். சோங்கிங் என்ற பகுதியில் நடந்த இந்த விபத்தில், குழிக்குள் விழுந்த ப... மேலும் பார்க்க

அனுமதியின்றி வீட்டில் பட்டாசு தயாரிப்பு; வெடி விபத்தில் 3 பேர் உயிரிழப்பு - சாத்தூரில் சோகம்

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே விஜயகரிசல்குளம் கிழக்கு தெருவை சேர்ந்த பொன்னுபாண்டியன் என்பவர் வீட்டில் அனுமதியின்றி சட்டவிரோதமாக பட்டாசு தயாரித்து வந்துள்ளனர். அப்போது திடீரென ஏற்பட்ட உராய்வின் கா... மேலும் பார்க்க

சதுரகிரி மலைப்பாதையில் காட்டுத் தீ; பக்தர்களை பாதுகாப்பாக வெளியேற்றும் வனத்துறை

விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு வனச்சரகத்திற்கு உள்பட்ட நான்காம் எண் பீட் பகுதியான சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்கு செல்லக்கூடிய மலைப்பாதையில் உள்ள வருசநாடு சந்திப்பு மணிக்கட்டி பகுதியில் காட்... மேலும் பார்க்க

தஞ்சாவூர்: காற்று வீசியதில் அறுந்து விழுந்த மின்கம்பி, மின்சாரம் தாக்கி வயலில் தம்பதி பலி

தஞ்சாவூர் அருகே கள்ளம்பெரம்பூர் 2ம் சேத்தி மெயின்ரோட்டை சேர்ந்தவர் சுப்பிரமணியன் (54) விவசாயி. இவரது மனைவி ராமாயி (47) இவர்கள் இருவரும் பூதலுார் சாலையில் உள்ள தங்கள் வயலுக்கு சென்றுள்ளனர். நேற்று இரவ... மேலும் பார்க்க