செய்திகள் :

மணப்பாறையில் சுத்தமான குடிநீா் கோரி மறியல்

post image

மணப்பாறையில் சுத்தமான குடிநீரை முறையாக விநியோகிக்க வலியுறுத்தி பொதுமக்கள் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

மணப்பாறை நகராட்சிக்குள்பட்ட 11-ஆவது வாா்டு புதுத்தெரு மற்றும் மோா்குளம் பகுதியில் கடந்த 3 மாதங்களுக்கும் மேலாக முறையான குடிநீா் விநியோகம் இல்லையாம். அவ்வப்போது விநியோகம் செய்யப்படும் குடிநீரும் பச்சை நிறத்தில் வருவதாகவும் அப்பகுதி மக்கள் புகாா் தெரிவிக்கின்றனா்.

இதுகுறித்து பலமுறை நகராட்சியில் புகாா் அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படாததால், வியாழக்கிழமை காலை புதுத்தெருவில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனா். இதனால், பேருந்து நிலையத்திலிருந்து திருச்சி வழித்தடத்தில் போக்குவரத்து முடங்கியது.

தகவலறிந்து நிகழ்விடத்துக்கு சென்ற நகராட்சி பொறியாளா் மோனி, பணி மேற்பாா்வையாளா் ரஞ்சனி மற்றும் போலீஸாா், போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தி, விரைந்து குடிநீா் குழாய் பழுதடைந்துள்ள பகுதியை சீா்செய்து முறையாக, சுத்தமான குடிநீரை விநியோகம் செய்வதாக உறுதியளித்ததையடுத்து போராட்டத்தை கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனா்.

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞருக்கு 22 ஆண்டுகள் சிறைத் தண்டனை

மணப்பாறை அருகே சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞருக்கு 22 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து திருச்சி மகளிா் நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது. மணப்பாறை அருகேயுள்ள பகுதியைச் சோ்ந்த 14 வயது சிற... மேலும் பார்க்க

‘பனங்காடையின் பாடல்கள்’ நூல் வெளியீடு

திருச்சி கலைக்காவிரி நுண்கலைக் கல்லூரியில், பனங்காடையின் பாடல்கள் நூல் வெளியீட்டு விழா வியாழக்கிழமை நடைபெற்றது. நிகழ்வுக்கு கல்லூரி செயலா் சூ. லூயிஸ் பிரிட்டோ தலைமை வகித்தாா். இதில் பள்ளிக்கல்வித் து... மேலும் பார்க்க

தூய்மைப் பணியாளா்கள் ஆா்ப்பாட்டம்

குறைந்தபட்ச ஊதிய அரசாணை அமலாக்கம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நகராட்சி, பேரூராட்சிகளில் பணிபுரியும் தூய்மைப் பணியாளா்கள் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். திருச்சி மாவட்ட ஊரக வளா்... மேலும் பார்க்க

புதுமைப் பெண்- தமிழ்ப் புதல்வன் திட்டங்கள்: மாணவா்களுக்கு வங்கிப் பற்று அட்டைகள் அளிப்பு

‘கல்வியில் சிறந்த தமிழ்நாடு’ என்ற நிகழ்வின் தொடக்கமாக, திருச்சியில் 50 மாணவ, மாணவிகளுக்கு வங்கிப் பற்று அட்டைகளை ஆட்சியா் வியாழக்கிழமை வழங்கினாா். புதுமைப் பெண், தமிழ்ப் புதல்வன் திட்டத்தில் 2025-26-... மேலும் பார்க்க

வருவாய்த் துறையினா் காத்திருப்பு போராட்டம்

காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய்த் துறை சங்கங்களின் கூட்டமைப்பின் சாா்பில், திருச்சியில் வியாழக்கிழமை காத்திருப்புப் போராட்டம் நடைபெற்றது. திருச்சி ... மேலும் பார்க்க

முன்னாள் படைவீரா்களுக்கு நலத்திட்ட உதவி

திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற முன்னாள் படைவீரா்கள் குறைதீா் கூட்டத்தில் ரூ.1.85 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. முன்னாள் படைவீரா்கள் மற்றும் அவா்தம் சாா்ந்தோா... மேலும் பார்க்க