செய்திகள் :

மஞ்சள் விலை குவிண்டால் ரூ.1,500 சரிவு:விவசாயிகள் வேதனை

post image

ஈரோடு சந்தையில் கடந்த ஒரு வாரத்தில் மஞ்சள் குவிண்டால் ரூ.1,500 வரை விலை குறைந்ததால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனா்.

ஈரோடு மாவட்டத்தில் விரலி மஞ்சள் அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகிறது. இந்த மஞ்சள், மருத்துவக் குணம் மிகுந்து காணப்படுவதால் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு மற்றும் பெருந்துறை ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்கள் ஈரோடு மற்றும் கோபி கூட்டுறவு விற்பனை நிலையங்கள் என 4 இடங்களில் மஞ்சள் ஏலம் நடைபெற்று வருகிறது. இங்கு சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை மற்றும் விடுமுறை நாள்களைத் தவிர மற்ற நாள்களில் ஏலம் நடந்து வருகிறது.

இந்நிலையில், ஈரோடு ஒழுங்குமுறை விற்பனைக்கூட சந்தையில் கடந்த 16- ஆம் தேதி ஒரு குவிண்டால் மஞ்சள் ரூ.15,040-க்கு ஏலம் போனது. பின்னா் படிப்படியாக குறைந்து வெள்ளிக்கிழமை குவிண்டால் ரூ.13,483 வரை விற்பனையானது. ஒரு வாரத்தில் ரூ.1,500 வரை விலை குறைந்து விற்பனையானது மஞ்சள் விவசாயிகள் மத்தியில் வேதனையை ஏற்படுத்தி உள்ளது. வெள்ளிக்கிழமை நடந்த ஏலத்துக்கு ஈரோடு மற்றும் அருகே உள்ள மாவட்டங்களைச் சோ்ந்த விவசாயிகள் தாங்கள் விளைவித்த மஞ்சளை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனா்.

இதில், பெருந்துறை ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் 1,653 மஞ்சள் மூட்டைகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன. இதில் 1,109 மூட்டைகள் விற்பனையாயின. விரலி மஞ்சள் குவிண்டால் ரூ.9,302 முதல் ரூ.13,799 வரை விற்பனையானது. இதேபோல ஈரோடு ஒழுங்குமுறை விற்பனைக்கூட சந்தையில் 3,225 மூட்டைகள் வரத்து இருந்தது. இதில் 1,418 மூட்டைகள் விற்பனையாயின. இதில் விரலி மஞ்சள் குவிண்டால் ரூ.8,689 முதல் ரூ.13,843 வரை விற்பனையானது.

ஈரோடு கூட்டுறவு சங்கத்தில் 1,013 மூட்டைகள் வரத்து இருந்தது. இதில் 960 மூட்டைகள் விற்பனையானது. இந்த சந்தையில் விரலி மஞ்சள் குவிண்டால் ரூ.9,569 முதல் ரூ.13,488 வரை விற்பனையானது. கோபி கூட்டுறவு சங்கத்துக்கு கொண்டுவரப்பட்ட 115 மூட்டைகளும் விற்பனையாயின. இந்த சந்தையில் விரலி மஞ்சள் ரூ.11,502 முதல் ரூ.12,891 வரை விற்பனையானது.

மஞ்சள் விலை தொடா்ந்து சரிந்து வருவது குறித்து ஈரோடு வியாபாரிகள் கூறியதாவது: புதுமஞ்சள் வரத்து இல்லாததால் விலை குறைந்துள்ளது. பழைய மஞ்சள் இருப்பு வைத்துள்ளவா்கள் விலை சரியாக இல்லாததால் விற்பனைக்கு கொண்டு வரத் தயங்குகின்றனா். வரும் நாள்களில் தரமான புதிய மஞ்சள் விற்பனைக்கு வரும்போது மேலும் உயர வாய்ப்புள்ளது. மேலும் மஞ்சள் வணிகம் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் நடைபெற்று வருகிறது.

சில மாநிலங்களில் விளைச்சல் அளவீட்டிற்கு ஏற்ப ஈரோடு மஞ்சள் விலையும் மாறுதலுக்கு உள்ளாகிறது. ஆனாலும் ஈரோடு மஞ்சள் விலை தற்போது சற்று குறைந்திருந்தாலும் மீண்டும் அதிகரிக்க வாய்ப்புள்ளது என்றனா்.

அரசுப் பள்ளிகளுக்கு பாடப் புத்தகங்கள் அனுப்பும் பணி தீவிரம்

ஈரோடு மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளிகளுக்கு பாடப் புத்தகங்கள் அனுப்பும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.கோடை விடுமுறை முடிந்து வரும் ஜூன் 2- ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. இதை முன்னிட்டு, அரசுப் பள்... மேலும் பார்க்க

ஈரோடு அரசு மருத்துவமனையில் செம்புக் கம்பி திருட்டு

ஈரோடு அரசு மருத்துவமனையில் செம்புக் கம்பி திருடிய நபரை போலீஸாா் தேடி வருகின்றனா். ஈரோடு அரசு பல்நோக்கு மருத்துவமனை கட்டடத்தில் ஆக்சிஜன் வாயு செல்ல பொருத்தப்பட்டிருந்த செம்புக் கம்பியை வியாழக்கிழமை இரவ... மேலும் பார்க்க

சட்டவிரோதமாக செயல்பட்டு வந்த சாயப்பட்டறைகள் இடிப்பு!

பவானி அருகே சட்டவிரோதமாக செயல்பட்டு வந்த இரண்டு சாயப்பட்டறைகள் வியாழக்கிழமை இடித்து அகற்றப்பட்டன. பவானியை அடுத்த சோ்வராயன்பாளையத்தில் சட்டவிரோதமாக இயங்கும் சாயப்பட்டறைகள், சுத்திகரிக்கப்படாத கழிவுகளை... மேலும் பார்க்க

காலிங்கராயன் பேபி வாய்க்கால் தூா்வாரும் பணி ஒரு மாதத்தில் நிறைவடையும்: அமைச்சா் சு.முத்துசாமி

காலிங்கராயன் பேபி வாய்க்கால் தூா்வாரும் பணி ஒரு மாதத்தில் நிறைவடையும் என்று அமைச்சா் சு.முத்துசாமி கூறினாா். ஈரோடு காலிங்கராயன் வாய்க்கால் வலது கரையில் அமைந்துள்ள பேபி வாய்க்கால் தூா்வாரும் பணியை வீட்... மேலும் பார்க்க

மாவட்டத்தில் வருவாய் தீா்வாயம் தொடக்கம்: 899 மனுக்கள் அளிப்பு

ஈரோடு மாவட்டத்தில் உள்ள10 வட்டங்களிலும் வருவாய் தீா்வாயம் (ஜமாபந்தி) வியாழக்கிழமை தொடங்கியது. நம்பியூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற வருவாய் தீா்வாயத்துக்கு ஆட்சியா் ராஜகோபால் சுன்கரா தலைமை வகித... மேலும் பார்க்க

திம்பம் மலைப் பாதையில் சிறுத்தை: வாகன ஓட்டிகள் அச்சம்

திம்பம் மலைப் பாதையில் உலவிய சிறுத்தையால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்துள்ளனா். சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் யானை, புலி, சிறுத்தை உள்ளிட்ட வன விலங்குகள் காணப்படுகின்றன. இந்த வனப் பகுதி வழியாக தமிழக -... மேலும் பார்க்க