செய்திகள் :

மக்கள் கூடும் இடங்களில் பாதுகாப்பு அதிகரிப்பு: சென்னை காவல் ஆணையர்

post image

மக்கள் கூடும் இடங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாக சென்னை காவல் ஆணையர் அருண் தெரிவித்துள்ளார்.

சென்னை எழும்பூர் ராஜரத்தினம் திடலில் சென்னை பெருநகர் ஊர்க்காவல் படையினர் 514 பேரின் பயிற்சி நிறைவு அணிவகுப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது.

அணிவகுப்பு விழாவிற்கு சிறப்பு விருந்தினராக சென்னை பெருநகர காவல் ஆணையர் அருண் கலந்து கொண்டு சிறப்பாக பணியாற்றிய காவலர்களுக்கு பரிசுகளையும், சான்றிதழ்களையும் வழங்கி சிறப்பித்தார்.

நிகழ்ச்சியில் பேசிய சென்னை பெருநகர காவல் ஆணையர் அருண், ”1963 இல் தமிழக அரசால் ஊர்க்காவல் படை உருவாக்கப்பட்டது. அமைதி சட்ட ஒழுங்கு அடிப்படை பயிற்சி நிலை நாட்ட ஊர்க்காவல் படையினர் பயன்படுத்தப்படுகிறார்கள்.

பொதுமக்களை பாதுகாக்கவும், குற்றங்களை தடுக்கவும், நடந்த குற்றங்களை திறமையாக கண்டுபிடித்து தண்டனை வழங்கவும் காவல்துறையினர் தங்களை அர்ப்பணித்துக் கொள்கின்றனர்.

பொதுமக்கள் பார்வையில் ஊர்க்காவல் படை காவலர்களும் அதிகாரிகளே, ஆகவே காவல் துறைக்கு எந்த ஒரு களங்கமும் ஏற்படாதவாறு மக்கள் பணியில் தங்களை அர்ப்பணித்துக் செயல்பட வேண்டும்.

தமிழ்நாடு காவல் துறையினருக்கு வழங்கப்படும் அனைத்து சிறப்புச் சலுகைகளும் ஊர்க்காவல் படை காவலர்களுக்கு அளிக்கப்பட்டு வருகிறது.

இந்தியா-பாகிஸ்தான் இடையே நடைபெற்று வரும் போரில் நாட்டிற்காக அயராது உழைத்து வரும் நம்முடைய இந்திய ராணுவ வீரர்களுக்கும் முப்படை வீரர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றி” என்று தெரிவித்தார்..

சென்னை பெருநகர காவல் ஆணையர் அருண் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்ததாவது:

தமிழக காவல்துறை சார்பில் பொது மக்கள் அதிகம் கூடும் இடங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. உளவுத்துறை கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

முக்கியமாக சேப்பாக்கம் திடலுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததையொட்டி பொதுமக்களின் பாதுகாப்பைக் கருதி ஐபிஎல் கிரிக்கெட் போட்டி நிறுத்தப்பட்டுள்ளது.

இதையும் படிக்க: ஜெய்சால்மரில் வெடிகுண்டு போன்ற பொருள் மீட்பு

தமிழகத்தில் இன்றும் நாளையும் மிதமான மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் இன்றும் நாளையும் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், மேற்கு திசை காற்றின் வேக மாறுப... மேலும் பார்க்க

வெறிநாய் கடித்து 20க்கும் மேற்பட்டோர் காயம்!

சங்ககிரி: சேலம் மாவட்டம், சங்ககிரி நகராட்சிக்குள்பட்ட பகுதியில் வெறிநாய் ஒன்று ஞாயிற்றுக்கிழமை திடீரென சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தவர்கள், நின்று கொண்டிருந்தவர்களை கடித்துவிட்டு சென்றதால் 20க்கு... மேலும் பார்க்க

சீர்காழி அருகே வன்னியர் சங்க மாநாட்டிற்கு சென்ற வேன் கவிழ்ந்து விபத்து: 6 பேர் காயம்!

சீர்காழி அருகே வன்னியர் சங்க மாநாட்டிற்கு சென்ற வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 6 பேர் காயம் அடைந்தனர்.சீர்காழி அடுத்த மருவத்தூரிலிருந்து மாமல்லபுரம் வன்னியர் சங்கம் சார்பில் நடைபெறும் சித்திரை மு... மேலும் பார்க்க

ரிஷப ராசியிலிருந்து மிதுன ராசிக்கு இடம் பெயர்ந்தார் குருபகவான்!

குருபகவான் ரிஷப ராசியிலிருந்து மிதுன ராசிக்கு பெயா்ச்சிஆண்டுதோறும் குருபகவான் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு பிரவேசம் செய்யும் நாளில் குருப் பெயா்ச்சி விழா இக்கோயிலில் சிறப்பாக நடைபெறும்.நிகழாண்ட... மேலும் பார்க்க

நாளை உதகை செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்!

முதல்வர் ஸ்டாலின் நாளை(மே 11) உதகை செல்கிறார்.நாளை உதகை செல்லும் முதல்வர் ஸ்டாலின், வரும் மே 15 ஆம் தேதி அங்கு நடைபெறவுள்ள மலர்க் கண்காட்சியை தொடக்கி வைக்கிறார். தொடர்ந்து பட்டா வழங்கும் விழா, பழங்குய... மேலும் பார்க்க

பொருளாதார வளர்ச்சியில் தமிழ்நாடு முதலிடம்!

பொருளாதார வளர்ச்சியில் இந்தியாவில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:தொழில் ஒப்பந்தங்கள்முதல்வர் ஸ்டாலினின் தொடர் முயற்... மேலும் பார்க்க