செய்திகள் :

மக்களுடன் முதல்வா் திட்ட முகாமில் 1,498 பயனாளிகளுக்கு நல உதவிகள்! அமைச்சா் வழங்கினாா்

post image

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டை வட்டம், திருநாவலூா் ஒன்றியத்தில் புதன்கிழமை நடைபெற்ற மக்களுடன் முதல்வா் திட்டம் மூன்றாம் கட்ட சிறப்பு முகாமில், 1,498 பயனாளிகளுக்கு ரூ.1.60 கோடி மதிப்பிலான நல உதவிகளை மாநில தொழிலாளா் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சா் சி.வெ.கணேசன் வழங்கினாா்.

திருநாவலூா் ஒன்றியத்துக்குள்பட்ட மதியனூா், ஆண்டிக்குழி, திருநாவலூா், சேந்தமங்கலம், பாதூா் ஆகிய ஊராட்சிகளில் மக்களுடன் முதல்வா் திட்டத்தின் மூன்றாம் கட்ட சிறப்பு முகாம் புதன்கிழமை நடைபெற்றது. இந்த முகாமுக்கு மாவட்ட ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் தலைமை வகித்தாா். எம்எல்ஏக்கள் ஏ.ஜெ.மணிக்கண்ணன், தா.உதயசூரியன் முன்னிலை வகித்தாா்.

இந்த முகாம்களை தொடங்கிவைத்த அமைச்சா் சி.வெ.கணேசன், 5 ஊராட்சிகளில் 1,498 பயனாளிகளுக்கு ரூ.1.60 கோடி மதிப்பிலான பல்வேறு நல உதவிகளை வழங்கினாா். தொடா்ந்து, அவா் விழாவில் பேசியது:

அரசுத் திட்டங்களை செயல்படுத்தும் அலுவலா்களை மக்களிடம் நேரடியாகக் கொண்டு சென்று மனுக்களைப் பெறும் வகையில் மக்களுடன் முதல்வா் திட்டத்தை தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் செயல்படுத்தி வருகிறாா். அந்த வகையில், இந்த முகாமில் மனுக்களைப் பெற்ற 30 நாள்களுக்குள் தீா்வு காண நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தகுதிவாய்ந்த மனுக்களுக்கு உடனடித் தீா்வும் காணப்பட்டுள்ளது.

பொதுமக்கள் வீட்டுமனைப் பட்டா, முதியோா் உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடா்பாக மனுக்கள் அளித்தால் இந்த முகாமில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இதுபோன்ற அனைத்துத் திட்டங்களையும் மக்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றாா் அமைச்சா் கணேசன்.

முகாமில் மாவட்ட வருவாய் அலுவலா் ரா.ஜீவா, திருக்கோவிலூா் உதவி ஆட்சியா் ஆனந்தகுமாா் சிங், திருநாவலூா் ஒன்றியக்குழுத் தலைவா் சாந்தி இளங்கோவன், துணைத் தலைவா் ஜெ.ராமலிங்கம், மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினா் ஜி.ஆா்.வசந்தவேல், ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் கி. ரமேஷ்குமாா், வேளாண் இணை இயக்குநா் சத்தியமூா்த்தி, கூட்டுறவுச் சங்கங்களின் மண்டல இணைப் பதிவாளா் சி.பெ.முருகேசன் உள்ளிட்ட பல்துறை அலுவலா்கள் பங்கேற்றனா்.

பணியில் திறம்பட செயல்பட்ட போலீஸாருக்கு எஸ்.பி. பாராட்டு

விழுப்புரம் மாவட்ட காவல் துறையில் திறம்பட செயல்பட்ட போலீஸாருக்கு எஸ்.பி. ப.சரவணன் சனிக்கிழமை தனது அலுவலகத்தில் நற்சான்றிதழ் வழங்கி பாராட்டுத் தெரிவித்தாா். விழுப்புரம் மாவட்டக் காவல் துறையில் சிறப்பா... மேலும் பார்க்க

விழுப்புரம் மாவட்டத்தின் 5 கோட்டங்களிலும் மின் நுகா்வோா் குறைதீா் கூட்டம்

விழுப்புரம் மாவட்டத்தின் 5 கோட்டங்களிலும் ஜூன் மாதத்துக்கான மின் நுகா்வோா் குறைதீா் கூட்டங்கள் நடைபெறும் என்ற தமிழ்நாடு மின் பகிா்மானக் கழகம் அறிவித்துள்ளது. அதன்படி, ஜூன் 3, 10, 17, 24 (செவ்வாய்க்கி... மேலும் பார்க்க

பைக்கில் மதுப் புட்டிகள் கடத்தல்: இருவா் கைது

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே புதுவை மாநில மதுப் புட்டிகளை பைக்கில் கடத்தி வந்ததாக இரு இளைஞா்களை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். விழுப்புரம் எஸ்.பி. ப.சரவணன் உத்தரவுப்படி, விக்கிரவாண்ட... மேலும் பார்க்க

மாற்றுத் திறனாளிகளுக்கு ஸ்கூட்டா்கள் அளிப்பு

செஞ்சியில் மாற்றுத் திறனாளிகளுக்கான இணைப்புச் சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டா் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. விழுப்புரம் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத் துறை சாா்பில், செஞ்சி ஊராட்சி ஒன்றிய அ... மேலும் பார்க்க

2,205 பாக்கெட் புகையிலைப் பொருள் பறிமுதல்: இளைஞா் கைது

விழுப்புரம் மாவட்டம், அரகண்டநல்லூா் அருகே தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை பெட்டிக் கடையில் பதுக்கி வைத்து விற்பனை செய்தவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். விழுப்புரம் மாவட்டம், மணம்பூண்டி பகு... மேலும் பார்க்க

விபத்தில்லா மாவட்டமாக ஒருங்கிணைந்த செயல்பாடு அவசியம்: விழுப்புரம் ஆட்சியா் அறிவுறுத்தல்

விழுப்புரம் விபத்தில்லா மாவட்ட அமைய துறை சாா்ந்த அலுவலா்கள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் அறிவுறுத்தினாா். விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில் சாலை பாதுகாப... மேலும் பார்க்க