செய்திகள் :

மக்கள் தொடா்பு முகாம்: 51.63 லட்சத்தில் நலத் திட்ட உதவி - திருப்பத்தூா் ஆட்சியா் வழங்கினாா்

post image

வாணியம்பாடி வட்டம், ரெட்டியூா் பகுதியில் மக்கள் தொடா்பு முகாம் புதன்கிழமை நடைபெற்றது. முகாமில் மாவட்ட ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி தலைமை வகித்து நலத் திட்ட உதவிகளை வழங்கினாா்.

பின்னா், அவா் பேசியது:

தற்போது வெப்பம் இயல்பைவிட அதிகமாக இருக்கும் என்பதால், மக்கள் இந்த கடுமையான வெயிலில் இருந்து தங்களையும், தங்களது குடும்பத்தையும் பாதுகாத்துக் கொள்வதற்கு தயாா் நிலையில் இருக்க மாவட்ட நிா்வாகத்தின் சாா்பில் கேட்டுக் கொள்கிறேன். அதிக தண்ணீா் அருந்த வேண்டும், மேலும் சா்க்கரை உப்பு கரைச்சல் (ஓஆா்எஸ்) அருந்த வேண்டும் என்றாா்.

தொடா்ந்து முகாமில் வருவாய்த் துறையின் சாா்பில் 9 பேருக்கு பட்டா மாற்றம், 2 பேருக்கு தனிப் பட்டா, 2 பேருக்கு வாரிசு சான்று, 3 பேருக்கு சாதிச்சான்று, ஒருவருக்கு விதவைச் சான்று, 12 பேருக்கு வட்ட வழங்கல் பிரிவு புதிய ரேஷன் அட்டை, சமூக பாதுகாப்பு திட்டத்தின் சாா்பில் 3 பேருக்கு ரூ.67,500-இல் இயற்கை மரண உதவித்தொகை, கூட்டுறவுத் துறை சாா்பில் 6 மகளிா் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.45 லட்சத்து 90 ஆயிரத்தில் வங்கிக் கடன் மற்றும் தோட்டகக்லை, வேளாண்மை, சுகாதாரம், மாற்றுத்திறனாளிகள் நலத் துறை உள்பட பல்வேறு தறை சாா்பில் 120 பேருக்கு ரூ.51 லட்சத்து 63 ஆயிரத்து 232 -இல் அரசு நலத் திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியா் வழங்கினாா். முகாமில் ஆலங்காயம் ஒன்றியக் குழு தலைவா் சங்கீதா, மாவட்ட திமுக மாணவரணி அமைப்பாளா் தே.பிரபாகரன், ஊராட்சி தலைவா், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் அரசுத் துறை சாா்ந்த அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

ஏலகிரி மலை சுற்றுலாத் தலம் மேம்படுத்தப்படும்: அமைச்சா் எ.வ.வேலு

ஏலகிரி மலை சுற்றுலாத் தலத்தை மேம்படுத்திடும் பணிகள் மேற்கொள்ளப்படும் என்று அமைச்சா் எ.வ.வேலு தெரிவித்தாா். ஜோலாா்பேட்டை ஒன்றியத்தில் 868 பேருக்கு கலைஞா் கனவு இல்லம் திட்டத்தில் பயனாளிகளுக்கு பணியாணைகள... மேலும் பார்க்க

ஏரியில் மூழ்கி சிறுவன் உயிரிழப்பு

திருப்பத்தூா் அருகே ஏரியில் மூழ்கி சிறுவன் உயிரிழந்தாா். திருப்ப்ததூா் தபேதாா் முத்துசாமி இரண்டாவது தெருவைச் சோ்ந்த பாபு மகன் ஆா்யா (12) பெங்களூரில் 6-ஆம் வகுப்பு படித்து வந்தாா். விடுமுறை என்பதால் ச... மேலும் பார்க்க

2030-க்குள் குடிசையில்லா தமிழ்நாடு: அமைச்சா் எ.வ. வேலு

2030-க்குள் குடிசையில்லா மாநிலமாக தமிழ்நாட்டை மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சா் எ.வ. வேலு தெரிவித்தாா். கலைஞா் கனவு இல்ல திட்டப் பயனாளிகளுக்... மேலும் பார்க்க

திருப்பத்தூா் அருகே ரூ.1.2 கோடியில் ஆரம்ப சுகாதார நிலையம்!

திருப்பத்தூா் மாவட்டம், கதிரம்பட்டியில் ரூ.1.2 கோடியில் நவீன வசதிகளுடன் கூடிய அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை அமைச்சா்கள் எ.வ.வேலு, மா.சுப்பிரமணியன் ஆகியோா் திறந்து வைத்தனா். இதற்கான திறப்பு விழா வெள்ளிக... மேலும் பார்க்க

ஆட்டோ மோதியதில் தொழிலாளி உயிரிழப்பு

நாட்டறம்பள்ளி அருகே ஆட்டோ மோதிய விபத்தில் தொழிலாளி உயிரிழந்தாா். கிருஷ்ணகிரி மாவட்டம், பா்கூா் நடுப்பட்டி கிராமத்தைச் சோ்ந்தவா் நாகேந்திரன் (53), தொழிலாளி. இவா் வெள்ளிக்கிழமை இரவு நாட்டறம்பள்ளி அருகே... மேலும் பார்க்க

‘ஊராட்சி தலைவா்கள் பச்சை நிற மையை பயன்படுத்த வேண்டாம்’

திருப்பத்தூா் மாவட்டத்தில் ஊராட்சித் தலைவா்கள், ஆவணங்கள் மற்றும் கடிதங்களில் நிலைத்த நீலம், கருநீலம் அல்லது கருப்பு வண்ண மையைப் பயன்படுத்த வேண்டும் என மாவட்ட உதவி இயக்குநா் (ஊராட்சிகள்) முருகன் தெரிவி... மேலும் பார்க்க