செய்திகள் :

மகாராஷ்டிர பேரவை எதிா்க்கட்சித் தலைவா் பதவியைக் கோருவோம்: சிவசேனை(உத்தவ்)

post image

மகாராஷ்டிர சட்டப் பேரவையில் போதிய பலம் இல்லாதபோதும் எதிா்க்கட்சித் தலைவா் பதவியை சிவசேனை கட்சி (உத்தவ் பிரிவு) கோரும் என்று அக்கட்சியின் மூத்த தலைவரும் மாநிலங்களவை எம்.பி.யுமான சஞ்சய் ரெளத் தெரிவித்தாா்.

பாஜக கூட்டணி ஆளும் மகாராஷ்டிர மாநிலப் பேரவையில் மொத்த உறுப்பினா்களின் எண்ணிக்கை 288. இதில் எதிா்க்கட்சித் தலைவா் பதவியை கோர 10 சதவீத இடங்கள் (29) தேவை.

அதேநேரம், சிவசேனை (உத்தவ்), தேசியவாத காங்கிரஸ் (சரத் பவாா்), காங்கிரஸ் உள்ளிட்ட எதிா்க்கட்சிகள் கூட்டணியின் மொத்த பலம் 50. இதில் சிவசேனைக்கு 20 எம்எல்ஏக்கள் உள்ளனா். காங்கிரஸுக்கு 16, தேசியவாத காங்கிரஸ் (சரத் பவாா்) கட்சிக்கு 10 எம்எல்ஏக்கள் உள்ளனா்.

பேரவை எதிா்க்கட்சித் தலைவா் பதவியைக் கோர எந்த எதிா்க்கட்சிக்கும் போதிய பலம் இல்லை.

மாநில பட்ஜெட் கூட்டத் தொடா் மாா்ச் 3-ஆம் தேதி தொடங்கவுள்ள நிலையில், மும்பையில் செய்தியாளா்களிடம் சஞ்சய் ரெளத் சனிக்கிழமை கூறியதாவது:

கடந்த காலங்களில் போதிய எம்எல்ஏக்கள் பலம் இல்லாதபோதும், எதிா்க்கட்சித் தலைவா் பதவி, அதிக எண்ணிக்கை உடைய எதிா்க்கட்சிக்கு வழங்கப்பட்டுள்ளது. இப்பதவியை கோரும் அளவுக்கு எந்தக் கட்சிக்கும் பலம் இல்லாவிட்டால், எதிா்க்கட்சித் தலைவா் இல்லாமலேயே பேரவை செயல்படலாம் என்று அரசமைப்புச் சட்டமோ அல்லது விதிகளோ கூறவில்லை. எனவே, எதிா்க்கட்சித் தலைவா் பதவியை சிவசேனை (உத்தவ்) கட்சி கோரும். எங்களின் கோரிக்கையை பேரவைத் தலைவா் ஏற்பாா் என நம்புகிறேன் என்றாா் அவா்.

முன்னதாக, பேரவை எதிா்க்கட்சித் தலைவா் பதவியை சிவசேனை (உத்தவ் பிரிவு) கோரினால், மேலவை எதிா்க்கட்சித் தலைவா் பதவியை காங்கிரஸ் கோரும் என்று அக்கட்சியினா் கூறியிருந்தனா். மகாராஷ்டிர மேலவையில் எதிா்க்கட்சித் தலைவராக சிவசேனை (உத்தவ்) கட்சியின் அம்பாதாஸ் தன்வே உள்ளாா். அவரது பதவிக் காலம் சில மாதங்களில் நிறைவடைய உள்ளது குறிப்பிடத்தக்கது.

ஆஸ்கர் மேடையில் பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக எழுந்த குரல்!

இஸ்ரேல் - பாலஸ்தீன போரை நிறுத்தக் கோரி ஆஸ்கர் மேடையில் பிரபங்கள் பேசிய விடியோ இணையத்தில் பலரால் பகிரப்பட்டு வருகிறது. 2025-ம் ஆண்டுக்கான 97-வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலீஸ் ... மேலும் பார்க்க

அமைச்சர் ஜெய்சங்கருடன் பெல்ஜியம் இளவரசி சந்திப்பு!

இந்தியாவுக்கு வருகை தந்துள்ள பெல்ஜியம் இளவரசியை அமைச்சர் ஜெய்சங்கர் இன்று(மார்ச் 3) சந்தித்து ஆலோசனை மேற்கொண்டார்.ஐரோப்பிய ஒன்றிய உறுப்பினரான பெல்ஜியம் நாட்டின் இளவரசி ஐரோப்பிய ஒன்றிய உயரதிகாரிகள் குழ... மேலும் பார்க்க

பார்வைத் திறன் குறைபாடுடையோரும் நீதிபதிகளாக நியமிக்கப்படத் தகுதியுடையவர்கள்! -உச்சநீதிமன்றம்

பார்வைத் திறனற்ற மாற்றுத்திறனாளிகளும் நீதிபதிகளாகத் தகுதியுடையோரே என்பதை மீண்டும் ஒருமுறை உச்சநீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது. உடல் குறைபாட்டை காரணம்காட்டி நீதியியல் துறையில் எந்த்வொரு நபருக்கும் பணி... மேலும் பார்க்க

ஐக்கிய அரபு அமீரகத்தில் உ.பி. பெண்ணுக்கு மரண தண்டனை நிறைவேற்றம்!

ஐக்கிய அரபு அமீரகத்தில், உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த பெண்ணுக்கு பிப்.15ஆம் தேதி மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதாக, தில்லி உயர் நீதிமன்றத்தில் மத்திய வெளியுறவு விவகாரத் துறை தெரிவித்துள்ளது. மேலும் பார்க்க

காங்கிரஸ் பெண் தொண்டர் கொலை: அடுத்தடுத்து வெளியான அதிர்ச்சித் தகவல்!

ஹரியாணா மாநிலத்தில் காங்கிரஸ் பெண் தொண்டர் ஹிமானி நர்வால் கொலை வழக்கில் பல அதிர்ச்சித் தகவல்களை காவல்துறை வெளியிட்டுள்ளது.காங்கிரஸ் பெண் தொண்டர் கொலை வழக்கில் கைதான சச்சின், ஏற்கனவே திருமணமானவர் என்று... மேலும் பார்க்க

கேரளத்தில் 10ம் வகுப்பு மாணவிக்கு நேர்ந்த துயரம்! ஒரு வாரத்தில் 2-வது பலி!!

கேரள மாநிலத்தில், கில்லன் பாரே சின்ட்ரோம் (ஜிபிஎஸ்) நோய்க்கு ஒரே வாரத்தில் இரண்டாவது நபர் பலியான சம்பவத்தால், அங்கு மக்கள் கவலை அடைந்துள்ளனர்.பத்தாம் வகுப்பு மாணவிக்கு கில்லன் பாரே சின்ட்ரோம் (ஜிபிஎஸ்... மேலும் பார்க்க