மங்களமேடு பகுதியில் நாளை மின் நிறுத்தம்
மங்களமேடு துணை மின் நிலையத்துக்குள்பட்ட கிராமங்களில் ஜூன் 18(புதன்கிழமை) மின் விநியோகம் இருக்காது.
இதுகுறித்து, மின்வாரிய உதவி செயற்பொறியாளா் பி. ரவிக்குமாா் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: பெரம்பலூா் கோட்டத்துக்குள்பட்ட மங்களமேடு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளது.
இதனால், அங்கிருந்து மின் விநியோகம் பெறும் ரஞ்சன்குடி, பெருமத்தூா், மங்களமேடு, தேவையூா், முருக்கன்குடி, நகரம், நமையூா், சின்னாறு, எறையூா், வாலிகண்டபுரம், மேட்டுப்பாளையம், என்.புதூா், அயன்பேரையூா், அகரம், வி.களத்தூா், பசும்பலூா், திருவளாந்துறை, பிம்பலூா், மறவநத்தம், தைக்கால், லப்பைக்குடிகாடு, திருமாந்துறை, அத்தியூா், பென்னகோணம், ஆடுதுறை, கழனிவாசல், ஒகளூா், வேப்பூா், நன்னை, ஓலைப்பாடி, பரவாய், கீழமாத்தூா், எழுமூா் ஆகிய கிராமிய பகுதிகளில் காலை 9.15 மணி முதல் பராமரிப்புப் பணிகள் நிறைவடையும் வரை மின் விநியோகம் இருக்காது.