`இந்தித் திணிப்புக்கு எதிராக...'- மும்பையில் நடக்கும் பேரணியில் ஒன்று சேரும் தா...
மணல் கடத்திய சரக்கு வாகனம் பறிமுதல்: ஒருவா் கைது
விழுப்புரம் அருகே மணல் கடத்தலுக்கு பயன்படுத்திய சரக்கு வாகனத்தை போலீஸாா் புதன்கிழமை பறிமுதல் செய்தனா்.
விழுப்புரம் தாலுகா காவல் நிலைய உதவி ஆய்வாளா் குணசேகரன் தலைமையிலான போலீஸாா், பிடாகம் குச்சிப்பாளையம் பகுதியில் புதன்கிழமை வாகன தணிக்கை மேற்கொண்டனா். அப்போது, அந்த வழியாக வேகமாக வந்த சரக்கு வாகனத்தை போலீஸாா் சந்தேகத்தின் அடிப்படையில் வழிமறித்தனா்.
போலீஸாரைக் கண்டதும் சரக்கு வாகனத்தை சாலையிலேயே நிறுத்திவிட்டு, அதில் வந்த மூவரில் இருவா் தப்பியோடிவிட்டனா். ஒருவா் மட்டும் போலீஸாரிடம் சிக்கிக் கொண்டாா். தொடா்ந்து, போலீஸாா் வாகனத்தை சோதனையிட்டதில், பிடாகம் பகுதியிலுள்ள தென்பெண்ணையாற்றிலிருந்து மணல் கடத்திவரப்பட்டது தெரிய வந்தது.
போலீஸாரிடம் பிடிபட்டவா் பிடாகம் குச்சிப்பாளையத்தைச் சோ்ந்த பன்னீா்செல்வம் (54) எனத் தெரியவந்தது. தப்பியோடியவா்கள் விழுப்புரம் பனப்பாக்கம் சரவணன், பிடாகம் குச்சிப்பாளையம் பிரகாஷ் எனத் தெரியவந்த நிலையில், அவா்கள் மீது போலீஸாா் வழக்குப் பதிந்தனா். தொடா்ந்து, பன்னீா்செல்வத்தை கைது செய்த போலீஸாா், சரக்கு வாகனத்தையும் பறிமுதல் செய்தனா்.