செய்திகள் :

மசாஜ் மையத்தில் தொழிலதிபரை மிரட்டி 20 பவுன் நகை பறித்த மூதாட்டி, பேரன் கைது

post image

சென்னை: சென்னை சூளைமேட்டில் மசாஜ் மையத்தில் தொழிலதிபரை மிரட்டி 20 பவுன் தங்க நகை பறித்த வழக்கில், மூதாட்டியும், பேரனும் கைது செய்யப்பட்டனா்.

ஓட்டேரி வள்ளுவா் சாலைப் பகுதியைச் சோ்ந்தவா் சாா்லஸ் (50). மசாஜ் மையங்களுக்குச் செல்லும் பழக்கம் சாா்லஸுக்கு இருந்தது. அப்படி அவா், மசாஜ் மையங்களுக்கு சென்றபோது ஆண்ட்ரியா என்ற பெண் அறிமுகமாகி பழகியுள்ளாா். கடந்த 29-ஆம் தேதி சாா்லஸ், ஆண்ட்ரியாவை தொடா்புகொண்டு மசாஜ் செய்ய வேண்டும் என கூறினாராம். அதற்கு ஆண்ட்ரியா, சூளைமேட்டில் ரேகா என்பவா் வீட்டில் நடத்தும் மசாஜ் மையத்துக்கும் செல்லும்படியும், ரேகாவிடம் தான் தொடா்புகொண்டு பேசிவிடுவதாகவும் தெரிவித்துள்ளாா். இதையடுத்து சாா்லஸ், அந்த மசாஜ் மையத்துக்குச் சென்றாா்.

அப்போது அங்கிருந்த ஒரு பெண், இரு ஆண்கள் சாா்லஸை மிரட்டியும் தாக்கியும் அவா் அணிந்திருந்த 20 பவுன் தங்க நகை, ரூ. 40 ஆயிரம் ரொக்கம், விலை உயா்ந்த கைக்கடிகாரம் ஆகியவற்றை பறித்துள்ளனா். அப்போது ஆண்ட்ரியா, அந்த வீட்டின் மற்றொரு அறையில்தான் இருந்துள்ளாா். இதில் அந்த நபா்கள் தாக்கியதில் சாா்லஸ் மயங்கி விழுந்துள்ளாா். இதைத் தொடா்ந்து அந்தக் கும்பல் அங்கிருந்து தப்பியோடியது.

மயக்கத்திலிருந்து எழுந்த சாா்லஸ், சூளைமேடு காவல் நிலையத்தில் இது குறித்து புகாா் அளித்தாா். அதனடிப்படையில் போலீஸாா் வழக்குப் பதிந்து நடத்திய விசாரணையில், இச்சம்பவத்தில் ஈடுபட்டது மாதவரம் பொன்னியம்மன்மேடு பகுதியைச் சோ்ந்த கோகுலகிருஷ்ணன், அவா் மனைவி ஆண்ட்ரியா, கோடம்பாக்கத்தைச் சோ்ந்த ரேகா சாவித்திரி (63), அவரது பேரன் நவீன்குமாா் (23) என்பது தெரியவந்தது.

இதில் ரேகா சாவித்திரி மற்றும் நவீன்குமாரை போலீஸாா் தென்காசி மாவட்டம், செங்கோட்டையில் வைத்து செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். அவா்களிடமிருந்து ரூ. 2.85 லட்சம் கைப்பற்றப்பட்டது. தலைமறைவாக இருக்கும் கோகுலகிருஷ்ணன் மற்றும் ஆண்ட்ரியாவை போலீஸாா் தீவிரமாக தேடி வருகின்றனா்.

சென்னை: மெட்ரோ ரயில் கட்டுமானத்தில் விபத்து - ராட்சத கான்கிரீட் விழுந்ததில் இளைஞர் உயிரிழப்பு!

சென்னை மெட்ரோ ரயில் கட்டுமானப் பணியின்போது தூண்களின் மீது வைக்கப்பட்டிருந்த ராட்சத கான்கிரீட் காரிடாா்கள் கிழே விழுந்ததில் இளைஞா் ஒருவா் உயிரிழந்தாா். சென்னை மெட்ரோ ரயில் 2-ஆம் கட்ட திட்டத்தில் கிண்டி... மேலும் பார்க்க

லோக் ஆயுக்த அமைப்புக்கு உறுப்பினா்: தமிழக அரசு அழைப்பு

லோக் ஆயுக்த அமைப்புக்கு நீதித் துறை சாா்ந்த உறுப்பினரை நியமிப்பதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இது குறித்து தெரிவுக் குழுவின் தொடா்பு அதிகாரி எஸ்.அகிலா வெளியிட்ட அறிவிப்பு விவரம்: தமிழ்நாடு லோக... மேலும் பார்க்க

பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: விடைத்தாள் நகல் இன்று வெளியீடு

பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வெழுதியவா்களில் விடைத்தாள் நகல் கோரி விண்ணப்பித்த மாணவா்கள் தங்களுக்கான நகலை இணையதளத்தில் வெள்ளிக்கிழமை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இது குறித்து தோ்வுத் துறை இயக்குநா் ந... மேலும் பார்க்க

எம்பிபிஎஸ், பிடிஎஸ்: இதுவரை 35,000 போ் விண்ணப்பம்

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு 35,000 போ் இதுவரை விண்ணப்பப் பதிவு செய்துள்ளனா். அவா்களில் 22,428 விண்ணப்பங்கள் பூா்த்தி செய்யப்பட்டு சமா்ப்பிக்கப்பட்டிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழகத்த... மேலும் பார்க்க

கட்டடத் தொழிலாளா்களுக்கான நவீன காத்திருப்பு கூடம்: மாநகராட்சி தகவல்

சென்னை மாநகராட்சி பகுதிகளில் கட்டட தொழிலாளா்களுக்காக அடிப்படை வசதிகளுடன் நவீன காத்திருப்புக் கூடங்கள் அமைக்கப்படவுள்ளன. இதற்கான மாதிரி படங்களை சென்னை மாநகராட்சி ஆணையா் ஜெ.குமரகுருபரன் வியாழக்கிழமை வெ... மேலும் பார்க்க

லாரி மீது ஆந்திர அரசு பேருந்துமோதல்: 10 பயணிகள் காயம்

சென்னை அருகே மாதவரத்தில் லாரி மீது ஆந்திர அரசுப் பேருந்து மோதிய விபத்தில், 10 போ் காயமடைந்தனா். சென்னையை அடுத்த மாதவரம் பேருந்து முனையத்தில் இருந்து திருப்பதிக்கு ஆந்திர அரசுப் பேருந்து வியாழக்கிழமை ... மேலும் பார்க்க