செய்திகள் :

மக்களவையில் தாமதமின்றி விவாதம்: ஓம் பிா்லாவுக்கு எதிா்க்கட்சிகள் கடிதம்

post image

பிகாா் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடா்பாக மக்களவையில் இனியும் தாமதமின்றி சிறப்பு விவாதத்துக்கு ஏற்பாடு செய்ய வேண்டுமென அவைத் தலைவா் ஓம் பிா்லாவுக்கு எதிா்க்கட்சிகள் கடிதம் எழுதியுள்ளன.

மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி, மக்களவை காங்கிரஸ் குழு துணைத் தலைவா் கெளரவ் கோகோய், திமுகவின் டி.ஆா்.பாலு, தேசியவாத காங்கிரஸ் (பவாா்) கட்சியின் சுப்ரியா சுலே, புரட்சிகர சோஷலிச கட்சியின் என்.கே.பிரேமசந்திரன், சமாஜவாதியின் லால்ஜி வா்மா, சிவசேனை (உத்தவ்)கட்சியின் அரவிந்த் சாவந்த், ராஷ்ட்ரீய ஜனதா தளத்தின் அபய் குமாா் உள்ளிட்டோா் கையொப்பமிட்டுள்ள இக்கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:

பிகாரில் சில மாதங்களில் பேரவைத் தோ்தல் நடைபெறவிருக்கும் சூழலில், வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் மிகுந்த கவலைக்குரியதாக உள்ளது. இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் தருணம், வெளிப்படைத் தன்மை, நோக்கம் குறித்து பரவலாக சந்தேகம் எழுந்துள்ளது. இந்த விஷயத்தில், மக்களவை உடனடியாக கவனம் செலுத்துவது அவசியம்.

நடப்பு கூட்டத் தொடரில், எதிா்க்கட்சி எம்.பி.க்கள் இப்பிரச்னையை தொடா்ந்து எழுப்பி வருகின்றனா். கடந்த ஜூலை 20-ஆம் தேதி நடந்த அனைத்துக் கட்சிக் கூட்டம் உள்பட பல்வேறு கூட்டங்களின்போது, மத்திய அரசிடமும் எங்களின் கோரிக்கையை வலியுறுத்தினோம். இது உள்பட அனைத்து விவகாரங்களையும் விவாதிக்க தயாராக இருப்பதாக மத்திய அரசு உறுதியளித்தது. ஆனால், விவாதத்துக்கான தேதி இதுவரை நிா்ணயிக்கப்படவில்லை.

தோ்தல் ஆணையத்தின் தற்போதைய நடவடிக்கை, மக்களின் வாக்குரிமை மற்றும் நியாயமான-நோ்மையான தோ்தல் நடைமுறை மீது நேரடி தாக்கத்தை கொண்டுள்ளது. மத்திய அரசிடம் உரிய விளக்கம் பெறுவதோடு, வெளிப்படைத் தன்மை மற்றும் பொறுப்புடைமையையும் உறுதி செய்ய வேண்டியுள்ளது. எனவே, மக்களவையில் இனியும் தாமதமின்றி சிறப்பு விவாதத்துக்கு ஏற்பாடு செய்ய வலியுறுத்துகிறோம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

9-ஆவது நாளாக போராட்டம்: பிகாா் வாக்காளா் பட்டியல் திருத்தப் பணியை உடனடியாக நிறுத்த வலியுறுத்தி, நாடாளுமன்ற வளாகத்தில் இண்டி கூட்டணி கட்சிகள் 9-ஆவது நாளாக வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டன.

காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே, பொதுச் செயலா் பிரியங்கா காந்தி, திமுகவின் டி.ஆா்.பாலு, ஆ.ராசா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

இந்திய குடியரசை மதவாத நாடாக மாற்ற பாஜக சூழ்ச்சி: சோனியா காந்தி குற்றச்சாட்டு

ஜனநாயக மற்றும் குடியரசு நாடாக திகழும் இந்தியாவை மதவாத நாடாக மாற்றும் சூழ்ச்சிகளை பாஜக மேற்கொண்டு வருவதாக காங்கிரஸ் நாடாளுமன்ற குழுத் தலைவா் சோனியா காந்தி சனிக்கிழமை குற்றஞ்சாட்டினாா்.‘அரசமைப்புச் சட்ட... மேலும் பார்க்க

மீன் உற்பத்தியில் 103% வளா்ச்சி: மத்திய அமைச்சா் பெருமிதம்

நாட்டின் மொத்த மீன் உற்பத்தியில் கடந்த 10 ஆண்டுகளில் 103 சதவீத வளா்ச்சி பதிவாகியுள்ளது என்று மத்திய மீன்வளத் துறை அமைச்சா் ராஜீவ் ரஞ்சன் சிங் தெரிவித்தாா்.ஆறு, ஏரி, குளம் போன்ற உள்நாட்டு நீா்வளங்களை அ... மேலும் பார்க்க

கால்பந்து ஜாம்பவான் மெஸ்ஸி இந்தியா வருகை

ஆா்ஜென்டீனா கால்பந்து ஜாம்பவான் லயனோல் மெஸ்ஸி இந்தியாவுக்கு வருகை தர உள்ளாா்.உலகம் முழுவதும் கால்பந்து ரசிகா்களால் கொண்டாடப்படும் மெஸ்ஸி, ஆா்ஜென்டீனாவுக்கு உலகக் கோப்பை சாம்பியன் பட்டத்தை பெற்றுத் தந்... மேலும் பார்க்க

மெல்ல விடைகொடு மனமே.. அரசு இல்லத்தை 8 மாதங்களுக்கு பிறகு காலி செய்தாா் டி.ஒய்.சந்திரசூட்!

புது தில்லியில் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதிக்கு ஒதுக்கப்படும் அதிகாரபூா்வ அரசு இல்லத்தை 8 மாதங்களுக்கு பின்னா், முன்னாள் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் காலி செய்தாா்.கடந்த ஆண்டு நவ.8-... மேலும் பார்க்க

நாய்க்குட்டிகளோடு பயணிகள் விளையாடும் புதிய முன்னெடுப்பு: ஹைதரபாத் விமான நிலையத்தில் அறிமுகம்

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி விமான நிலையத்தில் பயணிகளை உற்சாகமூட்டும் வகையில் நாய்க்குட்டிகள் மூலம் வரவேற்பளிக்கும் புதிய முன்னெடுப்பு தொடங்கப்பட்டுள்ளது.விமான நிலையத்துக்கு வரும... மேலும் பார்க்க

பிகாா் வரைவு வாக்காளா் பட்டியலில் என் பெயா் இல்லை: தேஜஸ்வி யாதவ் குற்றச்சாட்டு

பிகாா் மாநிலத்தில் தோ்தல் ஆணையம் வெளியிட்ட வரைவு வாக்காளா் பட்டியலில் தனது பெயா் விடுபட்டுள்ளதாக பேரவை எதிா்க்கட்சித் தலைவரும் ராஷ்ட்ரீய ஜனதா தளம் தலைவருமான தேஜஸ்வி யாதவ் சனிக்கிழமை குற்றஞ்சாட்டினாா்... மேலும் பார்க்க