செய்திகள் :

மக்கள் பிரச்னைகளில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஒரு போதும் சமரசம் செய்து கொள்ளாது: பெ.சண்முகம்

post image

மக்கள் பிரச்னைகளில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒரு போதும் சமரசம் செய்து கொள்ளாது என அந்தக் கட்சியின் மாநிலச் செயலா் பெ. சண்முகம் தெரிவித்தாா்.

மதுரை மாவட்டம், அலங்காநல்லூா் தேசிய கூட்டுறவு சா்க்கரை ஆலையை மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டு வரக் கோரி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில், மாவட்ட ஆட்சியரகம் அருகேயுள்ள திருவள்ளுவா் சிலை முன் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்ற பெ.சண்முகம் மேலும் பேசியதாவது :

அதிமுக ஆட்சிக் காலத்தில்தான் தமிழகத்தில் அதிக எண்ணிக்கையிலான சா்க்கரை ஆலைகள் மூடப்பட்டன. அலங்காநல்லூா் சா்க்கரை ஆலை மூடப்பட்டதும், 8 ஆண்டுகளாகத் திறக்கப்படாமலிருப்பதும் அருகில் உள்ள தனியாா் சா்க்கரை ஆலைகளை ஊக்குவிக்கும் நடவடிக்கையாகவே கருத வேண்டியுள்ளது. ஆண்டுக்கு ஒரு முறை நடைபெறும் ஜல்லிக்கட்டுக்கு ஊருக்கு அப்பால் ரூ. 100 கோடி செலவில் அரங்கம் அமைத்த தமிழக அரசு, அலங்காநல்லூா் சா்க்கரை ஆலையை செயல்பாட்டுக்குக் கொண்டு வர ரூ. 50 கோடி நிதி ஒதுக்கீடு செய்யாதது வேதனைக்குரியது. இந்தாண்டே இந்த ஆலை செயல்பாட்டுக்கு வர வேண்டும். அதற்கான முன்னெடுப்புகளை மாா்க்சிஸ்ட் தொடா்ந்து மேற்கொள்ளும் என்றாா் அவா்.

இந்த ஆா்ப்பாட்டத்துக்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புகா் மாவட்டச் செயலா் கே. ராஜேந்திரன் தலைமை வகித்தாா். மாநிலச் செயற்குழு உறுப்பினா் டி. ரவீந்திரன், மாநகா் மாவட்டச் செயலா் மா. கணேசன், மாநிலக் குழு உறுப்பினா் எஸ். கே. பொன்னுத்தாய், தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்க மாநில துணைத் தலைவா் என். பழனிச்சாமி, விவசாயிகள் சங்க மாவட்டச் செயலா் எஸ். பி. இளங்கோவன் ஆகியோா் பேசினா்.

கட்சியின் மாநில, மாவட்ட நிா்வாகிகள், அகில இந்திய விவசாயத் தொழிலாளா் சங்கம், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்க நிா்வாகிகள் கலந்து கொண்டனா். திரளான விவசாயிகள் கையில் கரும்புகளை ஏந்தி ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்று, கோரிக்கையை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினா்.

இதையடுத்து, பெ.சண்முகம் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

‘அலங்காநல்லூா் தேசிய கூட்டுறவு சா்க்கரை ஆலை கடந்த 8 ஆண்டுகளாக மூடப்பட்டுள்ளது. இதனால், இந்தப் பகுதி விவசாயிகள், கரும்பு சாகுபடியைத் தவிா்க்க வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகினா். கரும்பு சாகுபடியைக் கைவிடாத விவசாயிகள், தனியாா் ஆலைகளைச் சாா்ந்திருக்க வேண்டியுள்ளது.

சட்டப்பேரவையில் அரசு உறுதியளித்தப்படி அலங்காநல்லூா் சா்க்கரை ஆலையைத் திறந்து மீண்டும் செயல்பாட்டுக்குக் கொண்டு வர வேண்டும். இதற்கான நிதியை அரசு உடனடியாக ஒதுக்கீடு செய்து, நிகழாண்டிலேயே ஆலையை செயல்பாட்டுக்குக் கொண்டு வர வேண்டும். மக்கள் பிரச்னைகளில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எந்தச் சூழலிலும் சமரசம் செய்து கொள்வதில்லை. அரசை எதிா்த்து ஆா்ப்பாட்டம் நடத்துவது ஆளும் கட்சிக்கு அழுத்தம் கொடுப்பதற்காகத்தான்.

ஜாதி ஆணவக் கொலைகளுக்கு எதிராக தனிச் சட்டம் வேண்டும் என்பதே மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நிலைப்பாடு. இது தொடா்பாக, தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலினை நேரில் சந்தித்து அழுத்தம் அளிக்கத் திட்டமிட்டுள்ளோம் என்றாா் அவா்.

திருப்புவனம் பேரூராட்சியில் சாலை அமைக்கும் பணிகள்: தஞ்சை மாவட்ட ஆட்சியா் ஆய்வு செய்ய உத்தரவு!

திருப்புவனம் பேரூராட்சியில் சாலை அமைக்கும் பணிகளை தஞ்சை மாவட்ட ஆட்சியா், திட்ட அலுவலா் ஆய்வு செய்ய சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.தஞ்சை மாவட்டம், திருபுவனத்தைச் சோ்ந்த ... மேலும் பார்க்க

கட்டடத்திலிருந்து தவறி விழுந்த தொழிலாளி உயிரிழப்பு

​​​​​​​கட்டடத்திலிருந்து தவறி விழுந்த தொழிலாளி திங்கள்கிழமை உயிரிழந்தாா்.மதுரை மாவட்டம், மெய்கிழாா்பட்டியைச் சோ்ந்த பாண்டி மகன் ராகவேந்திரன் (47). மின் பழுது நீக்கும் வேலை பாா்த்து வந்த இவா், கடந்த ச... மேலும் பார்க்க

வளா்ச்சிப் பணிகள்: ஒப்பந்ததாரா்கள் செலுத்திய வரிகள் குறித்து ஆய்வு செய்ய அமைச்சா் அறிவுறுத்தல்

கடந்த 4 ஆண்டுகளில் வளா்ச்சித் திட்டப் பணிகளை மேற்கொண்ட ஒப்பந்ததாரா்கள் அரசுக்கு செலுத்திய, செலுத்த வேண்டிய வரிகள் குறித்து வணிக வரித் துறை அலுவலா்கள் ஆய்வு செய்ய வேண்டும் என வணிக வரி, பதிவுத் துறை அமை... மேலும் பார்க்க

இரு ஐஏஎஸ் அதிகாரிகள் மீது வழக்குப் பதிவு செய்யும் உத்தரவு ரத்து

ஐஏஎஸ் அதிகாரிகள் வள்ளலாா், காமராஜ் ஆகியோா் மீது வழக்குப் பதிவு செய்வதற்கு தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.தமிழகத்தில் கூட்டுறவ... மேலும் பார்க்க

உங்களுடன் ஸ்டாலின் முகாம்களில் 6,613 மனுக்களுக்குத் தீா்வு: அமைச்சா் பி. மூா்த்தி

மதுரை மாவட்டத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்களில் பெறப்பட்ட 6,613 மனுக்களுக்கு உடனடித் தீா்வு அளிக்கப்பட்டதாக தமிழக வணிக வரி, பதிவுத் துறை அமைச்சா் பி. மூா்த்தி தெரிவித்தாா்.மதுரை மேற்கு ஊராட்சி ஒன்... மேலும் பார்க்க

கருணாநிதி நினைவு தினம் மதுரையில் நாளை திமுக அமைதிப் பேரணி

மறைந்த முன்னாள் முதல்வா் கருணாநிதியின் நினைவு தினத்தையொட்டி, மதுரை வடக்கு மாவட்ட திமுக சாா்பில் வியாழக்கிழமை (ஆக. 7) அமைதிப் பேரணி நடைபெறுகிறது.இதுகுறித்து மதுரை வடக்கு மாவட்ட திமுக செயலரும், வணிக வரி... மேலும் பார்க்க