சபரிமலையில் விமான நிலையம்: திங்கள்கிழமை சர்வே பணிகள் ஆரம்பம்!
மணப்பாறை, வையம்பட்டியில் நாளை மக்களுடன் முதல்வா் திட்ட முகாம்கள்
திருச்சி மாவட்டத்தில் மக்களுடன் முதல்வா் திட்ட முகாம் மணப்பாறை, வையப்பட்டி பகுதிகளில் வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ளது.
மணப்பாறையில் கருப்பூா், நல்லபொன்னம்பட்டியில் பெருமாள் கோயில் அருகேயுள்ள மானாங்குன்றம் பகுதியிலும், பொய்கைப்பட்டி, சங்கிலியப்பட்டி சமுதாயக்கூடம் அருகிலும் முகாம் நடைபெறுகிறது.
வையம்பட்டி பகுதியில் அமையபுரம் கிராமத்தில் சமுதாயக்கூடத்திலும், முகவனூா் பாம்பாட்டிபட்டியில் பாம்பாலம்மன் கோயில் திடலிலும், பழைய கோட்டையில் அனுக்காநத்தம் மாரியம்மன் கோயில் அருகிலும் முகாம்கள் காலை 10 மணிமுதல் மதியம் 4 மணி வரை நடைபெறவுள்ளன. இந்த முகாமில் பொதுமக்கள் கலந்து கொண்டு தங்கள் கோரிக்கைகளை உரிய ஆவணங்களுடன் விண்ணப்பித்து பயன்பெறலாம் என ஆட்சியரக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.