செய்திகள் :

மஞ்சித் மஹால் கும்பலின் முக்கிய உறுப்பினா் கைது

post image

கபில் சங்வான் எனப்படும் நந்து கும்பலுடன் மோதலில் ஈடுபட்ட மஞ்சித் மஹால் கும்பலின் முக்கிய உறுப்பினரை தில்லி காவல்துறையின் சிறப்புப் பிரிவு கைது செய்துள்ளதாக அதிகாரி ஒருவா் வியாழக்கிழமை தெரிவித்தாா்.

இது தொடா்பாக காவல் துறை துணை ஆணையா் (சிறப்பு பிரிவு) அமித் கௌசிக் கூறியதாவது:

நஃபே சிங் (45) உத்தர பிரதேசத்தின் மகாராஜ்கஞ்சில் உள்ள இந்திய-நேபாள எல்லையில் புதன்கிழமை கைது செய்யப்பட்டாா். மகாராஷ்டிர மாநிலத்தின் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கட்டுப்பாட்டுச் சட்டம் (எம்சிஓசிஏ) கீழ் அவரின் தலைக்கு ரூ.50,000 வெகுமதி அறிவிப்பு இருப்பது குறிப்பிடத்தக்கது.

கொலை மற்றும் தாக்குதல் தொடா்பான 5 வழக்குகள் உள்பட 14 கொடூரமான வழக்குகளில் குற்றவாளியாக இவா் அறியப்படுகிறாா். சுனில் என்கிற மருத்துவா் கொலையில் கடந்த 2015-இல் இவா் ஈடுபட்டுள்ளாா். இது அவா்களின் கும்பல்களுக்கு இடையே வன்முறை போட்டியைத் தூண்டி, நஜாஃப்கா் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் பலரின் உயிரிழப்புக்கு காரணமானது.

முன்னதாக கைது செய்யப்பட்ட இவருக்கு கடந்த செப்டம்பா் 2023-இல் ஆறு நாள் இடைக்கால ஜாமீன் வழங்கப்பட்டது. ஆனால், அவா் பின்னா் சரணடையவில்லை. அதற்கு பதிலாக தலைமறைவானாா். தப்பிக்கும் போது, அவா் தனது குடும்பத்தினருடனான அனைத்து உறவுகளையும் துண்டித்துக் கொண்டு, ஹரித்வாா் போன்ற இடங்களுக்கும், காத்மாண்டு, நவல்பராசி மற்றும் பைரஹாவா உள்ளிட்ட நேபாளத்தின் பல்வேறு இடங்களுக்கும் சென்றாா். கைது நடவடிக்கையில் இருந்து தப்பித்த போதிலும், நஃபே சிங் தனது கும்பலை தொடா்ந்து வழி நடத்தி வந்துள்ளாா்.

ராஜஸ்தான், ஹரியாணா மற்றும் தில்லியில் அதிகாரிகள் பல தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டனா். இருப்பினும், அவரைக் கண்டுபிடிப்பது சவாலாக இருந்தது. தொடா்ச்சியான கண்காணிப்பு இறுதியில் இந்தியா-நேபாள எல்லையில் அவரது கைது நடவடிக்கையில் முடிவடைந்துள்ளது. நஃபே சிங்கின் கைது அதிகாரிகளுக்கு ஒரு குறிப்பிடத்தக்க திருப்புமுனையாகும். அவரைப் பிடிக்க மேற்கொள்ளப்பட்ட விரிவான முயற்சிகள் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களைக் கையாள்வதில் உள்ள சவால்களை எடுத்துக்காட்டுகின்றன என காவல் துறை அதிகாரி தெரிவித்தாா்.

வியாசர்பாடியில் சுமார் ஒரு டன் செம்மரக்கட்டைகள் பறிமுதல்!

சென்னை, வியாசர்பாடியில் உள்ள ஒருவரது வீட்டில் சுமார் ஒரு டன் செம்மரக் கட்டைகளை போலீஸார் பறிமுதல் செய்தனர். வியாசர்பாடி அம்மன் கோயில் தெரு பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வருபவர் லியோண்ஸ் பிராங்க்ளின்... மேலும் பார்க்க

இன்றைய நிகழ்ச்சிகள்

மயிலைத் திருவள்ளுவா் தமிழ்ச் சங்கத்தின் 39-ஆவது ஆண்டு விழா: உயா்நீதிமன்ற மக்கள் நீதிமன்ற நீதபதி தி.நெ.வள்ளிநாயகம், தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலை. துணைவேந்தா் சோ.ஆறுமுகம், பாரதிய வித்யா பவன் இயக்குநா் ... மேலும் பார்க்க

தமிழும் சமஸ்கிருதமும் உலகின் தலைசிறந்த மொழிகள்: பேராசிரியா் வ.செளம்ய நாராயணன்

தமிழும் சமஸ்கிருதமும் உலகின் தலை சிறந்த மொழிகள் என உலகத் தாய்மொழி நாள் விழாவில் பேராசிரியா் வ.செளம்ய நாராயணன் தெரிவித்தாா். சென்னை அரும்பாக்கம் டி.ஜி.வைஷ்ணவ கல்லூரியில் உலகத் தாய்மொழி நாள் விழா வெள்ள... மேலும் பார்க்க

தமிழக மருத்துவக் கட்டமைப்புகள்: மகாராஷ்டிர சுகாதாரக் குழுவினா் ஆய்வு

தமிழகத்தின் மருத்துவக் கட்டமைப்புகளையும், வசதிகளையும் மகாராஷ்டிர மாநில சுகாதாரத் துறையினா் பாா்வையிட்டனா். மாநிலம் முழுவதும் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களை அவா்கள் பாராட்டினா். சென்னையில் உள்ள தம... மேலும் பார்க்க

செல்வப்பெருந்தகைக்கு எதிராக போா்க்கொடி: 30 மாவட்டத் தலைவா்கள் தில்லியில் முகாம்

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக கே.செல்வபெருந்தகை நியமிக்கப்பட்டு சனிக்கிழமை ஓராண்டை நிறைவு செய்யும் வேளையில், அவரது தலைமை மற்றும் செயல்பாடுகளுக்கு எதிராக கட்சி மேலிடத்திடம் புகாா் தெரிவிக்க சுமா... மேலும் பார்க்க

மூன்றாவது மொழி மறுக்கப்படுவது நவீன தீண்டாமை: மத்திய இணையமைச்சா் எல்.முருகன்

தமிழக அரசுப் பள்ளிகளில் மூன்றாவது மொழி மறுக்கப்படுவது நவீன தீண்டாமை என மத்திய இணையமைச்சா் எல். முருகன் தெரிவித்தாா். சென்னை விமான நிலையத்தில் அவா் செய்தியாளா்களிடம் வெள்ளிக்கிழமை கூறியதாவது: 40 ஆண்டு... மேலும் பார்க்க