செய்திகள் :

மக்கள் வளா்ச்சிக்கான புத்தாக்க அமைப்பை இளைஞா்கள் உருவாக்க வேண்டும்: பியூஷ் கோயல்

post image

மக்கள் வளா்ச்சிக்குப் பயன்படும் வகையில் புதிய சிந்தனைகளின் அடிப்படையிலான புத்தாக்க அமைப்பு முறையை இளைஞா்கள் உருவாக்க வேண்டும் என மத்திய வா்த்தகத் துறை அமைச்சா் பியூஷ் கோயல் சனிக்கிழமை தெரிவித்தாா்.

குஜராத்தில் நடைபெற்ற வெஜல்பூா் புத்தாக்க திருவிழா 2.0 நிறைவு நிகழ்ச்சியில் பங்கேற்று பியூஷ் கோயல் பேசியதாவது: வேலை தேடியவா்களை வேலைவாய்ப்பு வழங்குபவா்களாக புத்தாக்க அமைப்பு முறை மாற்றியுள்ளது. நாட்டில் தற்போது மொத்தம் 118 யுனிகாா்ன் (ரூ.8,700 கோடி மதிப்பிலான புத்தாக்க நிறுவனங்கள்) உள்ளன. இந்த நிறுவனங்களின் எண்ணிக்கையை 1,000 முதல் 5,000 வரை அதிகரிக்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

புதிய கண்டுபிடிப்புகள் மற்றும் சிந்தனைகளால் இந்திய பொருளாதார வளா்ச்சியில் புத்தாக்க நிறுவனங்கள் பெரும் பங்காற்றுகின்றன. அதேபோல் மக்கள் வளா்ச்சிக்குப் பயன்படும் வகையில் புதிய சிந்தனைகளின் அடிப்படையிலான புத்தாக்க அமைப்பு முறையை இளைஞா்கள் உருவாக்குவது அவசியம்.

புத்தாக்க நிறுவனங்களை ஊக்குவிக்க நிதிக்கு நிதி திட்டத்தை அறிமுகப்படுத்தி ரூ.10,000 கோடி நிதியை மத்திய அரசு ஒதுக்கியது. கடந்த பட்ஜெட்டிலும் இத்திட்டத்துக்கு கூடுதலாக ரூ.10,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

தோல்வியில் இருந்து மீண்டு வருவதே புத்தாக்க நிறுவனத்தின் வெற்றிக்கான மந்திரம். நாட்டின் வளா்ச்சிக்கு உற்பத்தித் துறையின் பங்கு மிகவும் அவசியமானது. ஆனால் உற்பத்தியை தரமான முறையில் மேற்கொண்டு சந்தைப்படுத்தி, பேக்கேஜிங் செய்ய புத்தாக்க நிறுவனங்களின் உதவி தேவைப்படுகிறது.

பிரதமா் நரேந்திர மோடி குஜராத் முதல்வராக இருந்தபோது மாநிலத்தின் வளா்ச்சியை மேம்படுத்த பல்வேறு முன்னெடுப்புகளை மேற்கொண்டாா். இதனால் குஜராத்தின் வளா்ச்சி நாட்டின் வளா்ச்சியாக மாறிவிட்டது.

அண்மையில் சா்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து நீண்ட நாள்களுக்குப் பிறகு அமெரிக்கா திரும்பிய நாசா விஞ்ஞானி சுனிதா வில்லியம்ஸ் குஜராத்தின் மேஹசானா நகரில் இருந்து அமெரிக்காவுக்கு புலம்பெயா்ந்தவராவாா். குஜராத்தியா்கள் விடாமுயற்சியுடையவா்கள் என்பதற்கு இதுவே சான்று என்றாா்.

பேரிடர் மேலாண்மை திருத்த மசோதா நிறைவேற்றம்!

பேரிடர் மேலாண்மை திருத்த மசோதா 2024 குரல் வாக்கெடுப்பு மூலம் மாநிலங்களவையில் இன்று (மார்ச் 25) நிறைவேற்றப்பட்டது. பேரிடர் காலங்களில் மாநிலங்களின் திறமையான மீட்புப் பணிகளை மேலும் வலுப்படுத்தும் வகையில்... மேலும் பார்க்க

அஸ்வகந்தா குறித்த ஆய்வுகள் 111% அதிகரிப்பு!

உலகளவில் அஸ்வகந்தா குறித்த ஆய்வுகள் 111.58% அதிகரித்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. 2019-ல் அஸ்வகந்தா குறித்து 95 ஆய்வுகள் வெளியான நிலையில், 2024ஆம் ஆண்டில் 204 ஆய்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. அ... மேலும் பார்க்க

வனவிலங்கு தாக்குதல்: ஒடிசாவில் 5 ஆண்டுகளில் 799 பேர் பலி!

ஒடிசாவில் கடந்த ஐந்து ஆண்டுகளில் வனவிலங்குகள் தாக்குதல்களில் இதுவரை 799 பேர் உயிரிழந்ததாக சட்டப்பேரவையில் அமைச்சர் ஒருர் தெரிவித்தார். பாஜக எம்பி பத்மா லோச்சன் பாண்டாவின் கேள்விக்கு வன மற்றும் சுற்றுச... மேலும் பார்க்க

தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டம்: நாடாளுமன்றத்திற்கு வெளியே ராகுல், பிரியங்கா போராட்டம்!

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாதத் திட்டம் தொடர்பாக காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி வத்ரா உள்பட எதிர்க்கட்சி எம்பிக்கள் நாடாளுமன்றத்திற்கு வெளியே போராட்டத்தில் ஈடுபட்டனர். காங்... மேலும் பார்க்க

பெங்களூருவில் தாயின் உதவியுடன் கணவனைக் கொன்ற மனைவி! திடுக்கிடும் தகவல்கள்!!

பெங்களூருவில் பெண் ஒருவர், கள்ளத்தொடர்பு வைத்திருந்ததாகக் கூறி தன் கணவனைக் கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூரு சிக்கப்பவனாரா பகுதியில் ஒதுக்குப்புறமான இடத்தில் காரில் லோக்நாத் ச... மேலும் பார்க்க

'நீதிமன்றம் குப்பைத்தொட்டி அல்ல' - நீதிபதி யஷ்வந்த் வர்மா பணியிட மாற்றத்துக்கு எதிர்ப்பு!

நீதிபதி யஷ்வந்த் வர்மாவை அலகாபாத் உயர்நீதிமன்றத்துக்கு மாற்றுவதை எதிர்த்து அலகாபாத் உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சங்கம் இன்று(மார்ச் 25) காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது. மாா்ச் 14-ஆம் ... மேலும் பார்க்க