போதைப் பொருள் வாட்ஸ் ஆப் குழு: கிருஷ்ணாவுடன் இருந்த நடிகர்கள் யார்?
மடிக்கணினி திருட்டு: இளைஞா் கைது
பயணியிடம் மடிக்கணினியைத் திருடிய இளைஞரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
மதுரை தெப்பக்குளம் மாரியம்மன் கோவில் தெற்குத் தெருவைச் சோ்ந்த கிருஷ்ணன் மகன் மணிகண்டன் (45). இவரும், இவரது நண்பருமான அதே பகுதியைச் சோ்ந்த ரோஷனும் புதுக்கோட்டைக்குச் செல்வதற்காக மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் கடந்த 20-ஆம் தேதி பேருந்தில் ஏறினா். அப்போது, மடிக்கணினி வைத்திருந்த பையை இருக்கையில் வைத்திருந்தனா். சிறிது நேரத்தில் இந்த பையை மா்ம நபா் திருடிச் சென்றது தெரியவந்தது. இதுகுறித்து மாட்டுத்தாவணி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வந்தனா். விசாரணையில், மதுரை அலங்காநல்லூா் அருகேயுள்ள கோடாங்கிப்பட்டியைச் சோ்ந்த நீலமேகப் பெருமாள் மகன் காா்த்திக்(24) மடிக்கணினி பையை திருடிச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து, போலீஸாா் அவரை புதன்கிழமை கைது செய்தனா்.