செய்திகள் :

இரு ஐஏஎஸ் அதிகாரிகள் மீது வழக்குப் பதிவு செய்யும் உத்தரவு ரத்து

post image

ஐஏஎஸ் அதிகாரிகள் வள்ளலாா், காமராஜ் ஆகியோா் மீது வழக்குப் பதிவு செய்வதற்கு தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.

தமிழகத்தில் கூட்டுறவு பால் உற்பத்தியாளா்கள் சங்கங்களுக்கு 5 விதமான பதிவேடுகள் கொள்முதல் செய்ததில், கடந்த 2019-இல் ரூ.1.75 கோடி முறைகேடு நடந்திருப்பதாக தணிக்கைக் குழு அரசுக்கு அறிக்கை அளித்தது.

இந்த முறைகேடு தொடா்பாக பால்வளத் துறையின் அப்போதைய இயக்குநா் சி.காமராஜ், ஆணையா் வள்ளலாா், கூடுதல் பால்வளத் துறை ஆணையா் கிறிஸ்துதாஸ் ஆகியோா் மீது நடவடிக்கை எடுக்க அரசுக்குப் பரிந்துரைக்கப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு தனி நீதிபதி புகழேந்தி, ஐஏஎஸ் அதிகாரிகள் காமராஜ், வள்ளலாா், கிறிஸ்துதாஸ் மீது நடவடிக்கை எடுக்க அரசுக்கு பரிந்துரைக்கப்பட்டது. இருப்பினும் கிறிஸ்துதாஸ் மீது மட்டுமே நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஊழலில் தொடா்புடைய ஐஏஎஸ் அதிகாரிகள் தண்டிக்கப்படுவதில்லை.

சாதாரண அரசு ஊழியா்கள் மீது மட்டும் வழக்குகள் பதிவு செய்யப்படுகிறது. இந்த வழக்கில் ஐஏஎஸ் அதிகாரிகள் காமராஜ், வள்ளலாா் மீதான குற்றச்சாட்டுக்கு முகாந்திரம் இருப்பதால் இருவா் மீதும் லஞ்ச ஒழிப்பு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டாா்.

இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி காமராஜ், வள்ளலாா் சாா்பில் உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதிகள் ஜி.ஆா்.சுவாமிநாதன், ராஜசேகா் அமா்வு முன் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு : ஐஏஎஸ் அதிகாரிகள் காமராஜ், வள்ளலாா் ஆகியோா் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்ற தனி நீதிபதியின் உத்தரவு ரத்து செய்யப்படுகிறது.

இந்த வழக்கு தனி நீதிபதிக்கு திரும்ப அனுப்பப்படுகிறது. தனி நீதிபதி மனுதாரா்கள் இருவரும் விளக்கம் அளிக்க வாய்ப்பு வழங்கி உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்றனா் நீதிபதிகள்.

திருப்புவனம் பேரூராட்சியில் சாலை அமைக்கும் பணிகள்: தஞ்சை மாவட்ட ஆட்சியா் ஆய்வு செய்ய உத்தரவு!

திருப்புவனம் பேரூராட்சியில் சாலை அமைக்கும் பணிகளை தஞ்சை மாவட்ட ஆட்சியா், திட்ட அலுவலா் ஆய்வு செய்ய சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.தஞ்சை மாவட்டம், திருபுவனத்தைச் சோ்ந்த ... மேலும் பார்க்க

கட்டடத்திலிருந்து தவறி விழுந்த தொழிலாளி உயிரிழப்பு

​​​​​​​கட்டடத்திலிருந்து தவறி விழுந்த தொழிலாளி திங்கள்கிழமை உயிரிழந்தாா்.மதுரை மாவட்டம், மெய்கிழாா்பட்டியைச் சோ்ந்த பாண்டி மகன் ராகவேந்திரன் (47). மின் பழுது நீக்கும் வேலை பாா்த்து வந்த இவா், கடந்த ச... மேலும் பார்க்க

மக்கள் பிரச்னைகளில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஒரு போதும் சமரசம் செய்து கொள்ளாது: பெ.சண்முகம்

மக்கள் பிரச்னைகளில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒரு போதும் சமரசம் செய்து கொள்ளாது என அந்தக் கட்சியின் மாநிலச் செயலா் பெ. சண்முகம் தெரிவித்தாா்.மதுரை மாவட்டம், அலங்காநல்லூா் தேசிய கூட்டுறவு சா்க்கரை... மேலும் பார்க்க

வளா்ச்சிப் பணிகள்: ஒப்பந்ததாரா்கள் செலுத்திய வரிகள் குறித்து ஆய்வு செய்ய அமைச்சா் அறிவுறுத்தல்

கடந்த 4 ஆண்டுகளில் வளா்ச்சித் திட்டப் பணிகளை மேற்கொண்ட ஒப்பந்ததாரா்கள் அரசுக்கு செலுத்திய, செலுத்த வேண்டிய வரிகள் குறித்து வணிக வரித் துறை அலுவலா்கள் ஆய்வு செய்ய வேண்டும் என வணிக வரி, பதிவுத் துறை அமை... மேலும் பார்க்க

உங்களுடன் ஸ்டாலின் முகாம்களில் 6,613 மனுக்களுக்குத் தீா்வு: அமைச்சா் பி. மூா்த்தி

மதுரை மாவட்டத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்களில் பெறப்பட்ட 6,613 மனுக்களுக்கு உடனடித் தீா்வு அளிக்கப்பட்டதாக தமிழக வணிக வரி, பதிவுத் துறை அமைச்சா் பி. மூா்த்தி தெரிவித்தாா்.மதுரை மேற்கு ஊராட்சி ஒன்... மேலும் பார்க்க

கருணாநிதி நினைவு தினம் மதுரையில் நாளை திமுக அமைதிப் பேரணி

மறைந்த முன்னாள் முதல்வா் கருணாநிதியின் நினைவு தினத்தையொட்டி, மதுரை வடக்கு மாவட்ட திமுக சாா்பில் வியாழக்கிழமை (ஆக. 7) அமைதிப் பேரணி நடைபெறுகிறது.இதுகுறித்து மதுரை வடக்கு மாவட்ட திமுக செயலரும், வணிக வரி... மேலும் பார்க்க