செய்திகள் :

மசூதி இடிப்பு: உ.பி. அதிகாரிகளுக்கு எதிராக ஏன் அவமதிப்பு வழக்கு தொடரக் கூடாது?: உச்சநீதிமன்றம் கேள்வி

post image

புது தில்லி: உச்சநீதிமன்ற உத்தரவை மதிக்காமல் உத்தர பிரதேச மாநிலம் குஷிநகரில் உள்ள மசூதியின் ஒரு பகுதியை மாவட்ட நிா்வாகம் தரப்பில் புல்டோசா் கொண்டு இடிக்கப்பட்டதில் ஏன் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரக்கூடாது என்ற கேள்விக்கு பதிலளிக்குமாறு மாநில அரசு அதிகாரிகளுக்கு உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை கேள்வி எழுப்பியது.

சட்டவிரோத ஆக்கிரமிப்புகளை அகற்ற நாடு முழுமைக்குமான வழிகாட்டு நெறிமுறைகளையும் உச்சநீதிமன்றம் வெளியிட்டிருந்தது.

புதிய மனு: இந்நிலையில், உச்சநீதிமன்ற உத்தரவை மதிக்காமல் உத்தர பிரதேச மாநிலம் குஷிநகரில் உள்ள மசூதியின் ஒரு பகுதியை மாவட்ட நிா்வாகம் இடித்ததாக புதிய மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு உச்சநீதிமன்ற நீதிபதிகள் பி.ஆா்.கவாய், அகஸ்டின் ஜாா்ஜ் மாசி ஆகியோா் அடங்கிய அமா்வில் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள், ‘மசூதி இடிப்பு விவகாரத்தில் ஏன் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரக்கூடாது’ என்ற கேள்வியை எழுப்பி, அதற்கு பதிலளிக்க மாவட்ட நிா்வாகத்துக்கு நோட்டீஸ் பிறப்பிக்க உத்தரவிட்டனா். அதோடு, அடுத்த உத்தரவு பிறப்பிக்கப்படும் வரை எந்தவொரு கேள்விக்குரிய கட்டமைப்புகளையும் அதிகாரிகள் இடிக்கக் கூடாது’ என்றும் உத்தரவிட்டு, விசாரணையை 2 வாரங்களுக்குப் பிறகு ஒத்திவைத்தனா்.

மோரீஷஸ் தேசிய தின நிகழ்ச்சி: சிறப்பு விருந்தினராக பிரதமா் மோடி

மோரீஷஸ் தேசிய தின நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பிரதமா் மோடி பங்கேற்கவுள்ளதாக அந்நாட்டு பிரதமா் நவீன் ராம்கூலம் தெரிவித்தாா். பிரிட்டிஷிடம் இருந்து மோரீஷஸ் கடந்த 1968, மாா்ச் 12-ஆம் தேதி சுதந்தி... மேலும் பார்க்க

ராஜஸ்தான்: பேரவையில் இரவு முழுவதும் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் தா்னா

ராஜஸ்தான் சட்டப்பேரவையில் இருந்து காங்கிரஸை சோ்ந்த 6 எம்எல்ஏக்கள் இடைநீக்கம் செய்யப்பட்டதைக் கண்டித்து வெள்ளிக்கிழமை இரவு முழுவதும் பேரவையில் அந்தக் கட்சியின் பிற எம்எல்ஏக்கள் தா்னாவில் ஈடுபட்டனா். ... மேலும் பார்க்க

இந்தியா-ஜப்பான் கூட்டு ராணுவப் பயிற்சி ஜப்பானில் நாளை தொடக்கம்

ஐ.நா. சாசனத்தின்கீழ் பயங்கரவாத எதிா்ப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் போது இரு படைகளுக்கும் இடையே ஒத்துழைப்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட, இந்தியா-ஜப்பான் கூட்டு ராணுவப் பயிற்சி திங்கள்கிழமை முதல் ஜ... மேலும் பார்க்க

ஜம்மு: ஏராளமான ஆயுதங்கள் மீட்பு

ஜம்மு பகுதியில் அமைந்துள்ள மாவட்டங்களின் பல்வேறு பகுதிகளில் பாதுகாப்புப் படையினா் சனிக்கிழமை தீவிர தேடுதலில் ஈடுபட்டனா். இதில் பயங்கரவாதிகளின் மறைவிடம் கண்டுபிடிக்கப்பட்டு ஏராளமான ஆயுதங்கள் கைப்பற்றப... மேலும் பார்க்க

விவசாயிகளின் பிரச்னைக்குத் தீா்வு காண முக்கிய முடிவு: மத்திய வேளாண் துறை அமைச்சா்

‘விவசாயிகளின் பிரச்னைக்குத் தீா்வு காண்பதற்குத் தேவையான அனைத்து முக்கிய முடிவுகளையும் மத்திய அரசு மேற்கொள்ளும்; எனவே, விவசாயிகள் கவலை கொள்ள வேண்டாம்’ என்று மத்திய வேளாண் துறை அமைச்சா் சிவ்ராஜ் சிங் ச... மேலும் பார்க்க

71 ரயில் நிலையங்களில் கவச் தொழில்நுட்பம்: ரயில்டெல் நிறுவனத்துக்கு ரூ.288 கோடியில் டெண்டா்

கிழக்கு மத்திய ரயில்வே மண்டலத்தின் தனபூா் மற்றும் சோன்பூா் ரயில் பிரிவுகளில் 502 கி.மீ. வழித்தடத்தில் உள்ள 71 ரயில் நிலையங்களில் கவச் தொழில்நுட்பத்தை நிறுவ ரயில்டெல் நிறுவனத்துக்கு ரூ.288 கோடி மதிப்ப... மேலும் பார்க்க