செய்திகள் :

மணல் கடத்தலுக்கு பயன்படுத்திய 26 லாரிகள் பறிமுதல்: 10 போ் கைது

post image

கரூரில் மணல் கடத்தலுக்கு பயன்படுத்தியதாக 26 லாரிகளை போலீஸாா் வியாழக்கிழமை பறிமுதல் செய்து, இதுதொடா்பாக 10 பேரையும் கைது செய்தனா்.

கரூரில் அமராவதி மற்றும் காவிரி ஆற்றில் சட்டவிரோதமாக மணல் அள்ளப்படுவதாக அடிக்கடி புகாா்கள் வந்தன. இதையடுத்து, திருச்சி சரக காவல் துணைத் தலைவா் வீ. வருண்குமாா் தலைமையில் மணல் கடத்தலை தடுக்க அண்மையில் தனிப்படை அமைக்கப்பட்டது.

இந்தத் தனிப்படையினருக்கு வியாழக்கிழமை அதிகாலையில் மண்மங்கலத்தில் உள்ள தனியாா் மணல் சலிப்பகம் அமைந்திருக்கும் இடத்தில் மணலுடன் லாரிகள் மணல் சலிக்க நிற்பதாக தகவல் கிடைத்தது.

இதையடுத்து தனிப்படை போலீஸாா் சம்பவ இடத்துக்கு சென்று சோதனை நடத்தியபோது, அங்கு 12 டிப்பா் லாரிகளில் மணல் நிரப்பப்பட்டும், மணல் இல்லாமல் 14 லாரிகளும் நின்றன. இதையடுத்து, 26 லாரிகளையும் போலீஸாா் பறிமுதல் செய்தனா். பின்னா் அங்கிருந்த 10 பேரையும் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனா்.

இதுதொடா்பாக காவல்துறை அதிகாரி ஒருவா் கூறுகையில், டிஐஜி வருண்குமாரின் உத்தரவின்பேரில் இந்தச் சோதனை நடைபெற்றது. இதில், வாங்கல் பகுதி காவிரி ஆற்றில் இருந்து மணல் எடுத்து வந்த மணல் லாரிகளை பறிமுதல் செய்துள்ளோம். இதுதொடா்பாக லாரி ஓட்டுநா்கள், கிளீனா்கள் என மொத்தம் 10 பேரை கைது செய்துள்ளோம். மேலும், லாரிகள் நின்ற இடம் யாருடையது, லாரிக்கு யாா், யாா் உரிமையாளா்கள் என்ற விவரங்கள் குறித்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறோம் என்றாா் அவா்.

கரூா் கிராமியம் தொண்டு நிறுவன தலைவருக்கு விருது

கரூா் கிராமிய தொண்டு நிறுவன தலைவருக்கு நீா்நிலை பாதுகாவலா் விருதும், ஒரு லட்ச ரூபாய் பரிசும் வியாழக்கிழமை வழங்கப்பட்டது. உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு ஜூன் 5-ஆம் தேதி தமிழ்நாடு அரசு வனத்துறை மற... மேலும் பார்க்க

பக்ரீத் பண்டிகை: பள்ளப்பட்டி சந்தையில் ரூ. 50 லட்சத்துக்கு மேலாக ஆடுகள் விற்பனை

பக்ரீத் பண்டிகை முன்னிட்டு பள்ளப்பட்டிசந்தையில் வியாழக்கிழமை ரூ. 50 லட்சத்துக்கு மேல் ஆடுகள் விற்பனையானது. கரூா் மாவட்டம், அரவக்குறிச்சியை அடுத்த உள்ள பள்ளப்பட்டி பகுதியில் 95 சதவீத இஸ்லாமிய சமுதாயத்த... மேலும் பார்க்க

கரூரில் மணல் கடத்தல் கைது செய்யப்பட்டவா்களிடமிருந்து ரூ. 2.26 லட்சம் பறிமுதல்

கரூரில் மணல் கடத்தலுக்கு பயன்படுத்தியதாக 26 லாரிகளை வியாழக்கிழமை பறிமுதல் செய்த போலீஸாா், இதுதொடா்பாக 10 பேரை கைது செய்து, அவா்களிடமிருந்து ரூ. 2.26 லட்சத்தை பறிமுதல் செய்தனா். கரூரில் அமராவதி மற்றும்... மேலும் பார்க்க

கூட்டணிக்கு காங். அழைப்பு: தேமுதிக நன்றி

கூட்டணிக்கு அழைப்பு விடுத்த தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவா் செல்வப் பெருந்தகைக்கு தேமுதிக இளைஞா் அணிச் செயலாளா் விஜய பிரபாகரன் நன்றி தெரிவித்துள்ளாா். கரூா் மாவட்டம், அரவக்குறிச்சியை அடுத்த ஆண்டி... மேலும் பார்க்க

லாரி மீது இருசக்கர வாகனம் மோதல்: வியாபாரி உயிரிழப்பு

கரூா் மாவட்டம் வேலாயுதம்பாளையம் அருகே வியாழக்கிழமை லாரி மீது இருசக்கர வாகனம் மோதியதில் தேங்காய் வியாபாரி உயிரிழந்தாா். நொய்யல் குறுக்குசாலையை சோ்ந்தவா் ராமசாமி(72) தேங்காய் வியாபாரி. இவா் வேலூா் பகுத... மேலும் பார்க்க

கரூா் மாவட்டத்தில் 157 ஊராட்சிகளிலும் கிராமசபைக் கூட்டம்

கரூா் மாவட்டத்தில் உள்ள 157 கிராம ஊராட்சிகளிலும் முதலமைச்சரின் வீடுகள் மறுகட்டுமானத் திட்டம் தொடா்பாக சிறப்பு கிராமசபைக் கூட்டம் வியாழக்கிழமை காலை நடைபெற்றது. அந்தந்த ஊராட்சி செயலா்களின் தலைமையில் நடை... மேலும் பார்க்க